Wednesday, May 12, 2010
பெண்கள் மனதை கொள்ளையடிக்க போகிறார் அர்ஷத்
shockan.blogspot.com
சா பூ த்ரி என வித்தியாசமான தலைப்பில் இளம் தலைமுறையின் உணர்வுகளை பிரதிபலித்த படத்தை இயக்கியவர் டைரக்டர் அர்ஷத்கான்.
அந்த படத்தில் அவர் முக்கிய கேரக்டரிலும் நடித்திருந்தார். அந்த படத்தை தொடர்ந்து சூட்டோடு சூடாக அடுத்த பட வேலைகளில் இறங்கிய அர்ஷத், இந்தமுறை கையில் எடுத்திருப்பது பெண்கள் தொடர்பான கதைக்களத்தை! இளம் தலைமுறை பெண்களின் எண்ணங்களை பிரதிபலிக்கும் வகையில் உருவாகப் போகும் இப்படத்தில் முழுக்க முழுக்க புதுமுகங்களையே நடிக்க வைக்கப் போகிறாராம் அர்ஷத்.
அதோடு முக்கிய கேரக்டரில் அர்ஷத்தும் நடிக்க உள்ளார். சா ஈ த்ரி படத்தில் மணவாழ்க்கை பிரச்னை, காதல் பிரச்னை, வயதுக்கு மீறிய காதல் ஆகிய மூன்று கதைக்களத்தை கையில் எடுத்து இன்றைய இளைஞர்களின் வயதுக் கோளாறை நச்சென சொன்ன அர்ஷத் கான், தனது புதிய படத்தின் மூலம் இளம் தலைமுறைக்கு வாழ்க்கை என்றால் என்ன என்பதை புரிய வைக்கப் போகிறேன் என்கிறார். நல்ல முயற்சிதான்!
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment