Sunday, May 2, 2010

கவர்ச்சிக் காட்டாமல் நடிச்சு பேர் வாங்குவேன்!


shockan.blogspot.com
"உனக்காக என் காதல்' என்றொரு படம் உருவாகி வருகிறது. ஜெய்குமார் கதை- திரைக்கதை- வசனம் எழுதி இயக்குகிறார். தயாரிப்பாளரும் இவரே! இந்தப் படத்தில் ஷ்ரதா என்ற பெண்ணை மும்பையிலிருந்து இறக்கு மதி செய்திருக்கிறார்கள். சிம்ரன் வீட்டு பக்கத்தில்தான் ஷ்ரதா வீடும் இருக்கிற தாம். அதனால் நல்ல பழக்கம். நொடிக் கொரு தடவை சிம்ரன் அக்கா சிம்ரன் அக்கா என்று சிம்ரன் புகழ் பாடுகிறார்.

""நான் மும்பையில் வளர்ந்த பொண்ணுனாலும் பூர்வீகம் கேரளாதான். சின்ன வயசுல இருந்தே நடிக்கணும்ங் கறது என் ஆசை. ஆனா முதல்ல படிப்பை முடி. அப்புறம் நடிக்கலாம்னு அப்பா சொல்லிட்டார். அதனால டிகிரி வரை படிச்சு முடிச்சிட்டேன்.

சிம்ரன் அக்காகிட்ட அட்வைஸ் கேட்டேன். "முதல்ல டான்ஸ் கத்துக்கோ. நடிப்புக்கு ரொம்ப ஹெல்ப்புல்லா இருக்கும்னாங்க. டான்ஸ் கத்துக்கிட்டேன்.

நீ ரொம்ப ஹோம்லியா இருக்கே. அதனால தமிழ் படங்கள்ல நடிக்க முயற்சி பண்ணுன்னாங்க. அப்போதான் "உனக்காக என் காதல்' பட வாய்ப்பு வந்தது. ஜெய்குமார் சார் கதை சொன்னார். கேட்டதும் நம்ம என்ட்ரிக்கு இதுதான் ஏத்த கதைன்னு முடிவு பண்ணி ஒப்புக் கொண்டேன்.

கல்லூரிப் பின்னணியில் முக்கோணக் காதல் கதை. சில வருடங்களுக்குமுன் பரபரப் பாகப் பேசப்பட்ட ஒரு உண்மைச் சம்பவமும் அதோடு இயக்குநர் ஜெய்குமாரின் வாழ்க்கை யும் சம்பந்தப்பட்ட கதை என்பதால் மிகச் சிறப்பாக இயக்கி இருக்கிறார்'' என்கிறார் ஷ்ரதா.

""மும்பைப் பொண்ணுங்கன்னா கவர்ச்சியை நம்புறவங்க என்று நினைக்கிறாங்க. ஆனா நான் நடிச்சு பேர் வாங்கவே ஆசைப்பட றேன்'' என்று லட்சியம் பேசுகிறார் ஷ்ரதா.

லட்சியம் எவ்வளவு நாளைக்குன்னு பாத்துட்டா போச்சு!

No comments:

Post a Comment