Monday, May 3, 2010

இதுதான் ராவணா... கசிந்தது முழு கதையும்!


shockan.blogspot.com
அலட்டிக் கொள்ளாத மணிரத்னத்திள் அல்டிமேட்டான ராவணா கதை இப்போது லேசாக கசிய ஆரம்பித்திருக்கிறது. ராமாயணத்தின் தழுவல் என்றெல்லாம் சொல்லப்பட்டாலும், அதை நேரடியாக அர்த்தம் பண்ணிக் கொள்ள முடியாது. ஏனென்றால் திரைக்கதை அப்படி!.

போலீஸ் தேடுகிற குற்றவாளிதான் ஹீரோ விக்ரம். இவருக்கு வைக்கப்பட்ட குறியில் இவரது தங்கை பிரியாமணியை கொன்றுவிடுகிறது போலீஸ். இந்த படுபாதக செயலை செய்த போலீஸ் அதிகாரி ப்ருத்திவிராஜின் மனைவியான ஐஸ்வர்யாவை கடத்திக் கொண்டு காட்டுக்குள் பதுங்கிவிடுகிறார் விக்ரம். காடுமேடெல்லாம் சுற்றித்திரியும் ஐஸ் மீண்டும் போலீஸ் கைக்கு கிடைக்கும் போது சந்தோஷப்பட வேண்டிய ப்ருத்விராஜ், நீயும் அவனும் ஒண்ணா சுத்தினீங்க. நீ சுத்தமா இருக்கியான்னு தெரியணும் என்று கூற, ஐஸ்சின் அதிர்ச்சியும் முடிவும் என்ன என்பதுதான் ராவணாவாம்.

மும்பையில் ஆடியோவை வெளியிட்ட மணிரத்னம், சென்னையில் இந்த விழாவை எப்போது நடத்துவாரோ என்ற ஆவல் எழுந்திருக்கிறது ரசிகர்களிடம். சீக்கிரமா விழாவை வைங்க. கோடையில ஐஸ் கட்டி மழை பொழிஞ்சா எப்படியிருக்கும்?!

No comments:

Post a Comment