Sunday, June 6, 2010

திமுக கூட்டணி - ஐவர் குழு அமைப்பு - 8ம் தேதி முடிவெடுக்கிறது பாமக


shockan.blogspot.com

கூட்டணியில் மீண்டும் சேர்த்துக் கொள்ள திமுக விடுத்துள்ள அழைப்பையும், அதற்கு அது விதித்துள்ள இக்கட்டான நிபந்தனை குறித்தும் முடிவெடுக்க பாமக தனது செயற்குழுக் கூட்டத்தை கூட்டியுள்ளது. 8ம் தேதி நடைபெறும் கூட்டத்தில் இதுகுறித்து முடிவெடுக்கப்படவுள்ளது.

மீண்டும் கூட்டணிக்கு பாமக வரலாம். ஆனால் இப்போதைக்கு ராஜ்யசபா சீட் தரப்பட மாட்டாது. 2013ல் தான் சீட் தருவோம். மேலும், கூட்டணியிலிருந்து திடீரென பாமக விலகக் கூடாது என்று திமுக உயர் நிலை செயல் திட்டக்குழுக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

இதனால் தடுமாறிப் போயுள்ள பாமக திமுகவுக்கு என்ன பதிலைச் சொல்வது என்று தெரியாமல் பெரும் குழப்பத்தில் மூழ்கியுள்ளது.

இதுதொடர்பாக ஏற்கனவே முதல்வர் கருணாநிதியை பாமக எம்.எல்.ஏக்கள் சந்தித்துப் பேசினர்.ஆனாலும் உடன்பாடு எதுவும் எட்டப்படவில்லை. மறுபடியும் பாமக எம்.எல்.ஏக்கள் முதல்வரை சந்திப்பார்கள் என்று பாமக தலைவர் ஜி.கே.மணி கூறினார்.

இந்த நிலையில் இதுகுறித்து முடிவெடுக்க பாமக செயற்குழு வருகிற 8ம் தேதி கூட்டப்பட்டுள்ளது. அப்போது கூட்டணி குறித்து ஆலோசித்து முடிவெடுக்கவுள்ளனர்.

இதற்கிடையே, இந்த விவகாரம் குறித்து திமுகவுடன் பேச்சு நடத்த ஜி.கே.மணி தலைமையில் எம்.எல்.ஏ.க்கள் வேல்முருகன், தமிழரசு, திருக்கச்சூர் ஆறுமுகம், முன்னாள் மத்திய மந்திரி வேலு ஆகியோரை கொண்ட ஐவர் குழுவையும் பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நியமித்துள்ளார்.

No comments:

Post a Comment