Monday, June 7, 2010

மூன்று மனைவி! ஏட்டய்யாவின் விளையாட்டு!


shockan.blogspot.com

முத்துப் பேட்டை ஏட்டையா இளங்கோ, முதலில் அத்தை மகள் மஞ்சுளாவை மணந்தார். ஒரு குழந்தை பிறந்ததும் மஞ்சுளாவை விட்டுவிட்டு, வேல்குடி சுதாவை மணந்தார். சுதா 8 மாத கர்ப்பவதியாக இருக்கும்போது, அவரை விட்டுவிட்டு, ஏட்டம்மா வனிதாவுடன் சேர்ந்து வாழ்ந்தார். இரண்டு வருடம் இந்த ஏட்டையாவுடன் வாழ்ந்த ஏட்டம்மா... இப் போது ஏட்டையா மீது புகார் எழுதி திருவாரூர் எஸ்.பி.யிடம் கொடுத்திருக்கிறார்.

திருவாரூர் மாவட்டம் தொழுவூர் இதுதான் வனிதா வின் சொந்த ஊர். 1998-ம் ஆண்டு போலீஸ் டிரைனிங்கில் இளங்கோவை சந்தித்தார். டிரை னிங் முடிந்து அவரவர் வேலைக்குப் போய் விட்டார்கள். 2007-ல் ஒரு பந்தோபஸ்து டூட் டியில் இருவரும் சந்தித்துக் கொண்டார் கள்.

""அப்ப எதார்த்தமாகத்தான் இளங் கோவைப் பார்த்தேன். ரொம்பச் சோகமா, "வனிதா... வனிதா... வாழ்க்கையே சோகமாயிடுச்சு... என் முதல் மனைவி மஞ்சுளாவை விவாகரத்து பண் ணிட்டேன். இரண்டாவது மனைவி சுதாவும் என் னோட வாழப் பிடிக்கலைனு கோர்ட்ல கேஸ் போட் டிருக்கிறாள். அனாதையா நிக்கிறேன்... நாம ரெண்டு பேரும் கட்டிக்கலாமா'னு கேட்டார். "சரி'ன்னேன். கோயில்ல வச்சு தாலி கட்டினார். 2 குழந்தை பிறந்தது. நான் திருச்சியில இருக்கிறதால முத்துப்பேட்டையில இருந்து வாராவாரம் வர்றவர் கொஞ்சநாளா வரலை. ஏன்னு கேட்டப்ப... "ரெண்டாவது மனை விக்கு 5 லட்சம் கொடுக்கணும்... பணத்துக்காக அலை யுறேன் ' என்றார். அப்புறம்தான் தெரிந்தது... முதல் மனைவிக்கு இரண்டாவது மனைவியிடம் பணம் வாங்கிக் கொடுத்து செட்டில் செய்திருக்கிறார். இரண் டாவது மனைவிக்கு என்னிடம் வாங்கிக் கொடுக்க முயற்சி செய்றார். சமீபத்தில மன்னார்குடியில தனியார் ஆஸ்பத்திரியில இருக்கிற ஒரு நர்ஸ் எனக்கு போன் பண்ணி, "ஏட்டு இளங்கோவை கல்யாணம் பண்ணிக்கப் போறேன்... நீ ஒதுங்கிக்க'னு பேசினாள்... அதான் என்னைப் போல இனி யாரும் ஏமாறக் கூடாது இல்லையா... அதான் புகார் கொடுத்திருக் கிறேன்!'' என்றார் ஏட்டம்மா வனிதா.

விசாரணைக்காக பட்டுக்கோட்டை மகளிர் காவல் நிலையத்திற்கு வந்திருந்த ஏட்டு இளங் கோவை நெருங்கினோம். கேமராவைப் பார்த்ததும் ஓடி ஒளிந்த அவர், தானா கவே நம்மை தொடர்பு கொண்டார்.

""ஒருத்திக்கு மூணுபேரைக் கட்டி... கடனுக்கு மேல கடனாகி... தற்கொலை எண் ணத்தோட வாழ்றேங்க. முதல்ல அத்தை மகளைக் கட்டினேன். அவள், கிறிஸ்துவ மதத்துக்கு மாறினாள். என்னையும் மாறச் சொல்லி கட்டாயப்படுத்தினாள். எனக்குப் பிடிக்கலை. எங்க குடும்பத்தினர் தான் எங் களைப் பிரிச்சாங்க. அப்புறம் வேல்குடி சுதா... அவள் பிரக்னண்டா இருக்கும்போது தான் வனிதாவை சந்தித்தேன். தனக்கு வேளாங் கண்ணியில கல்யாணமாகி ஒரு குழந்தை பிறந்ததும் புருஷன் ஓடிவிட்டதாகவும்... இப்ப தனியா இருப்பதாகவும் அழுதாள். நெருங்கிப் பழகிவிட்டோம். அவளோட 2 குழந்தைகள்ல ஒண்ணு எனக்குப் பிறந்தது. என் வீட்டை அவள் பேர்ல எழுதிக் கேட்டாள். கொடுக்கலை. புகார் கொடுத்து விட்டாள். ரொம்ப டார்ச்சர் செஞ்சா தற்கொலைதான் செய்துக்கணும்!'' -சொல்லிவிட்டு லைனை கட் செய்தார் இளங்கோ.

பட்டுக்கோட்டை மகளிர் காக்கிகளோ ""விசாரித்துக் கொண்டிருக்கிறோம், எஸ்.பி. முடிவெடுப்பார்!'' என்கிறார்கள்.

No comments:

Post a Comment