முளைத்து மூன்று இலை விடுவதற்குள் என்று ஒரு பழமொழி உண்டு. அது அப்படியே 'களவாணி' ஓவியாவுக்கு பொருந்தும்.
கேரளாவிலிருந்து தமிழுக்கு வந்த சமீபத்திய 'கேங்'கில் ஓவியாவும் ஒருவர். வந்த வேகத்தில் அலம்பலை ஆரம்பித்து விட்டாராம் ஓவியா.
முதல் படமான களவாணி சூப்பர் ஹிட்டாகி விட்டதால் எல்லாம் என்னால்தான் என்ற ரேஞ்சுக்கு பார்க்க ஆரம்பித்துள்ளாராம்.
இந்தப் படத்துக்கு முன்பே ராசு மதுரவன் இயக்கத்தில் முத்துக்கு முத்தாக படத்தில் நடிக்க ஒப்புக் கொண்டு ரூ. 1 லட்சம் சம்பளம் பேசி, ஒரு அமவுன்ட்டை அட்வான்ஸாக வாங்கிப் போட்டிருந்தார் ஓவியா. இப்போது களவாணி மெகா ஹிட்டாகியிருப்பதால் டக்கென சம்பளத்தை ரூ. 15 லட்சமாக ஏத்தி விட்டாராம்.
கடுப்பாகிப் போன ராசு மதுரவன், மண்ணை நம்பிப் படம் எடுக்கும் என்னிடமே இப்படி வீம்பா என்று டென்ஷனாகி 'ஆணியே பிடுங்க வேண்டாம்' என்று ஓவியாவை படத்திலிருந்தே நீக்கி விட்டாராம். அட்வான்ஸையும் வாங்கி விட்டாராம்.
சமீப காலமாக கதையை நம்பி மட்டுமே நல்ல படங்கள் வருகின்றன. ஓடவும் செய்கின்றன. ஆனாலும் இப்படிப்பட்ட சில நாயகிகள் கிளம்புவதை ஆரம்பத்திலேயே 'கட்' செய்ய வேண்டும் என்று ராசு மதுரவன் தரப்பு கோபத்துடன் கூறுகிறது. தற்போது ஓவியாவுக்கு பேசிய சம்பளத்தில் மூன்று நாயகிகளை புக் செய்து படத்தையும் தடபுடலாக தொடங்கி விட்டார்களாம்.
No comments:
Post a Comment