Monday, November 30, 2009

மன்சூர் அலிகான் வழக்கு-நடிகர் சிட்டிபாபுவுக்கு பிடிவாரண்ட்

டிகர் மன்சூர் அலிகான் தொடர்ந்த செக் மோசடி வழக்கில், காமெடி நடிகர் சிட்டிபாபுவுக்கு சென்னை கோர்ட் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது.மன்சூர் அலிகான் சென்னை எழும்பூர் கோர்ட்டில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார்.அதில், திரைப்படம் தயாரிப்பதற்காக சிட்டிபாபு என்கிற சாஜித் அதீப் கடந்த 22.12.2008 அன்று என்னிடம் ரூ. 6 லட்சம் வாங்கினார். இந்த தொகையை பல்வேறு தவணைகளாக என்னிடம் பெற்றுக் கொண்டார்.
இந்த பணத்தை அவர் திருப்பி தரவில்லை.இதே போல அவரது மனைவி ஜெரீனா என்பவரும் என்னிடம் ரூ. 7 லட்சத்து 17 ஆயிரம் கடன் வாங்கினார். இவரும் பணத்தை திருப்பித் தரவில்லை.

அதற்கு பதில் காசோலைகளை இருவரும் தனித்தனியாக கொடுத்தனர். ஆனால் அவர்களது வங்கி கணக்கில் செலுத்திய போது பணம் இல்லாமல் திரும்பி வந்தது. எனவே அவர்கள் மீது செக் மோசடி சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார் மன்சூர்.இந்த மனு எழும்பூர் 14வது கோர்ட் நீதிபதி காஞ்சனா முன்பு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது சிட்டிபாபுவும், ஜெரீனாவும் ஆஜராகவில்லை.இதையடுத்து இருவரையும் கைது செய்து ஆஜர்படுத்துமாறு கூறி மாஜிஸ்திரேட் காஞ்சனா பிடிவாரண்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

சிட்டிபாபு பல்வேறு டிவி நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருபவர். திரைப்படங்களிலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

அரசு- பொன்சேகா மோதலால் வெளியே வரும் இரகசியங்கள்

ஜெனரல் சரத் பொன்சேகா தனக்குரிய பாதுகாப்பு வசதிகளை அரசாங்கம் குறைத்து விட்டதாகவும், அதனால் தனக்குப் பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டிருப்பதாகவும் புலம்பிக் கொண்டிருக்கிறார். இன்னொரு புறத்தில் அரசாங்கமோ இவர் சட்டவிரோதமான முறையில் அதிகளவு படையினரையும் வாகனங்களை வைத்திருப்பதாக குற்றம்சாட்டிக் கொண்டிருக்கிறது. இரண்டு தரப்புகளும் சொல்லும் தகவல்களிலும் நிறையவே முரண்பாடுகள் இருப்பதையும், அரசியல் உள்நோக்கங்கள் இருப்பதையும் எளிதாகவே புரிந்து கொள்ள முடிகிறது.
ஜெனரல் சரத் பொன்சேகா இராணுவத் தளபதியாக இருந்தபோது- இராணுவ நடைமுறைகளுக்கு மாறாக எதையெதையெல்லாம் செய்தாரோ- அவையெல்லாம் இப்போது அவருக்கு எதிராகவே திரும்பத் தொடங்கியிருக்கிறது. இப்படியான ஒரு நிலை வரும் என்று அவர் கனவில் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார். புலிகளுக்கு எதிரான போரில் பெற்ற வெற்றி தனக்கேயுரியது என்று கூறிவந்த அவரது வாயை அடைக்க அரசாங்கம் பெரும் முயற்சி செய்து வருகிறது. சிறந்த அரசியல் தலைமைத்துவத்தினால் தான் அதைச் சாதிக்க முடிந்ததாவும், அரசாங்கம் பிரசாரம் செய்கிறது. அதுமட்டுமன்றி இராணுவத் தளபதியை வைத்தே ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான பிரசாரங்களையும் முடுக்கி விட்டிருக்கிறது.
இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் உதய நாணயக்கார, முன்னர் இராணுவப் பேச்சாளர்களாக இருந்த மேஜர் ஜெனரல் தயா இரத்னாயக்க, மேஜர் ஜெனரல் பிரசாத் சமரசிங்க போன்றோரும்; ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு எதிரான கருத்துகளை வெளியிட்டு வருகின்றனர். போர்முனையில் சிறப்பாகச் செயற்படும் அதிகாரிகளுக்கே பதவி உயர்வு என்று கூறி ஜெனரல ஜெனரல் சரத் பொன்சேகா சேவைமூப்பு வரிசையில் முன்னால் இருந்தவர்களைப் பின்தள்ளினார் அல்லது ஒதுக்கினார். அவரது அதே பாணியில் இப்போதைய இராணுவத் தளபதி லெப்.ஜெனரல் ஜெகத் ஜெயசூரியவும் செயற்பட ஆரம்பித்துள்ளார்.
இது ஜெனரல் சரத் பொன்சேகாவுடன் நெருக்கமாகச் செயற்பட்ட அதிகாரிகளுக்குப் பெரும் சங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது. ஜெனரல் சரத் பொன்சேகாவின் கீழ் பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய 9 அதிகாரிகள் உள்ளிட்ட 47 இராணுவ உயரதிகாரிகள் இராணுவத் தளபதியினால் இடமாற்றம் செய்யப்பட்டனர். இது வழக்கமானதொன்று அல்ல. ஜெனரல் சரத் பொன்சேகா விவகாரத்தின் எதிரொலியாக இந்த மாற்றங்கள் நிகழ்ந்ததாகக் கருதப்படுகிறது.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானியின் தலைமையகத்தின் விசேட நடவடிக்கைப் பணிப்பாளராக இருந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க வரணி 52வது டிவிசனின் பொதுக் கட்டளை அதிகாரியாக இடமாற்றம் செய்யப்பட்டார். விசேட படைப் பிரிவைச் சேர்ந்த மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க, புலிகளுக்கு எதிரான இறுதிப் போரின் போது- இராணுவத் தலைமையக திட்டப் பணிப்பாளராகப் பணியாற்றியவர். ஜெனரல் சரத் பொன்சேகாவுக்கு நெருக்கமானவர்.
பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி அலுவலகத்தில் பணியாற்றிய- பயிற்சி மற்றும் தந்திரோபாய வகுப்பு பணிப்பாளர் பிரிகேடியர் மைத்ரி டயஸ் வன்னிப் படைத் தலைமையகத்துக்கும்- ஜெனரல் சரத் பொன்சேகாவின் இணைப்புச் செயலாளராக இருந்த பிரிகேடியர் விமல் டயஸ் முல்லைத்தீவு படைத் தலைமையக நிர்வாகப் பிரிவுக்கும்- நடவடிக்கைப் பணிப்பாளர் பிரிகேடியர் டம்பத் பெர்னான்டோ மாதுறு ஓயா இராணுவப் பயிற்சி முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- சிரேஷ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரி பிரிகேடியர் குலதுங்க திருகோணமலை இராணுவ இடைத்தங்கல் முகாமின் கட்டளை அதிகாரியாகவும்- பாதுகாப்பு இணைப்பாதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஜனக மகோற்றி 55வது டிவிசனின் இணைப்பதிகாரியாகவும், போர் உதவியாளராக இருந்த பிரிகேடியர் அத்துல சில்வா அம்பாறை இராணுவ தளபதியாகவும், சிரேஸ்ட பாதுகாப்பு இணைப்பதிகாரியாக இருந்த பிரிகேடியர் ஹெனடிகே புனானை 23-2 பிரிகேட் தளபதியாகவும், கேணல் கபில உடலுப்பொல ஒட்டுசுட்டான் 64வது டிவிசன் நிர்வாக அதிகாரியாகவும்- 59வது டிவிசன் தலைமை அதிகாரியாக இருந்த பிரிகேடியர் துமிந்த கெப்பிடிவலன அம்பாறை இராணுவப் பயிற்சிப் பாடசாலையின் கட்டளைத் தளபதியாகவும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இந்த இடமாற்றங்கள் ஒருபுறத்தில் நடந்து கொண்டிருக்க, தனது பாதுகாப்புக்காக 600 இராணுவத்தினரையும், 10 வாகனங்களைம், 2 குண்டு துளைக்காத வாகனங்களையும் வழங்குமாறு அரசாங்கத்துக்குக் கட்டளையிடுமாறு கோரி ஜெனரல் சரத் பொன்சேகா அடிப்படை உரிமைமீறல் மனுவொன்றை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ளார். ஜனாதிபதிக்கு 2 ஆயிரம் படையினரும், பாதுகாப்பு செயலாளருக்கு 500 படையினரும், இராணுவத் தளபதிக்கு 600 படையினரும், முன்னாள் கடற்படைத் தளபதி வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினரும் பாதுகாப்பு வழங்குகின்றனர். ஆனால தனக்கு 72 படையினர் மட்டுமே பாதுகாப்புக்கு அனுமதிக்கப்பட்டிருப்பதாக தனது மனுவில் கூறியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. தற்போது 62 படையினர் பாதுகாப்புக்காக அனுமதிக்கப்பட்டிருப்பினும் அவர்களில் இருபது பேர் மட்டுமே சுழற்சி முறையில் ஒரே நேரத்தில் கடமையில் இருக்க முடியும். இது தனது பாதுகாப்புக்கு போதுமானதல்ல என்பது அவரது நிலைப்பாடு.
புலிகளுக்கு எதிரான யுத்தத்தில் பெரும் பங்களிப்பை செய்த தனக்கு அச்சுறுத்தல்கள் இருப்பதால் 600 படையினரைப் பாதுகாப்புக்கு அனுமதிக்குமாறு பாதுகாப்புச் செயலாளருக்கு கட்டளையிடுமாறும் உயர்நீதிமன்றிடம் கோரியிருக்கிறார் ஜெனரல் சரத் பொன்சேகா. அதேவேளை அரசாங்கமோ சரத் பொன்சேகா அனுமதிக்கப்பட்டதைவிட அதிகப்படியான படையினரையும் வாகனங்களையும் வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளரைக் கொண்டே சொல்ல வைத்திருக்கிறது. பதவியில் இருந்து விலக முன்னர் ஜெனரல் சரத் பொன்சேகா தனக்கு வழங்கப்பட வேண்டிய பாதுகாப்புத் தொடர்பான கடிதம் ஒன்றை ஜனாதிபதிக்கு அனுப்பியிருந்தார். அதில் கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரி ஒருவர் உள்ளிட்ட 21 கொமாண்டோ படையினர், சிங்க றெஜிமென்ட்டின் ஒரு மேஜர் மற்றும் இரு கப்டன் அல்லது லெப்டினன்ட் தர அதிகாரிகள் உள்ளிட்ட 53 படையினர், 10 சாரதிகள், 5 பெண் படையினர், ஒரு குண்டு துளைக்காத வாகனம், 3 லான்ட்றோவர்கள், ஒரு கனரக வாகனம். ஒரு வான், ஒரு 26 ஆசன பஸ் என்பன தேவை என்று பட்டியலிட்டிருந்தார். அத்துடன் 10 பிஸ்டல்கள், மினியுசி அல்லது எச்கேஎம்பி-5 ரகத் துப்பாக்கிள் 10, ரி56 துப்பாக்கிகள் 72, பத்து வோக்கி ரோக்கிகள் ஒரு தொடர்பாடல் தள இணைப்பு என்பனவும் வழங்கப்பட வேண்டும் என்றும் கோரியிருந்தார் அவர்.பாதுகாப்பு அதிகாரிகளின் பிரதானி பதவியில் இருந்து விலகியதும் ஜெனரல் பொன்சேகாவின் பாதுகாப்பு அணி 25 படையினராகக் குறைக்கப்பட்டது. பின்னர் ஜனாதிபதியின் உத்தரவின் பேரில் அது 72 பேராக அதிகரிக்கப்பட்டது. இதை அவரே ஏற்றுக் கொண்டுள்ளார். ஆனால் 5 பெண் படையினர் தவிர்ந்த 103 படையினரை அவர் தற்போதும் பாதுகாப்புக்காக வைத்திருக்கிறார்- இது சட்டவிரோமானது என்கிறது அரசாங்கம்
4 அதிகாரிகள் உள்ளிட்ட 28 கொமாண்டோக்கள், 3 அதிகாரிகள் உள்ளிட்ட 20 படையினர், 55 பாதுகாப்பு வீரர்கள், சமையற்காரர்கள், சாரதிகள், மருத்துவப் படைப்பிரிவைச் சேர்ந்த 7 படையினர், 3 கார்கள், 7 லான்ட் றோவர்கள், ஒரு டபிள்கப், ஒரு பஸ,; ஒரு அம்புலன்ஸ், 4 வான், 9 மோட்டார் சைக்கிள்கள் என்று 103 படையினரையும் அளவுக்கதிகமான வாகனங்;களையும் சரத் பொன்சேகா வைத்திருப்பதாக இராணுவப் பேச்சாளர் குற்றம்சாட்டியிருக்கிறார். அதேவேளை, முன்;னாள் கடற்படைத் தளபதி அட்மிரல் வசந்த கரன்னகொடவுக்கு 120 படையினர் பாதுகாப்பு வழங்குவதாக சரத் பொன்சேகா கூறிய குற்றச்சாட்டை கடற்படையின் பேச்சாளர் கப்டன் சேனாரத் மறுத்துள்ளார். அடமிரல் வசந்த கரன்னகொடவுக்கு 2 அதிகாரிகள் உள்ளிட்ட 42 கடற்படையினர் பாதுகாப்பு வழங்குவதாகவும், குண்டுதுளைக்காத வாகனம் ஒன்று, டிபென்டர் வாகனங்கள் 4, மோட்டார் சைக்கிள்கள் 4, வான்கள் 4 என்பனவே வழங்கப்பட்டிருப்பதாகவும் அவர் கூறியிருக்கிறார். இப்படி முன்னுக்குப் பின் முரணான தகவல்கள் இரு தரப்பில் இரந்தும வெளியாகி வருகின்றன.
இந்த மோதல்களால் இதுவரை வெளிவராமல் மறைந்திருந்த பல உண்மைகளும் வெளியே வரத் தொடங்கியிருக்கின்றன. கிளிநொச்சிக்கு போவதற்கு சரத் பொன்சேகா அச்சமடைந்திருந்ததாகவும், ஜனாதிபதியே தைரியமூட்டி அவரை அழைத்துச் சென்றதாகவும் பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்த வெளியாகியுள்ள தகவல் சரத் பொன்சேகாவின் ஆளுமையைச் சிறுமைப்படுத்தும் நோக்குடையதாகவே தெரிகிறது. அத்துடன் தான் எப்போதும் தோல்வியடையாத ஒருவர் என்று கூறியிருக்கும் ஜெனரல் சரத் பொன்சேகாவின் காலத்தில் மூன்று தடவைகள் முகமாலையில் படையினர் படுதோல்வி கண்டு 600 படையினரை இழக்க நேரந்ததாகவும பாதுகாப்பு வட்டாரங்களில் இருந்து தகவல்கள் கசிய விடப்பட்டுள்ளன. இவையெல்லாம் போர்க்காலத்தில் நடந்த பல இரகசியங்கள் அம்பலப்படுத்துக்கு வரப் போகின்றன எனபதையே காட்டுகின்றன.
இராணுவத்தில் ஊழல்களை ஒழித்தது தானே என்று கூறிக் கொள்ளும் சரத் பொன்சேகாவே இப்போது அப்படிப்பட்ட ஊழல் குற்றச்சாட்டு ஒன்றை முகம் கொடுக்கக் கூடிய நிலையும் தோன்றி வருகிறது. சரத் பொன்சேகாவின் இரர்ணுவத் தளபதியாக இருந்த போது அமெரிக்காவின் ஒக்லஹோமாவில் பதிவு செய்யப்பட்ட ஹிகோப் என்ற நிறுவனத்தின் ஊடாகப் பெருமளவு ஆயுத தளபாடங்கள் கொள்வனவு செய்யப்பட்டன. இந்த நிறுவனம் சரத் பொன்சேகாவின் மருமகனான திலுன திலகரட்ணவின் பெயரில் பதிவு செய்யப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதையடுத்து இது பற்றிய பூரண விசாரணை ஒன்றுக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
இதில் முறைகேடுகள் நடந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரணைகள் நடக்கப் போகின்றன. ஜனாதிபதித் தேர்தலுக்கு முன்னர் இது இன்னொரு புதிய பிரச்சினையைக் கிளப்பலாம். இப்படியாக இருதரப்பும் மோதிக் கொள்;வது போர்க்களத்தல் மறைக்கபட்ட பல உண்மைகளையும் வெளிச்சத்துக்குக் கொண்டு வரக் கூடும். இந்த உண்மைகள் இரு தரப்புக்குமே நிச்சயம் சாதகமான விளைவுகளைக் கொடுக்காது.

காஞ்சிபுரத்தில் நடனப்பள்ளி... பிஎச்டி படிப்பு... சொர்ணமால்யாவின் மறுபக்கம்

திரையில் துண்டு துக்கடா பிட்டு ரோல்களில் வந்தாலும், இன்னொரு பக்கம் தனது நடனப்பள்ளியில் பிஸியாக இருக்கிறார், முன்பு பரபரப்பாகப் பேசப்பட்ட சொர்ணமால்யா.சன் டிவியின் இளமை புதுமை மூலம் பிரபலமாகி, பின்னர் விஜய் காந்தின் எங்கள் அண்ணாவில் பிரபுதேவா ஜோடியாகி சினிமாவில் ஒரு ரவுண்ட் வந்தவர் சொர்ணமால்யா.
பின்னர் திருமணமாகி, விவாகரத்துமாகியது. இடையில் காஞ்சி மட விவகாரங்களில் பெயர் ஏகத்துக்கும் டேமேஜ் ஆக, அப்போதும் சினிமாதான் கைகொடுத்தது. சில காலம் ஒதுங்கியிருந்தவருக்கு, பிரகாஷ் ராஜ் ஆதரவில் கிடைத்த வாய்ப்புதான் மொழி. அவரது பாத்திரம் பெரிதும் பேசப்பட்டது அந்தப் படத்தில். இப்போது ரேவதி இயக்கும் யாதுமாகி நின்றாய், பாரதிராஜாவின் தெற்கத்திப் பொண்ணு தொடர்களில் நாயகியாக நடித்துக் கொண்டிருக்கிறார்.

கூடவே தனது நடனப்பள்ளியை நடத்தி வருகிறார். சென்னை தவி, காஞ்சிபுரத்திலும் நடனப் பள்ளி நடத்துகிறார் சொர்ணமால்யா. லோக்கலில் இவருக்கு ஏக சப்போர்ட்டாம். இதையெல்லாம் விட இப்போது சொர்ணமால்யா முக்கியமாகக் கருதுவது தனது பிஎச்டி படிப்பைத்தான். கலைத்துறைக்கு உபயோகப்படும் விதத்தில் இந்த பிஎச்டி ஆராய்ச்சிப் படிப்பை மேற்கொண்டுள்ளாராம்.

அடுத்து...?"அடுத்து​ சினிமா டைர​க்ஷன் பண்​ண​வேண்​டும் என்று ஆசை​யி​ருக்​கி​றது. ஆனால் இப்​போது அந்த எண்​ணம் இல்லை. ​ பிஎச்.டி.முடித்​து​விட்​டு​தான் பண்​ண​வேண்​டும் என்று வைராக்​கி​யத்​தில் இருக்​கி​றேன். டாக்​டர் சொர்​ண​மால்யா ஆகி​விட்​டுத்​தான் டைரக்​டர் சொர்​ண​மால்யா ஆவேன்..." என்கிறார்.நல்லாயிருந்தா சரி!

திருவண்ணாமலை கார்த்திகை விழா - பரணி தீபம் ஏற்றப்பட்டது - மாலையில் மகா தீபம்

திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் இன்று காலை பரணி தீபம் ஏற்றப்பட்டது. இன்று மாலை மகா தீபம் எனப்படும் கார்த்திகை தீபம் ஏற்றப்படுகிறது. இதையொட்டி திருவண்ணாமலையில் பக்தர்கள் வெள்ளம் அலை மோதுகிறது.அக்னி தலமாக விளங்கும் திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறும்.
10 நாள் நடைபெறும் திருவிழாவில் இங்குள்ள மலையே சிவனாக கருதி வழிபடப்படுகிறது.இந்த ஆண்டுக்கான கார்த்திகை தீப திருவிழா கடந்த 22-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 10 நாள் விழாவின் இறுதி நாளான இன்று காலை கோவிலில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.இதற்காக இன்று அதிகாலையிலேயே கோவில் நடை திறக்கப்பட்டது. முதல் நிகழ்ச்சியாக பஞ்சமூர்த்திகளுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. பின்னர் அதிகாலை 4 மணிளவில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது. முன்னதாக பஞ்சமூர்த்திகள் பலிபீடம் அருகே அழைத்து வரப்படுவார்கள். பின்னர் கோவிலில் இருந்து அர்த்தநாரீஸ்வரர் ஆடியபடியே பலி பீடத்தின் அருகே வருவார்.

அர்த்தநாரீஸ்வரர் வந்ததும் பலி பீடம் அருகே அகண்ட தீபம் ஏற்றப்படும். அதே நேரத்தில் மலை உச்சியிலும் மகா தீபம் ஏற்றப்படும்.2,668 மலை உச்சியில் மகாதீபம் ஏற்றுவதற்காக தயார் நிலையில் வைத்து இருந்த மகாதீப கொப்பரையை நேற்று காலை மலை உச்சிக்கு கொண்டு சென்றனர்.தீபம் ஏற்ற பயன்படுத்தப்படும் 1,500 மீட்டர் திரி, 3,500 கிலோ நெய் ஆகியவை கோவிலில் வைத்து பூஜை செய்யப்பட்டு மலை உச்சிக்கு இன்று கொண்டு செல்லப்படுகிறது.மகாதீபத்தை காண லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் வந்து குவிந்துள்ளனர்.

தீபத் திருவிழாவுக்காக லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் குவிந்துள்ளனர். தீவிரவாத அச்சுறுத்தல் காரணமாக மிக பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயார்?

எதிர் கட்சிகளின் பொது வேட்பாளர் சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கு அரசாங்கம் தயாராகி வருவதை அமைச்சர் டலள் அழகப்பெரும உறுதிப்படுத்தியுள்ளார்.
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகாவிற்கு விடுதலைப் புலிகளால் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதாக டலஸ் அழகப்பெரும குறிப்பிட்டுள்ளார்.
இதன் மூலம் சரத் பொன்சேகாவை படுகொலை செய்வதற்கும் அதனை விடுதலைப்புலிகளே மேற்கொண்டதாக பரப்புரைப்பதற்கும் ஸ்ரீலங்கா அரசாங்கம் தயாராகி வருவது தெரியவந்துள்ளது.
இதேவேளை தனது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படடால் அதற்கான முழமைப் பொறிப்பினையும் அரசாங்கமும் மகிந்த ராஜபக்சவுமே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று சரத் பொன்சேகா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

13-வது திருத்தத்துக்கு அப்பால் செல்லவும் பொன்சேகா தயார்! சூடுபிடிக்கும் தேர்தல் களம்!

சிறீலங்காவின் முன்னாள் ஓய்வு பெற்ற இராணுவத் தளபதி சரத்பொன்சேகா அவர்கள் நேற்று கொழும்பில் இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தெரிவித்த விபரம்:
இந்தியாவே எமது நெருங்கிய அயல்நாடு, பிராந்தியத்தில் வலுவான அயல்நாடு. இதன் காரணமாக இந்தியாவுடன் சிறப்பான உறவைப் பேணுவது அவசியம்.
சீனாவுடனும் பாகிஸ்தானுடனும் இணைந்து நான் செயற்பட்டேன் என எவராவது கூறுவார்கள் என்றால் அது இராணுவத் தளபாடங்களுக்காகத்தான். விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தத்துக்கு அவை தேவைப்பட்டன. இந்த இராணுவத் தளபாட ரீதியான உதவிகளை அந்த நாடுகள் வழங்கின.
எனினும், யுத்தத்தில் வெல்வதற்குத் தார்மீக ரீதியாக, அரசியல் ரீதியாக உதவியது இந்தியாதான். இந்தியாவுடனான உறவுகள் எப்போதும் உயர்மட்டத்தில் இருந்துள்ளன. எதிர்காலத்திலும் சிறந்த உறவுகளைப் பேண விரும்புகிறேன்.
எங்களுக்கு அருகிலிருக்கும் சிறந்த அயல்நாடு இந்தியா. இதன் காரணமாக சிறந்த உறவுகளைப் பேணவேண்டும். இராணுவத்தில் இணைந்த நான் முதல் நாள் அந்த நாட்டுடன் சிறந்த உறவுகளைப் பேணி வந்துள்ளேன்.
நான் இராணுவப் பயிற்சிக்காகத் தளபதியாக விளங்கியபோதும் நான்கு தடவைகள் இந்தியா சென்றுள்ளேன். அந்த நாட்டு இராணுவத்தைப் பெரிதும் மதிப்பதுடன் சிறந்த உறவுகளைக் கொண்டுள்ளேன்.
தமிழர் பிரச்சினைக்கு 13ஆவது திருத்தச் சட்டத்துக்கு அப்பால் சென்று தீர்வுகாண வேண்டியது அவசியம். ஆனால், பெரும்பான்மைச் சமூகத்தின் விருப்பத்திற்கு இணங்கவே இந்தச் சட்டத்தில் மாற்றங்களை கொண்டுவர வேண்டும்.
13 ஆவது திருத்தச் சட்டம் 20 ஆண்டுகளுக்கு முன்னர் முன்வைக்கப்பட்ட சட்டம் என்பதால் அச்சட்டத்தில் மாற்றங்களைக் மேற்கொள்ளவது அவசியம் என்றார்.

சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது - பைலட்டுகள் தப்பினர்

சுகோய் போர் விமானம் விழுந்து நொறுங்கியது. அதில் பயணம் செய்த இரு விமானிகளும் பத்திரமாக உயிர் தப்பினர்.இந்திய விமானப்படையில் சுகோய் விமானம் நொறுங்கி விழுந்து விபத்து க்குள்ளாவது இது 2வது முறையாகும். கடந்த ஏப்ரல் 30ம் தேதி ஒரு சுகோய் விழுந்து நொறுங்கியது.
அதில் பயணம் செய்த துணை பைலட் உயிரிழந்தார். பைலட் தப்பினார்.இந்த நிலையில் நேற்று ராஜஸ்தான் மாநிலம் பொக்ரான் அருகே உள்ள ஜெதா கி தானி என்ற இடத்தில் ஒரு சுகோய் விமானம் விழுந்து விபத்துக்குள்ளானது. இதில் இரு பைலட்டுகளும் பாராசூட் மூலம் குதித்து உயிர் தப்பினர்.இதுகுறித்து டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய விமானப்படை செய்தித் தொடர்பாளரான விங் கமாண்டர் டி.கே.சிங்கா கூறுகையில், ஜெய்சால்மர் மாவட்டம், பொக்ரானுக்கு தென் மேற்கே ஒரு சுகோய் போர் விமானம் விபத்துக்குள்ளானது.
இதில் இரு பைலட்டுகளும் தப்பினர் என்றார்.நேற்று மாலை 4.45 மணிக்கு இந்த சுகோய் விமானம் ஜோத்பூரிலிருந்து கிளம்பியது. வழக்கமான பயிற்சிக்காக இது சென்றது. மாலை 5.30 மணியளவில் விபத்துக்குள்ளானது.விமானத்தை விங் கமாண்டர் ஸ்ரீவத்சவ் என்பவர் இயக்கிக் கொண்டிருந்தார். அவருடன் ஒரு நேவிகேட்டரும் இருந்தார்.விமானம் கீழே விழுவதற்கு முன்பு இருவரும் பாராசூட் மூலம் உயிர் தப்பினர்.இந்திய விமானப்படை இந்திய ஆண்டு சந்திக்கும் 13வது விமான விபத்து இது. இந்த 13 விமானங்களில் 8 விமானங்கள் போர் விமானங்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜனவரியில் நடிகை நவ்யாநாயர் திருமணம்

நடிகை நவ்யா நாயருக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்டு இருக்கிறது. மணமகன் பெயர், சந்தோஷ் மேனன். கேரள மாநிலம் சங்கனாச்சேரியில் உள்ள பெருனையை சேர்ந்த நாராயண மேனன்-சாந்தா மேனன் தம்பதிகளின் மகன். இவர், மும்பையில் உள்ள ஸ்ரீசக்ரா உத்யோக் என்ற நிறுவனத்தில், `மார்க்கெட்டிங்' அதிகாரியாக இருக்கிறார்.
நவ்யா நாயர்-சந்தோஷ் மேனன் திருமணம், கேரள மாநிலம் ஹரிப்பாடு என்ற இடத்தில், ஜனவரி மாதம் நடக்கிறது. திருமண தேதி இன்னும் முடிவாகவில்லை.
நவ்யா நாயர், `இஷ்டம்' என்ற மலையாள படம் மூலம் திரையுலகுக்கு அறிமுகமானார். இவரை அறிமுகம் செய்தவர், டைரக்டர் சிபிமலையில். தமிழில், சிதம்பரத்தில் ஒரு அப்பாசாமி, அழகிய தீயே, மாயக்கண்ணாடி, ராமன் தேடிய சீதை உள்பட பல படங்களில் நடித்தார்.
திருமணத்துக்குப்பின் தொடர்ந்து நடிப்பதா, வேண்டாமா? என்பதை அவர் இன்னும் முடிவு செய்யவில்லை. என்றாலும், தன் சம்பந்தப்பட்ட படங்களின் படப்பிடிப்பை முடித்துக்கொள்ளும்படி, பட அதிபர்களுக்கு நவ்யா நாயர் வேண்டுகோள் விடுத்து இருக்கிறார்.

நகைச்சுவை நடிகர் கஞ்சா கருப்பின் நிச்சயதார்த்தப் படங்கள்




புலிகளிடமிருந்து பணம் பெற்றாவது தேர்தல் பிரசாரம் செய்வேன்’-செய்தியாளர்களிடம் சரத் பொன்சேகா

ரசியலுக்கு புதிய தலைவரான ஜெனரல் (ஓய்வு பெற்ற) சரத் பொன்சேகா ஜனாதிபதி தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்தார்.
அச் சமயம் அவர் உள்ளூர் மற்றும் வெளிநாட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது எதிர்க்கட்சியினரின் கூட்டணியில் உள்ள பங்காளி கட்சிகளின் கொள்கைகளுக்கு மாறான கருத்துக்களை கூறியிருந்தார்.நாட்டின் பொருளாதாரம் பற்றி தனக்கு எதுவும் தெரியாது என்பதை அச் சமயம் அவர் ஏற்றுக் கொண்டதுடன் ஐக்கிய தேசியக் கட்சி தசாப்தங்களுக்கு முன் கடைப்பிடித்து வந்த திறந்து பொருளாதார கொள்கையை ஏற்றுக் கொள்வதாகவும், தான் ஜனாதிபதியாக தெரிவானால் அதனையே கடைப்பிடிக்கப் போவதாகவும் கூறினார். கூட்டணியின் பங்காளி கட்சியான மக்கள் விடுதலை முன்னணியானது ஐக்கிய தேசியக் கட்சியின் திறந்த பொருளாதார கொள்கையை முழுமையாக எதிர்த்து வருவது பற்றி அவருக்கு எதுவும் தெரிந்திருக்கவில்லை.

பொன்சேகாவின் இவ்வாறான கொள்கையை மக்கள் விடுதலை முன்னணி ஏற்றுக் கொள்ளுமா என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கேள்வி எழுப்புகின்றனர். அவ்வாறான கொள்கை உள்ளூர் கைத்தொழில்களை பாதிப்பதுடன், அரச துறையில் வேலை வாய்ப்புகளையும் குறைத்து, தனியார்மயப்படுத்தலை ஊக்குவிப்பதுடன் எரிபொருள் விலைகளையும் அதிகரித்துவிடும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.மக்கள் விரும்பினால் மனத்திருப்திக்காக மதுபானம் அருந்தும் சுதந்திரம் அவர்களுக்கு வழங்கப்பட வேண்டும் என்று ஜெனரல் பொன்சேகா மற்றொரு தவறான விடயத்தையும் அங்கு குறிப்பிட்டார்.

இதன் மூலம் நாட்டில் குடிகாரர்கள் பெருமளவில் அதிகரிக்கும் நிலை ஏற்படலாம்.அத்துடன் தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்களிடமிருந்தும், புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக அவர் அங்கு கூறியிருந்தது மிகவும் மோசமான ஒரு கூற்றாக அமைந்தது.நாட்டின் ஸ்திரத்தை ஒழிக்கும் வெளிநாட்டிலுள்ள புலிகளின் சதி வேலையின் ஒரு பகுதியாக ஜெனரலின் இந்த கூற்று அமைந்திருப்பதாக பொது மக்கள் கோபாவேசத்துடன் இருக்கின்றனர்.

நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதி முறையை ஒழிப்பதற்கு பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அவசியமென ஜெனரல் அங்கு அழுத்தமாக கூறினார். முன்றில் இரண்டு பெரும்பான்மை என்ற தூரத்துக்கனவை, செய்ய முடியாத ஒன்றைப் பற்றி பேசுவதற்கு முன் அவர் ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெறுவதை பற்றி சிந்திக்க வேண்டும் என்று அரசியல் பகுப்பாய்வாளர்கள் கூறுகின்றனர்.அதேவேளை யுத்த முனையில் தான் பதவி வகித்தபோது பல தவறுகளை செய்ததாக ஜெனரல் மேற்படி ஊடகவியலாளர் மாநாட்டில் ஒப்புக் கொண்டார்.

ஒரு சந்தர்ப்பத்தில் ஊடகவியலாளர்கள் அவரிடம் பல கேள்விகளை எழுப்பினர். இதனால் தடுமாற்றம் அடைந்த ஜெனரல் பொன்சேகா அக்கேள்விகளில் பலவற்றுக்கு பதிலளிக்கும் அரசியல் அனுபவம் தனக்கு இல்லை என்று கூறியதுடன் முடிந்த வரை குறைந்த அளவு கேள்விகளையே தன்னிடம் கேட்குமாறு ஊடகவியலாளர்க ளிடம் வலியுறுத்தி கேட்டுக் கொண்டார்.

கோடீஸ்வர மாப்பிள்ளை தேவையில்லை!-அசின்

மும்பையில் நான் பார்ட்டிகளுக்கெல்லாம் போவதே கிடையாது. எனக்கு பாய் பிரண்ட் என்று யாருமில்லை என்கிறார் பாலிவுட் ட்ரீம்ஸுடன் நிரந்தரமாய் மும்பையில் குடியேறிவிட்ட அசின். சமீப காலமாக சென்னைப் பக்கமே எட்டிப்பார்க்காமல் இருந்த அசின், நேற்று முன்தினம் கலைமாமணி விருது பெறுவதற்காக சென்னை வநதிருந்தார்.
கலைமாமணி விருது பெற்றது பெருமையாக இருக்கிறது. சந்தோஷமாக இருக்கிறது. நான் இந்தி பட உலகிற்கு போய்விட்டாலும், என் தாய் வீடு தமிழ் பட உலகம்தான். அதிக படங்களில் நடித்தது இங்கே தான். எனக்கு தகுந்த நல்ல கதையும், கதாபாத்திரமும் அமைந்தால் மீண்டும் தமிழ் படங்களில் நடிப்பேன்.மும்பையில் என்னை பற்றி நிறைய வதந்திகள் பரப்புகிறார்கள். நான் ரூ.2 லட்சம் செலவில் செருப்பு அணிந்திருப்பதாக, எழுதுகிறார்கள். அதெவெல்லாம் சுத்தப்பொய். அங்கே நான் பார்ட்டி, கிளப், பப்களுக்கு போக மாட்டேன். வீட்டில் இருந்து நேராக படப்பிடிப்புக்குத்தான் போவேன். முடிந்ததும் நேராக வீடு திரும்பி விடுவேன். அதனால் என்னை பற்றி வேண்டும் என்றே வதந்திகளை உருவாக்கி பரப்புகிறார்கள். கற்பனை கலந்த கதைகளை அவிழ்த்துவிடுகிறார்கள்.எனக்கு யார் மீதும் பொறாமை கிடையாது. என்னை பார்த்து யாராவது பொறாமைப்படுகிறார்களா? என்பது கூடத் தெரியாது.நான் யாருக்கும் பார்ட்டி கொடுப்பதும் இல்லை.

என் பிறந்த நாளுக்கு உறவினர்களுடன் சேர்ந்து சாப்பிட்டோம். அவ்வளவுதான். மும்பையில் எனக்கு பாய் பிரண்ட்டே கிடையாது. நான் பாய் பிரண்ட் இல்லை என்று சொல்வதை அங்கே ஆச்சரியமாக பார்க்கிறார்கள்.எனக்கு கணவராக வருபவர் கோடீஸ்வரனாகத்தான் இருக்க வேண்டும் என்பதில்லை. சாதாரண குடும்பத்து இளைஞராகவும் இருக்கலாம். இங்கிருந்து இந்தியில் நடிக்க வரும் யாரைப் பார்த்தும் எனக்குப் பொறாமை இல்லை. இந்திப் படவுலகம் ரொம்பப் பெரியது. அங்கு யாரும் வந்து போகலாம். த்ரிஷா, நயன்தாராவும் அப்படியே. எனக்கு நல்ல படத்தில் நடித்தால் போதும்.

அது விருது பெற்றால் சந்தோஷப்படுவேன். இல்லாவிட்டாலும் கவலைப்பட மாட்டேன்.திரிஷாவும், நயன்தாராவும் இந்தி பட உலகிற்கு வருவதால் உங்களுக்கு பாதிப்பா? என்று சிலர் என்னிடம் கேட்கிறார்கள். யார் வந்தாலும் நான் அவர்களை வரவேற்கிறேன். என் வேலையில் நான் கவனம் செலுத்துவேன்.மும்பையில், 'கிரீன் ஏக்கர்ஸ்' என்ற அடுக்கு மாடி குடியிருப்பில்தான் இப்போது நான் வசிக்கிறேன்.

அதே குடியிருப்பில்தான் ஸ்ரீதேவியும், தபுவும்கூட வசிக்கிறார்கள். ஸ்ரீதேவி என் வீட்டிற்கு குழந்தைகளுடன் அடிக்கடி வந்து போவார். அதேபோல் நானும் ஸ்ரீதேவி வீட்டிற்கு சென்று வருகிறேன்..." என்றார்.

இலங்கையை கதிகலங்க வைக்கும் தமிழர்களின் 'புறக்கணிப்பு'!

புலம் பெயர் தமிழர்களிடம் ஈழ விடுதலைப் போராட்டத்தை கையளித்திருப்பதாக சில தினங்களுக்கு முன் விடுதலைப் புலிகள் அறிவித்திருந்தது நினைவிருக்கலாம்.புலம் பெயர் தமிழர்கள், அமெரிக்க வாழ் தமிழர்கள் என பலரும் இன்று ஒரு வித்தியாசமான, ஆனால் இலங்கைக்கு பெரும் வலியைத் தருகிற ஒரு போராட்டத்தை முன்னெடுத்துள்ளனர்.
அதுதான் இலங்கைத் தயாரிப்புகளைப் புறக்கணிக்கும் போராட்டம்.அமெரிக்காவின் முக்கிய நகரங்களான வாஷிங்டன் டிசி, நியூயார்க், அட்லாண்டா, மியாமி, சான்பிரான்ஸிஸ்கோ, டல்லாஸ், பிரின்ஸ்டன், நியூஜெர்ஸி, சிகாகோ, ரேலி, சார்ல்ஸ்டன், கொலம்பஸ், ஒஹியோ மற்றும் பாஸ்டனில் ஒரே நேரத்தில் நடத்தப்பட்ட இந்த போராட்டம் இலங்கையை அதிர வைத்துள்ளது.இலங்கையில் ஆடைகள் தயாரித்து அமெரிக்காவுக்கு இறக்குமதி செய்து விற்கும் முதன்மை நிறுவனங்களான விக்டோரியா சீக்ரட் (Victoria's Secret) மற்றும் GAP ஆகிய நிறுவனங்களின் சில்லறை விற்பனைக் கடைகள் முன்பாகவே இந்தப் போராட்டங்கள் நடத்தப்பட்டன.

அமெரிக்கத் தமிழ் அரசியல் செயல்அவையின் (United States Tamil Political Action Committee - USTPAC) 'இலங்கை தயாரிப்புக்கள் புறக்கணிப்புப் போராட்டக் குழு' (Sri Lankan Products Boycott Committee) இந்தப் போராட்டங்களை ஒழுங்கமைத்து நடத்தி வருகிறது. "நண்பர்களே... உங்களை இந்தக் கடைகளுக்குச் செல்ல வேண்டாம் என நாங்கள் தடுக்கவில்லை. தாராளமாகச் செல்லுங்கள். ஆனால் எந்தத் தயாரிப்பிலாது 'Made in Srilanka' என்று இருந்தால் அதை அங்கேயே போட்டுவிடுங்கள். அதில் இனப்படுகொலை செய்யப்பட்ட பல ஆயிரம் தமிழரது ரத்தம் தோய்ந்திருக்கிறது!" - இந்த வலி மிகுந்த வாசகங்களைப் பார்த்த பின்னும் யார் இலங்கைத் தயாரிப்புகளை வாங்குவார்கள். இதையெல்லாம் பார்த்துவிட்டு கடைகளுக்குள் சென்று வரும் வெளிநாட்டவர், தாங்கள் இலங்கைப் பொருட்களை வாங்கவில்லை என போராட்டத்தை முன்னெடுத்தவர்களுக்கு உறுதிமொழி கொடுத்துவிட்டு சென்றுள்ளனர்.சில அமெரிக்கர்கள், "இலங்கையில் நடந்த விஷயங்களை நாங்கள் அறிவோம். இப்போது நடக்கும் அவலங்களைப் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறோம். எங்களால் எப்படி இலங்கை தயாரிப்புகளை வாங்க முடியும்" என்றும் சில அமெரிக்கர்கள் திருப்பிக் கேட்டது போராட்டக்காரர்களுக்கு பெரும் ஆறுதலாக இருந்தது.

இந்தப் போராட்டத்தைப் பார்த்து கோபம் கொண்டு தங்களிடம் சண்டைக்கு வந்த அமெரிக்க நிறுவனங்களிடம் பொறுமையாக தங்கள் தரப்பை விளக்கிய போராட்டக்காரர்கள், இலங்ககையில் செய்யப்பட்டுள்ள உங்கள் முதலீடுகளைத் திரும்பப் பெறுங்கள் என்று வலியுறுத்த அவர்கள் யோசிக்க ஆரம்பித்துள்ளனர்.டாக்டர் எலீன் ஷாண்டர், டாக்டர் சோம இளங்கோவன், சிவநாதன் போன்றோர் இந்தப் போராட்டத்தை ஒழுங்கமைத்து சட்டரீதியாக வழிநடத்தி வருகின்றனர்.அமெரிக்க நிறுவனங்கள் என்றில்லாது, இங்கையில் முதலீடு செய்துள்ள பேறு நாட்டு நிறுவனங்களுடனும் பேசேசு நடத்தி வருகிறார்கள் போராட்டக் குழுவினர். இதுதான் இலங்கையின் பொருளாதாரத்துக்கு விழப்போகும் பேரடியாகப் பார்க்கப்படுகிறது.

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன் போட்டி?

லங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஆலோசித்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ்க் கூட்டமைப்பு சார்பில் சம்பந்தன் போட்டி?

லங்கையில் அடுத்த ஆண்டு தொடக்கத்தில் நடைபெற இருக்கும் அதிபர் தேர்தலில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் போட்டியிட அதன் நாடாளுமன்றக் குழுத் தலைவர் சம்பந்தன் பெயர் பரிந்துரை செய்யப்பட்டிருப்பதாக இலங்கைத் தமிழர் ஆதரவு இணையத் தளங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எனினும், ஜனநாய மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் ஆலோசித்த பிறகே இது தொடர்பாக இறுதி முடிவெடுக்கப்படும் என அந்தச் செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எஸ்எம்எஸ் கட்டணங்கள் 99 சதவிகிதம் குறைப்பு!!

எஸ்எம்எஸ் கட்டணங்கள் கிட்டத்தட்ட 99 சதவிகிதம் அளவு குறைக்கப்பட்டுள்ளது. முதல் கட்டமாக ரிலையன்ஸ் நிறுவனம் தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு எஸ்எம்எஸ்ஸுக்கு 1 பைசா மட்டுமே என்ற திட்டத்தை அறிவித்துள்ளது.
மொபைல் சர்வீஸ் நிறுவனங்களில் அழைப்புக் கட்டணத்தை விட அதிக காஸ்ட்லியானதாக இருந்தது எஸ்எம்எஸ்தான். ஆனால் இந்த எஸ்எம்எஸ் அனுப்ப 1 KBக்கும் குறைந்த அலைவரிசை இருந்தாலே போதுமாம். இதற்கான கட்டணம் ஒரு பைசாவுக்கும் குறைவுதான்.
ஆனால் பல நிறுவனங்கள் இன்றைக்கும் 50 பைசா முதல் 1 ரூபாய் வரை எஸ்எம்எஸ் கட்டணமாக வசூலித்துக் கொண்டு வருகின்றன.இந்த உண்மையை பத்திரிகைகள் சமீபத்தில் வெளிக் கொணர்ந்தன. இதனால் தொலைத் தொடர்பு ஆணையம் ட்ராய், 'பிஎஸ்என்எல் உள்ளிட்ட நிறுவனங்கள் எஸ்எம்எஸ் கட்டணத்தை அதிகளவு நிர்ணயிக்கப்பட்டிருப்பது உண்மைதான். விரைவில் குறைத்துவிடுவோம்' என்று சமாளித்திருந்தது.ஆனால் மக்களுக்கு உண்மை தெரிந்து கடும் கோபத்திலிருந்தனர். இந்த சந்தர்ப்பத்தை சரியாகப் பயன்படுத்திக் கொள்ளத் திட்டமிட்ட ரிலையன்ஸ், நேற்று எஸ்எம்எஸ் குறைப்பு அறிவிப்பை வெளியிட்டுவிட்டது.இந்த அறிவிப்பின்படி இனி 1 எஸ்எம்எஸ் 1 பைசா மட்டுமே.
ஒரு நாள் முழுக்க எஸ்எம்எஸ் அனுப்பினால் ரூ. 1 செலுத்தினால் போதும். எத்தனை எஸ்எம்எஸ் வேண்டுமானாலும் அனுப்பித் தள்ளலாம். ஒரு மாதம் முழுக்க எல்லையில்லை எஸ்எம்எஸ் அனுப்ப ரூ 11 செலுத்தினால் போதுமாம்.பார்தி ஏர்டெல், பிஎஸ்என்எல், வோடபோனும் இப்போது எஸ்எம்எஸ் கட்டண யுத்தத்தில் களமிறங்குகின்றன.
எப்படியோ பத்திரிகைகள் கலகம், எப்போதும் போல நன்மையில் முடிந்திருக்கிறது!

ஜனாதிபதி தேர்தலில் மகிந்தவுக்கு இந்தியாவும், சரத்திற்கு அமெரிக்காவும் ஆதரவு: தென்பகுதியில் தேர்தல் பயம் கூடும் என இராஜதந்திரிகள் கருத்து

னாதிபதித்தேர்தலில் போட்டியிடவுள்ள மகிந்த ராஜபக்ஷவை ஆதரிப்பதில் இந்தியாவும், ஜெனரல் சரத்பொன்சேகாவை ஆதரிப்பதில் அமெரிக்காவும் மறைமுகமாக ஈடுபட்டுள்ளதாக கொழும்பு இராஜதந்திர வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன. இவ்வாறு யாழ்ப்பாணத்திலிருந்து வெளியாகும் வலம்புரி நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:-
எதிர்வரும் ஜனவரி 26 ஆம் திகதி ஜனாதிபதித் தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்ட நிலையில் எதிர்க்கட்சிகளின் கூட்டமைப்பு தமது பொதுவேட்பாளராக முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத்பொன்சேகாவை நிறுத்தியுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலுக்கான திகதி அறிவிக்கும் வரை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடும் தகவலை வெளியிடாமல் அமைதிகாத்த ஜெனரல் சரத்பொன்சேகா தற்போது தேர்தலில் தான் போட்டியிடுவதை பகிரங்கமாக அறிவித்துள்ளார்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தற்போதைய ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவும் முன்னாள் இராணுவத்தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவும் போட்டியிடும் கள நிலைமை தென்பகுதியில் ஒருபோதும் இல்லாத தேர்தல் பயத்தை உண்டு பண்ணும் என அரசியல் ஆய்வாளர்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலில் வன்னி யுத்த வெற்றியுடன் சம்பந்தப்பட்ட இரு பெரும் முக்கியஸ்தர்கள் போட்டியிடுவதால் உள்நாட்டில் ஏற்படக்கூடிய தேர்தல் களேபரத்திற்கு அப்பால் இலங்கை தொடர்பில் இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்குமான மறைமுகப் போட்டியில் எதிர் ஒலிப்புக்களும் ஜனாதிபதித் தேர்தலில் செல்வாக்கு செலுத்தும் என அரசியல் இராஜதந்திரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மகிந்த ராஜபக்ஷ வெற்றியடைய வேண்டும் என இந்தியா விரும்புகின்றது. அதேநேரம் ஜெனரல் சரத்பொன்சேகா ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதைக்கூட இந்திய மத்திய அரசு விரும்பவில்லை என கூறப்படுகின்றது.
ஆனால் மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக போட்டியிடும். ஜெனரல் சரத் பொன்சேகா வெற்றி பெறுவதை அமெரிக்கா விரும்புவதாகவும் இதற்கான ஆலோசனைகள் ஜெனரல் சரத் பொன்சேகா அமெரிக்காவுக்குச் சென்ற போது வழங்கப்பட்டதாகவும் தெரிய வருகின்றது. இவ்வாறு வலம்புரி நாளிதழ் தனது இன்றைய பதிப்பில் தெரிவித்துள்ளது.

Sunday, November 29, 2009

பிரபாகரனின் பெற்றோரை ஏற்றுக்கொள்ள நான் தயா‌ர்: சரத் பொ‌ன்சேகா

லங்கையின் முன்னாள் ராணூவ தளபதி சரத்பொன்சேகா அதிபர் தேர்தலில் போட்டியிடுகிறார். அரசியலுக்கு புதிய தலைவரான அவர், அ‌திப‌ர் தேர்தலில் தான் போட்டியிடப் போவதாக நேற்று அறிவித்துள்ளார்.
அவர் உள்ளூர், அய‌ல்நா‌ட்டு ஊடகவியலாளர்களுடன் நடத்திய ஊடகவியலாளர் மாநாட்டின் போது இதை அறிவித்துள்ளார்.
அப்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்குப் பதிலளித்த சரத் பொன்சேகா, நாட்டின் ஜனநாயகத்தை நிலை நாட்டுவதற்காக புலிகள் இயக்க போராளிகள் தமது பிரச்சாரத்தில் ஈடுபட்டாலும் தாம் அதை வரவேற்பே‌ன்.
தனது தேர்தல் பிரசாரத்துக்காக புலிகள் இயக்க தலைவர் பிரபாகரனின் பெற்றோர்கள் தம்மிடம் வந்து சேர்ந்தாலும் அவர்களைத் தான் வரவேற்பேன் எனக் கூறியுள்ளார்.
அவர் மேலும், 50,000 ரூபாய் சொற்பத் தொகையை மட்டும் வைத்துக் கொண்டு தம்மால் அரசியல் நடத்த முடியாது. எனவே புலிகள் ஆதரவாளர்களிடமிருந்தும் நிதி உதவியை ஏற்றுக் கொள்ள தயாராக இருப்பதாக கூறியுள்ளார்.

Saturday, November 28, 2009

சீமான் கர்ஜனை! மிரண்ட கனடா!

தமிழீழ தாயக விடுதலைக்காக களமாடி உயிர்நீத்த போராளிகளின் நினைவுகளை போற்றும் விதமாக ஒவ்வொரு வருஷமும் நவம்பர்- 27-ல் "மாவீரர் நாள்' நிகழ்வுகள் ஈழத்தில் பிரமாண்டமாக கொண்டாடப்படும். மாவீரர் நாளில் பிரபாகரன் நிகழ்த்தும் உரையை உலக நாடுகளே உற்று கவனிக்கும்.


போரினால் ஈழத்தில் ஏற்பட்ட விளைவுகளுக்குப் பின்னால்... வருகிற இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வுகள் புலம் பெயர்ந்துள்ள தமிழர்கள் வசிக்கும் நாடுகளிலிருந்து துவங்கியது. உலக முழுவதும் உள்ள ஈழத் தமிழர்கள், தமிழர் அமைப்புகள், மாணவர் அமைப்புகள் அனைத்தும், ஒவ்வொரு நாட்டிலும் பிரபாகரன் பிறந்த நாளையும் மாவீரர் நாளையும் பிரமாண்டப்படுத்தினர்.கனடா தமிழர் அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த "மாவீரர் நாள்' நிகழ்வில் கலந்து கொள்ள சென்ற சீமான், இந்நிகழ்விற்கு முதல்நாள் டோரொண்டோவில் கனடிய தமிழ் இளைஞர்களும் மாணவர்களும் ஏற்பாடு செய்திருந்த "பிரபாகரன் பிறந்த நாள்' நிகழ்வில் கலந்து கொண்டார். ஒரு மண்டபத்தில் நடந்த இவ்விழாவில் ஈழத் தமிழர்களும் இளைஞர்களும் பெருமளவில் திரண்டிருந்தனர்.விழாவில் பேசிய சீமான், தனக்கே உரிய வழக்கமான பாணியில் ஏக கர்ஜனை செய்ய... உடனடியாக அவரை இந்தியா வுக்கு திருப்பி அனுப்பி விட்டது கனடிய அரசு. இந்த சம்பவத் தால் ஏகத்துக்கும் அதிர்ச்சி அடைந்திருக்கிறார்கள் ஈழத் தமிழர்கள்.


""இந்த வருட மாவீரர் நாள் நிகழ்வு, சர்வதேச நாடுகள் முழுமைக்கும் புலம்பெயர்ந்த தமிழர்கள் மத்தியில் எழுச்சியுடன் கொண்டாடப்படுகிறது. மாவீரர் நாளில் ஈழ இளைஞர்களிடம் உருவாகும் தமிழீழ எழுச்சியை, அழிக்கத் திட்டமிட்டு ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தனது தூதரகம் மூலம் அந்தந்த நாட்டின் அரசாங்கத்தோடு ஒரு இணக்கப்பாட்டை முன்கூட்டியே ஏற்படுத்திக் கொண்டது சிங்கள ராஜபக்சே அரசு.


அப்படிப்பட்ட ஒரு இணக்கப்பாட்டை கனடா அரசோடு இங்குள்ள சிங்கள தூதரக மும் போட்டுக் கொண்டது. ஏற்கனவே சிங்கள தூதரகத்திற்கும் கனடா அரசுக்கும் "நல்ல புரிதல்' உண்டு. அதன் அடிப்படையிலே, நிகழ்வு துவங்குவதற்கு முன்பே, கனடிய உளவுத்துறை யினர் மண்டபத்திற்கு வந்து கண்காணிக்கத் துவங்கினர். இதற்காக தமிழ்மொழி அறிந்த ஒரு அதிகாரியையும் அழைத்து வந்திருந்தனர். இங்குள்ள சிங்கள தூதரகம், இந்த அதிகாரியை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளது.விழா துவங்கியதும் அந்த அதிகாரி சொல்ல சொல்ல ஒவ்வொரு நிகழ்வை யும் குறிப்பெடுத்தனர் உளவுத் துறையினர். சீமான் பேசிய பேச்சுக்களும் அவ்வாறே குறிப்பெடுக்கப்பட்டது. விழா முடிந்ததும் தனது அறைக்கு சென்றுவிட்டார் சீமான்.

அடுத்த சில மணி நேரங்களில் கனடா அரசு ஒரு முடிவை மேற்கொண்டு, அதிரடியாக சீமானை திருப்பி அனுப்பிவிட்டது. உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டின்படியே இந்த நடவடிக்கையை எடுத்திருப்பதாக நினைக்கிறோம். மாவீரர் நாள் நிகழ் வில் சீமான் பேசுவதை தடுக்கவே இந்த நடவடிக்கை'' என்கின்றனர் விழா ஏற்பாட்டாளர்களான கனடிய தமிழ் இளைஞர்கள்.அப்படி என்ன பேசினார் சீமான்?""கனடாவிற்கு எதற்காக வந்தேன், தன்னிடம் பிரபாகரன் கட்டளையிட்டது என்ன, "நாம் தமிழர்' இயக்க செயல்பாடுகள், தமிழீழத்திற்காக உயிர்நீத்த மாவீரர்களின் தியாகம் என்பது குறித்தெல்லாம் உணர்ச்சி பொங்க பேசிய சீமான், ""புலிகளை ஒழித்து விட்டோம், போராட்டம் ஓய்ந்துவிட்டது, போர் நின்று விட்டது என்று நினைக்கிறான் ராஜபக்சே. உலகத்திலுள்ள தமிழர்கள் அத்தனைபேரையும் புலிகளாக மாற்றிவிட்டு... ஒழித்து விட்டதாக நினைத்துக் கொண்டிருக்கிறான் ராஜபக்சே. புலி என்றால் யார் என்றே அவனுக்குத் தெரியவில்லை. சீமான் புலி. அவன் செத்தால் அவன் தம்பி புலி."சிங்கள ராணுவத்தின் கொடூரத் தாக்குதலில் அப்பாவி தமிழர்கள் 50 பேர் பலியானார்கள். 500 பேர் புலியானார்கள்' என்பார் சோலை. அப்படி புலியானவர் களடா நாங்கள். அது தெரியாமல் போர் நின்றுவிட்டது, போராட்டம் ஓய்ந்து விட்டது, புலிகளை அழித்துவிட்டோம் என்கின்றான். ஆனா அப்படி இல்லை.

இனி என் தலைவன் (பிரபாகரன்) கையில் இல்லை போர். தம்பிகள் கைகளில் இருக்கிறது.ஒரு பள்ளிக்கூடத்தில் குண்டு போட்டாயா? 100 சிங்கள பள்ளிகள் மீது குண்டு போட்டிருந் தோமேயானால்... தமிழச்சியின் மார் அறுக்கி றாயா? சிங்களச்சியின் மாரை அறுத்தெறிந்திருப் போமேயானால்... அவனுக்கும் அந்த வலி தெரிந்திருக்கும். சர்வதேச சமூகத்தாருக்கும் வலித்திருக்கும். இதையெல்லாம் செய்யாத என் தலைவன் பயங்கரவாதி. இதையெல்லாம் செய்த ராஜபக்சே ஜனநாயகவாதியா?

இனி மரபுவழி போர் கிடையாது. இனி எங்கள் நிலப்பரப்பிலும் (ஈழம்) சண்டை கிடை யாது. இலங்கை தலைநகர் கொழும்பில்தான் சண்டை. 1000 கரும்புலிகள் போதும். வாரத்திற்கு ஒரு குண்டு. ஒரு கரும்புலி சிதறினால் 1000 சிங்களவன் சிதற வேண்டும். தொடர்ந்து வெடித்துக் கொண்டே இருப்பான் கரும்புலி. நாம் தனித்தனியாக சிறு நெருப்பாக சிதறிக் கிடந்தது போதும். ஒன்றிணைந்து ஒரு பெரு நெருப்பாக மாற வேண்டும். என் இழப்பு, சிங்களவனுக்கு 100 மடங்கு இழப்பு என்பது போல் நம் வெறி மாற வேண்டும். அவன் ஒரு வெட்டு என்றால் நாம் 100 வெட்டு வெட்ட வேண்டும் ஓய்ந்து விடக்கூடாது. விடுதலைப் போராட்டம் இனி நம் கையில்தான் இருக்கிறது. நம் வலிமையை பார்த்துதான் தலைவர் விரைவாக வருவதும் மெதுவாக வருவதும் இருக்கிறது.

வேக வேகமாக களமாட தயாராகுங்கள் என் தம்பிகளே! விடுதலையை வென்றெடுக்க வேண்டும். தமிழீழம் உருவாகியே தீரும்'' என்றார் மிக ஆவேசமாக.தனது 46 நிமிட ஆவேச பேச்சில் இந்தியா உள்ளிட்ட சர்வதேச நாடுகளையும் தமிழகத்தையும் கடுமையாக விமர்சித்த சீமான், எது பயங்கரவாதம் என்பது குறித்தும் சர்வதேச சமூகத்திடம் நிறைய கேள்விகளை எழுப்பினார். சீமானின் ஆவேசத்தை கண்டு ஆர்ப்பரித்தது கனடாவில் உள்ள ஈழத் தமிழினம்.""நிகழ்வில் பேசிய சீமானின் பேச்சுக்களை கனட அரசிடம் உளவுத்துறையினர் ரிப்போர்ட்டாக தர, அந்த ரிப்போர்ட்டின்படி "கனடா பார்டர்ஸ் சர்வீஸ் ஏஜென்சி' என்கிற இமிக்ரேஷன் டிபார்ட்மென்ட்டிடம் ஆக்ஷன் எடுக்கும்படி கேட்டுக் கொண்டது கனடா அரசாங்கம். அதன்பேரில் அதன் அதிகாரிகள், சீமான் தங்கியிருந்த அறைக்குச் சென்று விசாரணை நடத்தினர்.

அப்போது, இலங்கைக்குள் மீண்டும் உள்நாட்டு யுத்தம் வெடிக்கும், சிங்களவர்கள் வாழவே கூடாது, ஒரு பள்ளிக்கூடம் மீது குண்டு விழுந்தால் 100 பள்ளிக்கூடம் மீது குண்டு வீசுவோம் என்று பேசியுள்ளீர்கள்.எங்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட புலிகள் இயக்கத்தை ஆதரித்து இங்கு அசாதா ரணமான சூழலை உருவாக்குகிறீர்கள். அதனால், நீங்கள் உடனடியாக கனடாவை விட்டு வெளியேற வேண்டும். இல்லையேல், உடனடியாக நாடு கடத்தப்படுவீர்கள் என்று எச்சரிக்கை செய்தனர். ஆனால், சீமானும் அவரது வழக்கறி ஞர் ஹதாயத் நஹாமியும் "30-ந்தேதி வரை விசா இருக்கிறது' என்று வாதாடினர். ஏற்க மறுத்த அதிகாரிகள், அவரை ஏர்போர்ட்டுக்கு அழைத்து வந்து திருப்பி அனுப்பினர்'' என்கின்றன கனடாவில் இருந்து கிடைக்கிற தகவல்கள்.சீமானின் வழக்கறிஞரான ஹதாயத் நஹாமி, ""இமிக்ரேஷன் அதிகாரிகளின் நோக்கம், சீமானை உடனடியாக கனடாவை விட்டு வெளியேற்றிவிட வேண்டுமென்பதிலேயே இருந்தது. தடை செய்யப்பட்ட இயக்கத்தை ஆதரித்து பேசக்கூடாது என்பதையே திரும்பத் திரும்ப சொன்னார்கள்'' என்கிறார்.ஏர்போர்ட்டில் இருந்த சீமான், ""தமிழின விடுதலைக்காக போராடும் அனைவரையும் ஒடுக்க வேண்டுமென்பதில் சிங்கள இனவாதம் தீவிரமாக இருக்கிறது.

அதனால் போராடும் எங்கள் மீது அடக்கு முறைகளை ஏவிவிட்டிருக்கிறது. ராஜபக்சே சகோ தரர்கள் கொடுத்த நெருக்கடியின் காரணமாகவே, நான் பேசவிருந்த மாவீரர் நாள் உரையை தடுத்து நிறுத்தி கனடா அரசு என்னைத் திருப்பி அனுப்பி யுள்ளது. இந்த அச்சுறுத்தல்களுக்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். தமிழீழ விடுதலைக்காக என் போராட்டம் தொடரும்'' என்றார் உறுதி தளராமல்.

போர் குற்றத்திற்கு நீதிகோரும் புனிதப் பயணம்! - ஜெகத்

ழம் வரும். ஈழம் மலரும். ஈழம் சாத்தியமே. இவ்வாறு எழுதுவதை அதீத கனவு விருப்பாகக் கருதி நின்ற பலருக்கு வேகமாக மாறிவரும் காட்சிகள் நம்பிக்கை தந்துள்ளன. நாட்டுக்குள் ராஜபக்சே சகோதரர்கள் திடீரென அடைந்துள்ள பதற்றமும், உலக அளவில் போர்க்குற்றங்கள் தொடர்பாக எடுக் கப்பட்டுவரும் அமைதியான, உறுதியான முயற்சி களும் அத்தகு நம்பிக்கையை மேலும் அதிகரித் துள்ளன.

எனவேதான் நாமும் ஈழம் மலர இன்று செய்யப்படவேண்டியவற்றை பொறுப்புணர்வுடன் சிந்திக்கத் தலைப்படுகிறோம்.கடந்த இதழ்களில் மூன்று விடயங்களை கோடிட்டிருந்தோம். வதை முகாம்களிலிருந்து மக்களை மீட்டு அவர்கள் மறுவாழ்வு தொடங்க உதவு தல் முதலானது; தமிழீழ தாயக நிலப்பரப்பில் சிங்களக் குடியேற்றங்கள் நடைபெறாது தடுத்தல் இரண்டாவதும் மிக அடிப்படையானதும்.

குறிப்பாக அடுத்த பனிரெண்டு மாத காலம் இவ்விடயத்தில் உலகத் தமிழர்கள் மிகவும் விழிப்புணர்வுடன் இயங்கவேண்டிய காலம். இந்தியாவும், உலக நாடுகளும் உறுதியான ராஜதந்திர அழுத்தங்களைக் கொடுப்பதும், இலங்கைக்குள் தமிழ் அரசியற் சக்திகள் ஒன்றிணைந்து இது தொடர்பாக ஒரே குரலில் முழங்கி இயங்குவதும் சிங்களக் குடியேற் றங்களைத் தடுத்து நிறுத்துவதில் முக்கிய பங்காற்ற முடியும். மூன்றாவதாக தமிழீழ விடுதலைப் போராட்டம் மீது கவிந்த "பயங்கரவாதம்' என்ற நச்சுத்திரையை அகற்றி ஈழத்தமிழர்கள் வரலாற்று ரீதியாகவும், பண்பாட்டு ரீதியாகவும் தனித்துவமான ஓர் தேசிய இனம், அதனாலேயே அவர்கள் சிங்களப் பேரின வாதத்தால் இன அழித்தலுக்கு ஆளாக்கப்பட்டிருக் கிறார்கள்.

அவர்கள் பாதுகாப்பாக எதிர்காலத்தில் வாழவேண்டுமென்றால் அவர்களுக்கென தனி நாடு அமைக்கும் அரசியல் சுயநிர்ணய உரிமையை அவர்களுக்கு வழங்குவதுதான் தீர்வு என்ற நிலைப்பாட்டினை உலகம் ஏற்றுக்கொள்ளச் செய்தது. இது மிக மிக முக்கியமானது.தமிழர் மீது நிகழ்ந்த இன அழித்தல் போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்து நிறுவி ஆதாரபூர்வமாக நம்மால் நிரூபிக்க முடியுமெனில், உலகினது மனசாட்சியின் முன் அதுவே நம் மக்களின் அரசியல் சுயநிர்ணய உரிமைக்கான மிகப்பெரும் அறைகூவலாய் நிற்கும். உலகம் அதனை சுலபமாகப் புறந்தள்ளவோ, நிராகரித்துவிடவோ முடியாது.

நீதியை நிலைநாட்டுதல் என்பதே நம்பிக்கையுடன் நாம் மேற்கொள்ளும் இடைவிடாத முயற்சிகள்தான். இம்முயற்சியில் தமிழர்களாகிய நாம் தனித்துவிடப்பட்டவர்களல்ல. சிதைக்கப்பட்ட நம் பொது வரலாற்று ஆன்மாவின் வலிகளைப் பகிர்ந்து கொள்ளவும், மீண்டுமொரு வசந்த காலத்திற்காய் அதனை ஆற்றுப்படுத்தி மீட்கவும் பாருலகின் பொது மானுடம் நிச்சயம் நம்மோடு இணையத்தான் செய்யும் என்ற நம்பிக்கையை இரண்டொரு நாட்களுக்கு முன் நடந்த நிகழ்வொன்று தந்தது.

போர்க்குற்றங்களை முறைப்படி பதிவு செய்யும் அனைத்துலக அமைப்பினைச் சேர்ந்தவர்கள் கடந்த திங்கட் கிழமையன்று தொடர்புகொண்டு பேசினர். போர்க்குற்றங் களுக்கு உள்ளாக்கப்பட்ட அப்பாவி மக்கள் பலருடைய வாக்குமூலங்களை அவர்கள் சேகரித்துவிட்டதாகவும், மேலும் சில திசைகளில் முக்கிய ஆதாரங்கள் இருந்தால்தான் வலுவான, "போர்க்குற்ற வழக்கினை' உருவாக்க முடியுமென் றும் கூறி அதற்கு உதவ முடியுமா என்றும் கேட்டார்கள். அவர்கள் கேட்டவற்றை நான் இங்கு பதிவு செய்கிறேன். ஏனென்றால் இதனைப் படிக்கிற யாருக்கேனும் அவை தொடர்பான சிறு சாட்சியம் சாத்தியப்பட்டாலும்கூட அது இலங்கையை உலக அரங்கில் போர்க்குற்றவாளியாய் நிறுத்திட பேருதவியாய், வலுவான சாட்சியமாய் அமையக்கூடும். பின்வரும் சாட்சியங்களை அவர்கள் கேட்டார்கள், கேட்கிறார்கள்.


நடேசன், புலித்தேவன் ஆகியோர் தலைமையில் வெள்ளைக் கொடியேந்தி சரணடைய வந்த விடுதலைப்புலிகள் ஈவிரக்கமின்றி படுகொலை செய்யப்பட்டது நாம் அறிந்தது. உலகின் பார்வையில் இது மிக முக்கியமான போர்க்குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால் அதை நேரில் கண்டவர்கள் குறிப்பாக சரணடையச் சென்றவர்களில் யாரேனும் உயிர்தப்பியிருந்தால் அவர்களில் ஒருவரது வாக்குமூலமே போதுமானது என்கி றார்கள். உலகில் அவர்கள் எங்கு இருந்தாலும் அவர்களை பாது காப்பாக எல்லா செலவுகளையும் செய்து வெளிநாடு ஒன் றிற்கு அழைத்துச் சென்று வாக்குமூலம் பதிவு செய்ய அவர்கள் தயாராயிருக்கிறார்கள். அதுபோலவே சரணடைய முயன்ற பிற போராளிகளை -குறிப்பாக புலிகளின் அரசியற் பிரிவினரை சிங் கள ராணுவம் சுட்டுக்கொன்றதைக் கண்டவர்கள் யாரேனும் இருந்தால் அவர்களின் வாக்குமூலங்களையும் கேட்கிறார்கள்.இரண்டாவதாக, சிங்கள ராணுவத்தினரால் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டவர்களின் சாட்சியம்.


அப்பாவி ஜீவன்களை வல்லுறவுக்கு உள்ளாக்குவதை மிக மோசமான போர்க்குற்றமாக மேற்குலகம் வரையறுக்கிறது. அமெரிக்காவின் இந்நாள் வெளியுறவுச் செயலர் ஹிலாரி கிளிண்டன்கூட இது விஷயத்தில் மிக உறுதியாய் பேசி வருவதோடு -இலங்கையை "குற்றவாளி நாடு' என்றே ஒரு உரையில் வருணித்தார். ஆனால் பாதிக்கப்பட்ட பெண்களிடமிருந்து இதுதொடர்பான வாக்கு மூலங்களைப் பெறுவது சுலபமானதல்ல. அதேவேளை உலக மனிதாபிமானச் சட்டங்களின்படி இரண்டாம் நிலை சாட்சியங் கள்கூட போதுமானது என்கிறார்கள். அவ்வாறு வல்லுறவுக்கு உள்ளான தமிழ்ப்பெண்கள் தங்களுக்கு நேர்ந்த அக்கொடுமை யை யாரிடமாவது பகிர்ந்துகொண்டிருந்தால் -குறிப்பாக மருத் துவர், தன்னார்வ நிறுவனங்களின் பொறுப்பாளர்கள், அருட் தந்தையர்கள், அருட்சகோதரியர்கள் ஆற்றுப்படுத்துநர் (ஈர்ன்ய்ள்ங்ப்ப்ர்ழ்) இவ்வாறான யாரோடேனும் பகிர்ந்துகொண்டிருந்தால் இவர்கள் முன்வந்து அப்பெண்களுக்காய் சாட்சியம் கூறலாம். அவை அனைத்துலக போர்க்குற்ற/மனிதாபிமான சட்டங்களின் முன் நிற்கும் தன்மை கொண்டவையே என்கிறார்கள்.


அதுபோலவே சரணடைந்த பெண் போராளிகள் பலர் பாலியல் வல்லுறவுக்கு உள்ளாக்கப்பட்டதாய், தொடர்ந்தும் அக்கொடுமை நடந்தேறி வருவதாய் சொல்லப்படுகிறது. அது தொடர்பான நேரடி அல்லது இரண்டாம் நிலை சாட்சியங்களையும் அந்த அமைப்பினர் கேட் கிறார்கள். நான்காவதாக முள்ளிவாய்க்கால், வவுனியா, இன்னபிற இடங்களில் -அதாவது போரின் இறுதி மாதங்களிலும், போருக்குப் பின்னரும் நடந்தேறிய மானுட அவலங்களை தங்கள் கேமராக்களிலும், கை பேசிகளிலுமாய் புகைப்படம் எடுத்தவர்கள் யாரேனும் இருந்தால் -அவர்களது கேமராக்கள், கைபேசி களிலேயே இன்னும் அப்படங்கள் பாதுகாப்பாக பதிவில் இருந்தால் அவை மிக முக்கியமான போர்க்குற்ற ஆதாரங்களாக நிற்கும் வலுக் கொண்டவை. இணையதளங்களில் பேரவலத்தின் நூற்றுக்கணக்கான புகைப்படங்கள் காணக்கிடக் கின்றனதான். ஆனால் அவை சட்டத்தின் முன் ஆதாரங்களாக ஏற்கப்படும் தன்மை கொண்டவை யல்ல.


மாறாக கேமராக்களும், கைபேசிகளும் தீர்க்கமான, உறுதியான ஆதாரங்களாக நிற்கும். அவ்வாறு யாரிடமாவது இருந்தால் அவர்கள் முன்வந்து தருமாறு விரும்பிக் கேட்கிறார்கள்.மேற்சொன்ன நான்கு திசை ஆதாரங்களை யார் தர முன் வந்தாலும் அவர்களது பெயர், விபரங்கள் அனைத்தையும் பூரண ரகசியத்தன்மையோடு பாதுகாத்திட அவர்கள் வாக்குறுதி தருகிறார்கள். இன அழித்தல், போர்க்குற்ற நீதி தேடும் புனித மான வரலாற்று முயற்சியில் யாராவது மேற்சொன்ன சாட்சியங்களாக இருந்தால் வரலாற்றுப் பொறுப்புணர் வுடனும், பொது மானுடக் கடமையுணர்வுடனும் தயவு செய்து தொடர்பு கொள் ளுங்கள்.


எனது முகவரி : ஜெகத் கஸ்பர், 68, லஸ் கோவில் சாலை, மயிலாப்பூர், சென்னை-600 004.


மின் அஞ்சல்: jegath66@yahoo.co.uk.


இணைய தளம் http://www.jegathgaspar.com/.


போர்க்குற்றங்கள் தொடர்பான இச்செயற்பாட்டில் என்னை அணுகியவர்கள் வெள்ளைக்காரர்கள். அவர்தம் பின்னணி என்ன, தமிழர் மீதான இந்த அக்கறைக்கு அரசியற் காரணங்கள் ஏதேனும் இருக்கின்றனவா என்பதையெல்லாம் அறியவேண்டி நேரடியாகவே அவர்களை நான் வினவினேன். எனது கேள்விகளுக்கு அவர்கள் தந்த பதில் ஆறுதலாயும், மிகுந்த நம்பிக்கையாகவும் இருந்தது.இலங்கையை தமிழருக்கெதிரான போர்க்குற்றவாளியாய் நிறுத்தும் இம்முயற்சியில் இயங்கி வரும் இந்த அமைப்பினர் இப்புலத்தில் முன் அனுபவம் கொண்ட நிபுணர்கள்.


ஆனால் இப்பணியை ஏற்றுச் செய்யும்படி இவர்களை அணுகி அதற்கு ஆகும் பெரு நிதி பொறுப்பை ஏற்றுக்கொண்டவர்கள் யார் என்பதுதான் நெகிழ்வான செய்தியாய் இருந்தது.

யுத்தம் 5 -நக்கீரன்கோபால்

கிருஷ்ணாவிடம் ரஜினி என்னைக் காட்டி, ""இவர் காட்டுக்குப் போகமாட் டேன்னுதான் சொன்னார். கலைஞர்ஜி, நான், சிவாஜிசார் மூணு பேரும்தான் கம்ப்பல் பண்ணி, ராஜ்குமார் சாரை காப்பாத்திக் கொண்டுவரணும்னு அனுப்பி வச்சோம்'' என்பதை கன்னடத்தில் சொன்னார்.

கிருஷ்ணா என்னைப் பார்த்து, "yes Gopal. Tell me'' என்றார். மீட்பு முயற்சிகளின் ஆரம்பகட்டத்தி லிருந்து மூன்றாவது பயணம் வரையிலான முன்னேற்றங்களை ஆங்கிலம் கலந்த தமிழில் நான் சொல்லச் சொல்ல, ரஜினி அதை கன்னடத்தில் கிருஷ்ணாவிடம் சொல்லிக் கொண்டிருந்தார். இந்த சந்திப்பும் பேச்சு வார்த்தையும் 2 மணி நேரம் நீடித்தது. கர்நாடக அரசின் மரியாதைகளும் தொடர்ந்தன.புல்லட் புரூஃப் கார் எதற்காக என்று முதல்வர் கிருஷ்ணாவிடம் கேட்டேன்.

அவர் இன்டலிஜன்ஸ் ஏ.டி.ஜி.பி. ஜெயப்பிரகாஷைப் பார்த்து, ""அவருக்கா ஹேலி'' (tell him) என்றார் கன்னடத்தில்.ஜெயப்பிரகாஷ் நன்றாகத் தமிழ் பேசுவார். ""ராஜ்குமார் சாரை நீங்க காப்பாத்துறது இங்கே சிலருக்குப் பிடிக்கலை. அவருக்கு ஏதாவது ஒன்று நடந்தால் இங்கேயும் ஆட்சி இருக்காது. தமிழ்நாட்டிலும் ஆட்சி இருக்காது. நல்லது நடக்கக்கூடாதுன்னு நினைக்கிறவங்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம். அதனாலதான் உங்களுக்கு இத்தனை பாதுகாப்பு + புல்லட் புரூஃப் கார்'' என்று விளக்கினார்.அந்த அறையின் ஏ.சி. சரியான கூலிங். இரண்டு மணி நேரம் அந்தக் குளிரில் இருந்ததால், "பாத்ரூம் எங்கே இருக்கு' என சைகையால் ரஜினியிடம் கேட்டேன். "பாத்ரூம் எல்லிதே' என்று ரஜினி கேட்க... கொஞ்சமும் தயங்காமல் முதல்வர் கிருஷ்ணாவே என்னை அழைத்துக் கொண்டு போய் காட்டினார்.

மறுபடியும் ரஜினி என்னை, "பார்த்தியா' என்பதுபோல பார்த்தார். திரும்பி வந்ததும், ""இது உங்க வீடா?'' என கிருஷ்ணாவிடம் கேட்டேன். ""No..no...This is not my house. This is government's house. For this period, I am staying here'' என்றார் அவசரமாக.ரஜினிக்கு ஒரே சிரிப்பு. ""கோபால் இவ்வளவு தில்லு கூடாது. ஒரு சி.எம்.கிட்டயே உங்க வீடான்னு கேட்கறீங்க''ன்னு இரவு வீடு போகும் வரை சொல்லிக் கொண்டே வந்தார்.

டிபன் பரிமாறப்பட்டது. சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில், ஏ.டி.ஜி.பி. ஜெயப் பிரகாஷ் முதல்வரிடம் சென்று ஏதோ சொன்னார். கிருஷ்ணாவின் முகத்தில் ஆச்சரியம் பரவியது. "wow.. 200 Press peoples. How can he manage them?'' என்று யோசித்தார். விஷயம் இதுதான். வெளியே 200 பத்திரிகையாளர்கள் ரொம்ப நேரமாகக் காத்திருக்கிறார்கள். நான் வெளியே வந்து பேசாமல் அவர்கள் புறப்பட மாட்டார்கள். இதைத்தான் முதல்வரிடம் ஏ.டி.ஜி.பி சொன்னார். நான் பத்திரிகையாளர்களை சந்திக்கத் தயாரானேன். கிருஷ்ணா ஆச்சரி யத்துடன் ரஜினியைப் பார்த்து "ஹேகே சமாளிஸ்தாரே' (இவரு சமாளிச்சுருவாரா?) என்றார். அதற்கு ""காது நோடி'' (பொறுத்துப் பாருங்க) என ரஜினி சொன்னார். நான் முதல்வருக்கு நன்றி தெரிவித்து, அடுத்த முறை ராஜ்குமாரோடு பார்ப்போம் என்று சொல்லிவிட்டு பத்திரிகையாளர்களை சந்திக்க கிளம்பினேன். ரஜினியிடம் கிருஷ்ணா ஏதோ சொன்னார். பிறகு ரஜினி என்னிடம், ""நைட் சொல்றேன் கோபால்'' என்றார்.மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் ஐ.ஜி. சீனிவாசன் என்னை பத்திரிகை யாளர்கள் இருந்த இடத்திற்கு அழைத்துச் சென்றபோது, ""ஏன் சார் இவ்வளவு ஃபோர்ஸ்?'' என்று கேட்டேன். ""உங்க மேலே ஒரு துரும்புகூட படக்கூடாதுங்கிறது எங்க சி.எம். உத்தரவு சார்'' என்றார் அவர். என்னைப் பார்ப்பதற்காகக் காத்திருந்த பத்திரிகையாளர்கள், இத்தனை போலீஸ் பாதுகாப்புடன் வருவதைப் பார்த்ததும் சீற ஆரம்பித்துவிட்டார்கள்.""எங்களை சந்திக்க வருவதற்கு இத்தனை போலீஸ் பாதுகாப்பு எதற்கு?''""நல்ல கேள்வி கேட்டீங்க. இதைத்தான் நானும் உங்க ஐ.ஜி.கிட்டே கேட்டேன். நான் சொன்னதை சொல்லுங்க சார்'' என சீனி வாசனைப் பார்த்து சொன்னேன். அவர் விளக்கி முடித்ததும், நான் பத்திரிகையாளர்களுடன் பேச ஆரம்பித்தேன். உதயா டி.வி.யில் லைவ்வாக ஒளிபரப்பாகிக் கொண்டிருந்தது இந்த சந்திப்பு. எடுத்த எடுப்பிலேயே, ""நம்ம ராஜ்குமாரை உங்க சார்பா இன்று காலையில்தான் பார்த்துவிட்டு வந்தேன்'' என்றேன். அதுவரை இருந்துவந்த பதற்றம் அப்படியே தணிந்தது. அதன்பின் 2 மணி நேரம், நீடித்த சந்திப்பை முதல்வர் கிருஷ்ணாவும் டி.வி.யில் பார்த்திருக்கிறார். பேட்டி முடிந்ததும் பெங்களூரு பத்திரிகை யாளர்கள் பலர் என்னுடன் ஃபோட்டோ எடுத்துக்கொண்டதையும் கிருஷ்ணா பார்த் திருக்கிறார். "200 பத்திரிகையாளர்களை ஒருசேர சமாளித்த இவர், வீரப்பனையும் மசிய வைப்பார்' என்ற நம்பிக்கை அவருக்குள் அழுத்தமாக பதிந்திருப்பதாக கிருஷ்ணாவின் பி.ஏ. சாஸ்திரி என்னிடம் கூறினார்.பிரஸ் மீட் முடிந்ததும் ""ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போயிட்டு இன்னைக்கு நைட் என் வீட்டில்தான் தங்குறோம்'' என்று ரஜினி சொல்லியிருந்தார். பிரஸ் மீட்டுக்குப் பிறகு ரஜினி வீட்டுக்கு என்னை அழைத்துச் சென்றார் அவருடைய உதவி யாளர். ரஜினி என்னிடம், ""இவ்வ ளவு சீரியஸான செக்யூரிட்டி இருக்கும்னு நினைக்கலை கோபால். இங்கே நீங்க தங்குறது பாதுகாப்பில்லையாம். உங்களுக்காக மூணு ஃபைவ் ஸ்டார் ஹோட்டல்கள் புக் பண்ணி, மூணு ஹோட்டல்களிலும் மூன்றடுக்கு பாதுகாப்பு போட்டிருக்காங்க. அதனால நாம ராஜ்குமார் சார் வீட்டுக்குப் போயிட்டு வந்ததும் உங்களை ஹோட்டலில் விட்டுடுறேன். காலையில் பார்க்கலாம்'' என்றார்.ராஜ்குமார் வீட்டில் இருந்தோம். சி.எம். வீட்டில் எம்.எல்.ஏ.க்கள் என்ன மரியாதை தந்தார்களோ அதே மரி யாதையை ராஜ்குமார் குடும் பத்தினர் எனக்குத் தந்தார்கள். ராஜ்குமாரின் மனைவி பர் வதம்மாள், வீட்டை சுற்றிக் காட்டச் சொன்னார். நல்ல வீடுதான். ஆனால், ரசித்துப் பார்க்கும் மனநிலையில் நான் இல்லை. கடத்தப்பட்ட ஆரம்ப நாட்களில் ராஜ்குமார் அந்தக் காட்டில் எப்படி இருந்தார். இப்போது எப்படி இருக்கிறார் என்பதை விளக்கமாகச் சொன் னேன். அவரது குடும்பத்தினர் மனநிலையும் சகஜ நிலைமைக்கு வந்தது. என்னிடம் ராஜ்குமார் பேசிய விஷயங்களை சொன்னபோது, அவர்களுக்கு சந்தோஷம். ராஜ்குமாரும் அவரது குடும்பத்தினரும் மட்டுமே அறிந்திருந்த பல தகவல்களை நான் சொல்லிக்கொண்டிருந்ததுதான் அந்த சந்தோஷத்துக்குக் காரணம். தன்னுடைய அம்மா- அப்பா படத்தை ராஜ்குமார் கேட்டிருந்தார். அதை அவர்களிடம் சொன்னேன். கொடுத்தார்கள். அதன்பின் நடுவில் நான் நிற்க, ஒரு பக்கம் ரஜினி, இன்னொரு பக்கம் ராஜ்குமார் மகன் நிற்க வீட்டு வாசலில் பத்திரிகை யாளர்களை சந்தித்தோம்.ஸ்டார் ஹோட்டலிலிருந்து தம்பி காமராஜுக்கு போன் செய்து விவரங்களை சொல்லி, கலைஞரிடம் தெரிவிக்கச் சொன்னேன். நானும் கலைஞரிடம், ""பேங்களூர் விஷயம் நல்லபடியா போச்சுண்ணே'' என்றேன். பாதுகாப்பு பலமாக இருந்ததால், பெங்களூருவில் இருந்த தம்பி ஜெ.பி., நக்கீரன் ஏஜென்ட் உள்பட யாரையும் சந்திக்க முடியவில்லை. ஹோட்டலில் இருந்த நேரத்தில் ரஜினியிடமிருந்து போன். ""கோபால்.. சி.எம். கிருஷ்ணா ரொம்ப சந்தோஷமா இருக்கிறார். உங்க மேலே அவருக்கு முழு நம்பிக்கை. அதைத் தான் என்கிட்டே அப்ப சொன்னார். நீங்க பிரஸ் மீட் செஞ்ச விதத்தை பார்த்துட்டு ரொம்ப அசந்து போயிருக் கிறார். 'We are selected a right person to rescue Rajkumar' னு சொல்லியிருக்கிறார் கோபால்'' என்றார். ராஜ்குமார் மீட்பு நடவடிக்கை நல்லபடியாக முடியவேண்டும் என்று அதிக அக்கறை எடுத்துக்கொண்டவர் ரஜினி. அதனால், கர்நாடக முதல்வரின் நம்பிக்கை அவருக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. காலையில் பெங்களூரு ஏர்போர்ட்டில் என்னை வழியனுப்பி வைக்க வந்தார்.""கோபால் என்கிட்டே என்ன சொன்னீங்க.. சதாப்தி ரயிலா.. ம்... ஹா...ஹா.. ஹா... இங்கே உங்க பவர் என்னன்னு இப்ப பார்த்தீங்களா?'' என்றார் பெருமை பொங்க. எனக்கும் அவரை நினைத்து பெருமையாக இருந்துச்சு.2000-ம் ஆண்டு பெங்களூரு பயணத்துக்கும், 2001-ம் ஆண்டு பெங்களூரு பயணத்துக்குமிடையில் ஒரு வருடம் தான். ஆனால், எத்தனை மாற்றங்கள்! நான் போன் செய்ததும், என்னாச்சு கோபால் என்று ரஜினி பதறியதற்கு அதுதான் காரணம். ஏனென்றால், ஜெயலலிதா ஆட்சியால் குறி வைக்கப்பட்டது, நக்கீரன் மட்டுமா? ரஜினியும்தானே.....!

திருட்டு மூலிகைச் சாறில் வைகோ...

""முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை யும் மீறி, தமிழகத்துக்கு எதிராக இத்தனை அழிச்சாட்டியம் பண்ணிவரும் கேரளா, திருட்டுத் தனமாக இங்கிருந்து கடத்திச் செல்பவைகள் என்னென்ன தெரியுமா? இந்த அக்கிரமங்களை யெல்லாம் தடுக்கக்கூட திராணியற்று வேடிக்கைப் பார்த்துக்கொண்டிருக்கிறது தமிழகம்.''கன்னியாகுமரியை சேர்ந்த காசி நாடாருக்கு கேரள சுயநலமிகள் மீது அத்தனை கோபம். குமரி மாவட்டத்தின் மருந்துவாழ்மலை குறித்து தவிப்போடு பேசினார் அவர்-""இந்த மலையில் என் கால் படாத இடமே இல்லை.

மலையிலிருந்து திரும்பிய பிறகும் உட லில் மூலிகை மணம் மாறாமலே இருக்கும். இந்தப் பகுதியில் மழை பெய்தால் இங்கிருப்பவர்களைக் காட்டிலும் அதிகமாக சந்தோஷப்படுபவர்கள் கேரள வைத்தியர்கள்தான். ஏனென்றால் மழைக் காலத்தில்தான் மூலிகைகள் செழித்து வளரும். இங்குள்ள மக்கள் கொஞ்சம்பேர்தான். அவர் களுக்கு மூலிகை மருத்துவமெல்லாம் தெரியாது. இங்குள்ள மூலிகைகளின் மகத்துவத்தை எப்படியோ மோப்பம் பிடித்து கேரள வைத்தியர்கள் இங்கே வர ஆரம்பித்தார்கள்.

அப்படி வருபவர்கள் மூட்டை மூட்டையாக மூலிகைகளை பறித்துக்கொண்டு போகிறார்கள். பல ஆண்டு களாகத் தொடர்ந்து நடக்கும் இந்தத் திருட்டை நாங்களும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம். கேரள வைத்தியர்கள் தூக்கியெறியும் பிச்சைக் காசுக்கு இங்குள்ள வனத்துறையினர் விலை போகிறார்கள்'' என்றார் கோபமாக.இதே மலையில் குடில் அமைத்து குடியிருக்கும் சித்தரான விஜயநந்தா சரஸ்வதி "பேசப்படும் வரலாறு' என மருந்துவாழ்மலை குறித்து சிலாகித்தார்.


""ராமாயணத்தைப் படித்தவர்களுக்கும், அனுமன் பக்தர்களுக்கும் இம்மலையின் சிறப்புகள் தெரியாமல் இருக்காது. இலங்கையில் ராவணனோடு நடந்த போரில் மூர்ச்சையாகிக் கிடந்த லட்சுமணனைக் காப்பாற்ற இமயமலையிலிருந்து அமிர்தசஞ்சீவி மூலிகை மலையைப் பெயர்த்துக்கொண்டு பறந்து வந்தார் அனுமன். அந்த தெய்வீக மூலிகையின் வாசத்தை நுகர்ந்துதான் உயிர் பிழைத்தார் லட்சுமணன். அதே மலையோடு அனுமன் மீண்டும் இமயமலைக்குப் பறந்தபோது அதன் ஒரு பகுதி கீழே விழுந்தது. அதுதான் இந்த மருந்துவாழ்மலை என்றவர்...""பதினஞ்சு வருஷத்துக்கு முன்னவரை 109 வகையிலான சக்தி நிறைந்த மூலிகைகள் இம்மலையில் செழித்துக் கிடந்தன. குறிப்பாக ஜலத்தரட்டி -இந்த மூலிகையைச் சாப்பிட்டால் மூன்று நாட்களுக்கு பசியே வராது.

மிர்த சஞ்சீவி மூலிகை -செத்த உடம்புக்கு மீண்டும் உயிர் கொடுக்கும். மயிலாடு பச்சை -உடல் வேதனையைப் போக்கும். விராலிக்கு செம்பை தங்கம் ஆக்கும் சக்தி உண்டு. ஆணை நெறிஞ்சி -கிட்னியில் உள்ள கல்லைக் கரைக்கும். பெரிய நங்கை- விஷத்தை முறிக்கும். நீரிழிவு நோய்க்கு சிறிய நங்கை. நரம்பு, தசைப்பிடிப்பு குணமாக சிவனார் வேம்பு. இப்படி 109 வகை மூலிகைகளோடு இருந்த மலையில் இப்போது இருப்பது 51 வகை மூலிகைகள்தான்.

மற்ற முக்கியமான மூலிகைகளையெல்லாம் கேரள வைத்தியர்கள் வேரோடு பிடுங்கிட்டுப் போயிட்டாங்க'' என்றார் வேதனை யுடன்.கேரளாவில் பிரசித்தி பெற்ற கோட்டக்கல் ஆரிய வைத்திய சாலையின் நிர்வாகி ஒருவரிடம் பேசினோம். ""மருந்து மூலிகைகள் பெரும்பாலான மலையடிவாரங்களில் கிடைக்கவே செய்கின்றன. ஆனால் இறக்கும் தருவாயில் உள்ளவர்களுக்கும் உயிர் கொடுக்கக்கூடிய மூலிகைகள் மருந்துவாழ் மலையில்தான் கிடைக் கின்றன. வட இந்தியாவிலிருந்து எங்களிடம் சிகிச்சைக்கு வருபவர்கள், "நீங்கள் பயன்படுத்துவது இமயமலை யிலிருந்து தருவித்த மூலிகைகளா? ' என்று மறக்காமல் கேட்பார்கள். அடுத்து, "மருந்துவாழ்மலை மூலிகைகளைக் கொண்டு சிகிச்சையளிப் பீர்களா?' என்றும் குறிப்பிட்டுக் கேட்பார்கள். எங்களிடமும் மருந்துவாழ் மலை மூலிகைகளிலிருந்து தயாரான எண்ணெய்கள் உள்ளன. அவைகள் நாங்கள் பணம் கொடுத்து வாங் கியவை'' என்று பெருமிதத்துடன் கூறினார்.

நாராயண சைத்தன்யா என்பவர்...""இதுல கொடுமை என் னன்னா... இங்கேயிருந்து கடத்திட்டுப் போற மூலிகைய வச்சு எண்ணெய் தயாரிச்சு, கோடி கோடியா சம்பாதிக்குறவங்க தலையில தேய்ச்சு, உடம்பு முழுக்க ஊத்தி அலுப்புதீர மசாஜ் பண்ணி விட்டு "ராயல் ட்ரீட்மெண்ட்' என்று லட்சக்கணக்குல கறந்துடறாங்க இந்தக் கேரள வைத்தியருங்க. இங்கே தமிழ்நாட்டுல நடிச்சு சம்பாதிக்கிற ரஜினிக்கு கேரள வைத்தியம்தான் பிடிச்சிருக்கு. உளிச்சல், பிழிச்சல்னு சகலமும் பண்ணிட்டு வர்றாரு."பேச்சும் மூச்சும் தமிழ்'னு சொல்லிட்டிருக்கிற வைகோவும் கூட அப்பப்ப கேரளாவுக்குப்போயி மசாஜ் பண்ணிட்டு ஃப்ரெஷ்ஷா வர்றாரு. மற்ற மாநில வி.வி.ஐ.பி.க் களும்கூட கேரள வைத்தியம்னா "ஆ'ன்னு வாய பொளக்குறாங்க.

பாருங்களேன்... நம்ம தமிழ்நாட்டு மூலிகைய வச்சு... கேரளாக்காரன் என்னமா பொழைக்குறான். இதெல்லாம் திருட்டு மூலிகைன்னு தெரிஞ்சோ, தெரியாமலோ நம்மாளுங்களும் அங்கே போய்தான் பணத்தைக் கொட்டுறாங்க.52 வருஷமா இந்த மலைலதான் வாசம். இங்கே கிடைக்கிற மூலிகை இமயமலையைத் தவிர வேற எங்கேயும் கிடைக்காது. அத்தனை சிறப்புள்ள மூலிகைகளை இங்கேயிருந்து மூட்டை மூட்டையா கடத்திட்டுப் போறாங்க'' என்று பெருமூச்சுவிட்டார்."மூலிகைகளை மட்டுமல்ல... மலையையே பெயர்த்துக்கொண்டு போகிறார்கள் கேரள வைத்தியர்கள்!' -பலரும் ஆதங்கத்தோடு சொன்ன இந்தக் குற்றச்சாட்டை குமரி மாவட்ட வனத்துறை அலுவலர் சுந்தர்ராஜ் முன் வைத்தோம்.""எங்களால முடிஞ்ச அளவுக்கு தடுக்க முயற்சி பண்ணுறோம்.

கேரளாவுக்கு அரிசி, மணல் கடத்துற மாதிரி மூலிகைகளையும் கடத்துறாங்கன்னு எழுதி இதைப் பெரிய விவகாரமா ஆக்கிடாதீங்க'' என்று சிரித்தார்.தமிழகத்திலிருந்து அரிய மூலிகைகளைத் திருடிச் சென்று உலக அளவில் கல்லா கட்டிக்கொண் டிருக்கிறது கேரளா! அட, கொடுமையே!

உங்கள் ஊரிலும் "சைபர்' குற்றவாளிகள்!

ள்ளி, கல்லூரி மாணவர் களிலிருந்து பல் விழுந்த கிழங்கள் வரை திரும்பத் திரும்பப் பார்த்து விவாதிக்கும் அந்த இரண்டு காட்சிகள் நம் பார்வைக்கும் வந்தன. விருதுநகரில் தான் இந்த இரட்டை பரபரப்பு.ஒன்று- ஆசிரியர் மாணவியை மிரட்டி உறவு கொள்வதாக சித்தரிக்கப்பட்டிருந்தது. அதில் அந்த இளம்பெண் தொடக்கத்திலிருந்து முடிவு வரை அழுதபடியே இருக்கிறாள். கையெடுத்துக் கும்பிட்டு கதறுகிறாள். ஆனாலும், அந்த முரட்டு ஆண் "எனது செல்ஃபோன் உனது நிர்வாணத்தையும் படம் பிடித்து விட்டது. நடந்ததை வெளியே சொன்னால் உன்னைக் கேவலப்படுத்திவிடுவேன்' என்று பயமுறுத்துவது வசனமில்லாமல் பதிவாகியிருக்கிறது.
அக்காட்சி யின் பின்னணியில் சினிமா பாடல் ஒலிக்கிறது. இந்தக் க்ளிப்பைத்தான், "ஜீன்ஸ் போட்ருக்குற அந்தப் புள்ள நம்ம ஊரு. வாத்தியாரு மூஞ்சிதான் சரியா விழல' என்று அக்கறையோடு பேசுகிறது பப்ளிக்.இன்னொன்று- ஆசிரியை நம்மிடம் சொன்னது. அதில் அந்தப் பெண் அவனிடம், "என்ன நெனச்சுக்கிட்டிருக்குற நீ? நீ பாட் டுக்கு வீடியோ எடுக்குற' என்று கோபிக்கிறாள்.
அவனோ, அவள் பேச்சையும் மீறி தான் எடுத்த காட்சி களை அவளுக்கே காண்பிக்கிறான். அந்தக் கண்றாவியை அவளும் சிரித்தபடி ரசிக்கிறாள். பிறகு "மறக்காம அழிச்சிடு' என்று அவனிடம் கெஞ்சு கிறாள். இருவரின் பேச்சும் துல்லியமாகக் கேட்கிறது. ஒரு இடத்தில் அந்த ஆண், "நான் சிவகாசி பரம்பரையாக்கும். ஷட்டர ஒடச்சிட்டு உள்ளே புகுந்துருவேன்' என்று அவளிடம் ஜம்பமடிக்கிறான். இதுதான் "உள்ளூர் ஆசிரியை' என்ற டைட்டிலோடு ஒவ்வொரு செல்ஃபோனாக உலா வருகிறது.இந்த இரண்டு கவரேஜையும் இண்டர்நெட் டிலும் ஏற்றி விட்டு உலகறியச் செய்து விட்டார்கள். விருதுநகரின் காஸ்ட்லி பள்ளி ஒன்றின் ஆசிரியைதான் செல்ஃபோனில் சிக்கியிருக்கிறார் என ஊரெங்கும் பேச்சு.
"கேமரா செல்ஃபோன் விஷயத்தில் இன் னும் போதிய விழிப்புணர்வு இல்லையே பெண்களுக்கு?' -சமூக ஆர்வலர் விஜயகுமாரிடம் கேட் டோம்.""கத்தி, துப்பாக்கியை விட மோசமான ஆயுதம் இந்தக் கேமரா செல்ஃபோன். எதையாச் சும் படம் எடுக்கணும்னு அவ னவன் துடியாத் துடிக்கிறான். இந்த மாதிரி ஆணுங்களுக்கு, பொண்ணுங்க வாழ்க்கையே வௌயாட்டாப் போச்சு. ரெகவரி சாஃப்ட்வேர்ல்லாம் வந்து டெக் னாலஜிதான் ரொம்ப முன் னேறிடுச்சே. போன்ல இந்த மாதிரி படம் எடுத்தவன் அழிச்சிட்டுக் கொடுத்தாக்கூட, அதுக்கு உயிர் கொடுத்து, அதயே மெமரி கார்டுல ஏத்தி விக்கிற சர்வீஸ் சென்டர்தான் நெறய இருக்கே. அதுவும் பக்காவான வியாபாரத் தந்திரத்தோட "விருதுநகர் வங்கி யின் பெண் அலுவலர், உங்க ஊரு டீச்சர், பக்கத்து ஊரு மாணவி'ன்னு இவங்களே ஒரு தலைப்பைப் போட்டுல்ல ஜாம் ஜாம்னு தொழில் பண்ணுறாங்க. "லோக் கல் சமாச்சாரம்'னா சனங்களுக்கு ஒரு கிக் இருக்கும்னு வீக்னஸ தெரிஞ்சுக்கிட்டுல்ல அடிக்கி றாங்க.
நெட்ல கூட தஞ்சாவூர் மாமி, சென்னை ஆன்ட்டி, மதுரை மல்லிகான்னு ஊரும் பேரும் போட்டுத்தானே சுத்தல்ல விட றாங்க. எங்கேயோ, யாரோ செய்யற தப்புக்காக எந்த ஊரோ, எந்தப் பள்ளிக்கூடமோ அவமானப்பட்டு நிக்கிதுன்னா இந்தக் கொடுமைய என்னன்னு சொல்றது?நாலு சுவத்துக்குள்ள நடக்குறத அவங்களே வீடியோ எடுத்து மாட்டிக்குறது ஒரு ரகம். பொதுவான பார்க்ல, பீச்சுல, டாய்லெட்ல, கோயில் குளத்துல பெண்கள் அப்படி இப்படி இருக்கும் போது ஒளிஞ்சு நின்னு எடுத்து அதயும் பிசினஸ் பண்ணுறது இன்னொரு ரகம்'' என்றார்.18 வருடங் களுக்கு முன் தமிழ் நாட்டில் கால்பதித்த நெதர்லாந்துக்காரன் வில்லியம்ஸ் இது போன்ற குற்றங்களை ஒரு தொழிலாகவே பண்ணி வந்தான். குழந்தைகளை வைத்து ஆபாச படம் எடுத்து இணையதளங்களில் வெளியிட்ட அவன், இன்டர்போல் போலீஸ் அளித்த தகவலின் பேரில் இப்போதுதான் கைதாகியிருக்கிறான் சென்னையில். இந் நிலையில் "சைபர் குற்றங்கள் சிவகாசியிலும், கோரமுகம் காட்டி மிரட்டுகின்றனவே?' என்றோம் சிவகாசி டி.எஸ்.பி. ராஜகோபாலிடம்,""தற்செயலாக அந்த டீச்சர் கிளிப்பிங்ஸை நானும் பார்க்க நேர்ந்தது. அது அந்த ஸ்கூல் டீச்சர்தானா என்பதை முதலில் கண்டுபிடித்து வீடியோ எடுத்த குற்றவாளியைப் பிடிக்க வேண்டும். சம்பந்தப்பட்ட பள்ளியிலிருந்து புகார் தந்தால்தான், சென்னையிலிருக்கும் சைபர் கிரைம் போலீசுக்கு ஃபார்வர்ட் பண்ணி, லோக்கல் ஸ்டேஷன்ல எஃப்.ஐ.ஆர். போட்டு குற்றவாளியை தேடிப் பிடிக்க முடியும்'' என்று விளக்கினார்.அவமானத்துக்கு அஞ்சும் நம் கலாச்சாரம் சீரழிந்து வருகிறதே!

மன்மத குருக்களின் புதுப்புது சி.டி.!

காஞ்சி மன்மத குருக்கள் தேவநாதன்... போலீஸ் கஸ்டடியின் போது கொடுத்த கிளுகிளு வாக்குமூலத்தை நாம் கடந்த நக்கீரன் இதழில் வெளியிட்டிருந்தோம். இந்தக் கட்டுரையைப் படித்த பலரும்... ""கோயிலுக்குப் பிள்ளைக் குட்டிகளோட போவதற்கே பயமாக இருக்கிறது.
இப்படிப்பட்ட மன்மத மிருகத்தின் முகத்திரையைக் கிழிக்கும் நக்கீரனுக்கு நன்றிகள்'' என்ற ரீதியில் கடிதம் மூலமாகவும் போன்மூலமாகவும் தங்கள் மனதைத் திறந்துகொண்டி ருக்கிறார்கள்.அதேநேரம் இந்த மன்மத குருக்கள் விவகாரங்களைத் துருவத் துருவ ஏகப்பட்ட கண்றாவி சி.டி.க் களும்... கிளுகிளுத் தகவல்களும் கிடைத்தபடியே இருக்கிறது.’’தேவநாத குருக்கள் எடுத்த ஒரு சில சி.டி.க்கள்தான் வெளியே தெரியவந்திருக்கிறது. ஆனால் அவன் எடுத்த கண்றாவிப் படங்களின் எண்ணிக்கை அதிகம். அது எல்லாம் தற்போது சி.டி. உலகில் சக்கைபோடு போட்டு... விற்றுக் கொண்டிருக்கிறது’’ என்றபடி... நமது காஞ்சிபுர நண்பர் ஒருவர்.... தேவநாதன் எடுத்த மிகப் பெரிய செக்ஸ் ஆல்பத்தையே நம்மிடம் கொடுத்தார்.
அதைத் திறந்துபார்த்த நாம்... அதிர்ச்சியில் உறைந்தோம்."காமம் இறைவன் கொடுத்த வரம்... அது தவறானது அல்ல' என்றெல்லாம் வாக்குமூலம் கொடுத்த கில்லாடிக் குருக்கள் தேவநாதன்... ஆன்மீகத்தையும் இறைவனையும் கோயிலையும் எந்த அளவுக்கு சிறுமைப்படுத்தியிருக்கிறான் என்பதற்கு... அந்த சி.டி.யில் இருந்த சில வக்கிரக்காட்சிகளே உதாரணம்.
அதில் உள்ள சில காட்சிகள்...
கோயில் கருவறைக்குள் அந்த லேடி புரபசர் நெற்றியில் திருநீறு, குங்குமத்தோடு நிற்கிறார். தேவநாதனைப் பார்த்து குறும்பாய் நாக்கைத் துருத்தும் அவர்... அம்மன் சிலைபோல் ஒரு கையயைத் தூக்கி குருக்களை ஆசிர்வதிப்பது போல் போஸ் கொடுக்கிறார். அவரை லாவகமாக கைகளால் வளைத்து... மூலஸ்தான சிவலிங்கத்தின் அருகிலேயே சுவற்றில் சாய்க்க, கருவறையே பள்ளியறையாகிறது. இதைவிடக் கொடுமை.. சிவலிங்கத்தின் பின்னால் தான் பயன்படுத்திய நிரோத்தை அலட்சியமாய் வீசியெறிகிறான் அந்தக் கேடுகெட்ட குருக்கள்.
அடுத்து கொஞ்சம் தடிமனான பூக்காரப் பெண்மணி கருவறைக்குள் நிற்கிறார். அவளிடமும் மேற்சொன்ன பாணியில் விளையாடுகிறான் தேவநாதன். அப்போது யாரோ அர்ச்சனைக்கு வர... அந்த பெண்மணியைக் கொஞ்சம் ஓரமாக நிறுத்திவிட்டு அதே கையோடு அர்ச்சனைத் தட்டை வாங்கி... அவசரகதியில் பூஜையை முடித்துக் கொடுத்துவிட்டு... மறுபடியும் சல்லாபத்தை உறுத்தலே இல்லாமல் தொடருகிறான்.லாட்ஜ் அறையில் ஒரு தடிமனானப் பெண்ணுடன் ஜலக்கிரீடை, தனது மனைவியுடன் அடிக்கும் கூத்துக்கள் எனக் கண்களைக் கூசும்படி விரிகிறது அந்த டி.வி.டி. இப்படி ஏகப்பட்ட பெண்களை வளைத்து...அவன் எடுத்த படங்கள் அத்தனையும் அவனது வக்கிரத்தின் வெளிப் பாடுகளாக இருக்கிறது.
காஞ்சிபுரம் ராஜவீதியிலேயே இருக்கும் அந்த பிரபல மருத்துவமனையை நடத்தும் டாக்டரின் மனைவி மற்றும் அதே மருத்துவமனையில் பணிபுரியும் ஒரு நர்ஸ்... என பலருடன் அவன் சல்லாபிக்கும் புதுப்புது சி.டி.க் காட்சிகள் இன்னும் வந்தபடியே இருக்கிறது.கருவறைக்குள் தேவநாதனுடன் சல்லாபித்த அந்தப் பெண் புரபசர் ஏற்கனவே திருமணமானவர். அவரது கணவரும் கல்லூரி புரபசர்தான். இவர்களுக்கு சின்னவயதுக் குழந்தைகள் இருவர் இருக்கிறார்கள். அதேபோல் தேவநாதனின் இன் னொரு கருவறைப் பார்ட்னரான பூக்காரப் பெண்மணிக்கு... வயதுக்கு வந்த இரண்டு பெண்பிள்ளைகள் உண்டு.
இவரது கணவர் ஒரு தொழுநோயாளி என்பது குறிப்பிடத்தக்கது. போலீஸ் தங்களைக் குறி வைத்ததை அறிந்ததும்... அந்த லேடி புரபசரும் பூக்காரப் பெண்மணியும் குடும்பத்தோடு தங்கள் வீட்டைக் காலி செய்துவிட்டு... தலைமறை வாகிவிட்டார்கள். இந்த வழக்கை விசாரித்து வரும் டி.எஸ்.பி. சமுத்திரக்கனி நம்மிடம்,“""தமிழகத்தையே அதிர வைத்திருக்கிற மிக முக்கியமான வழக்கு இது. குருக்கள் தேவநாத னோடு இன்னும் இருபது பேருக்கு மேல் இந்த வழக்கில் தொடர் புள்ளவர்களாக இருக்கிறார்கள். அத்தனை பேரும் சட்டத்தின் முன் நிறுத்தப்படுவார்கள்'' என்கிறார் அழுத்தமாக.சொன்னது போலவே... குருக்களின் லீலைகளை வெளியே பரப்பியதாக... செல்போன் ரிப்பேர் கடைக்காரர்களான பாலாஜியையும் செந்திலையும் ஏற்கனவே கைது செய்திருக்கும் போலீஸ்... தற்போது சச்சின் என்பவனையும் கைது பண்ணி "உள்ளே' தள்ளியிருக்கிறது. இந்த சச்சின்தான் குருக்களின் ஆபாச சி.டி.க்களை சென்னைக்கு கொண்டுவந்து... "எக்ஸ்பி டாட் காம்' மற்றும் "டெபோனர் பிளாக்' ஆகிய இணையதளங்களில் அப்லோடு செய்தவனாம்.நம்மிடம் மனம் திறந்து பேசிய காஞ்சிபுரம் மாதவ குருக்கள்...’’"குருக்கள்கள் ஒன்றும் தெய்வப் பிறவி களல்ல.
அவாளும் சராசரி மனுசாதான். அவாளுக்கும் ஆசாபாசங்கள் இருக்கு. எனக்கு தண்ணியடிச்சிட்டு... மாட்டுக்கறி சாப்பிட்டுண்டு... பான்பராக் போட்டபடி கோயில்ல அர்ச்சனை பண்ற அர்ச்சகர்களை நல்லாத் தெரியும். ஏன் கோயில்லயே சரச சல்லாபம் நடத்தறவாளையும் தெரியும். ஆனா..அவாள்லாம் கமுக்கமா நடந்துக்கறா. மண்ணைத் திண்ணாலும் மறைவாத் திண்ண னும்னு சொல்வா. அதை அந்தப் படுபாவி தேவநாதன் மறந் துட்டான். அதனாலதான் இவ்வளவு அசிங்கங்களும். அவனால குருக்கள்னாலே இப்ப கேவலமா பாக்கறா. முதுகுக்குப் பின்னாடி சிரிக்கறா. எங்க வீடுகள்லயும் எங்களைப் பத்தி கேவலமாப் பாக்கறா'' என்கிறார் ஆதங்கமாய்.மன்மத குருக்களை மேலும் தங்கள் கஸ்டடியில் எடுத்து விசாரிப்பதில் தீவிரம் காட்டிவருகிறது போலீஸ்.
இன்னும் என்னென்ன கிளம்பப்போகிறதோ... மன்மத குருக்கள் விவகாரத்தில்...

கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான்: ராஜீவ்காந்தி கொலைவழக்கு தள்ளிவைப்பு

சென்னையை அடுத்த ஸ்ரீபெரும்புதூரில் கடந்த 1991-ம் ஆண்டு மே மாதம் ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்டார். இந்த வழக்கில் விடுதலைப் புலிகள் இயக்கத்தின் தலைவர் பிரபாகரன் முதல் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டார். அவருடன் பொட்டு அம்மான், அகிலா, நளினி, முருகன் உட்பட பலர் குற்றவாளியாகச் சேர்க்கப்பட்டனர்.
சி.பி.ஐ. விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட இந்த வழக்கு, சென்னையை அடுத்த பூந்தமல்லியில் தனியாக அமைக்கப்பட்ட தடா கோர்ட்டில் விசாரிக்கப்பட்டது.
பிரபாகரன், பொட்டு அம்மான், அகிலா ஆகியோர் சி.பி.ஐ.யிடம் சிக்கவில்லை. எனவே வழக்கு பிரிக்கப்பட்டது. கைது செய்யப்பட்ட நளினி, முருகன் உட்பட சிலர் மீதான வழக்கு மட்டும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டது. அவர்கள் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடத்தப்பட்டது.
இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு தண்டனை விதிக்கப்பட்டது.
கடைசிவரை பிடிபடாத பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் மீதான வழக்கு 1992-ம் ஆண்டு ஆகஸ்டு மாதம் தனியாக பிரிக்கப்பட்டது. இந்த வழக்கு, சென்னை முதலாம் கூடுதல் செசன்சு கோர்ட்டில் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 17 ஆண்டுகளாக பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு தொடர்ந்து விசாரணைக்கு எடுக்கப்படுகிறது. வழக்கின் முக்கியத்துவம் கருதி நீதிபதியின் அறையில் இந்த வழக்கின் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் பிரபாகரன், பொட்டு அம்மான் மீதான வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தது. முதலாம் தடா கோர்ட்டு நீதிபதி பி.ராமலிங்கம் விடுமுறையில் சென்றிருப்பதால், 6-வது கூடுதல் செசன்சு கோர்ட்டு நீதிபதி எம்.ஏ.ஆனந்தகுமார் அறையில் நேற்று காலையில் விசாரணை நடந்தது.
சி.பி.ஐ. அதிகாரி மற்றும் வக்கீல் ஆஜராகி 4 மூலைகளிலும் சீலிட்ட கவர் ஒன்றை தாக்கல் செய்தனர். அதைத் தொடர்ந்து அடுத்த கட்ட விசாரணையை அடுத்த ஆண்டு பிப்ரவரி 3-ம் வாரத்துக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.
இலங்கையில் நடந்த போரில் பிரபாகரன், பொட்டு அம்மான் ஆகியோர் கொல்லப்பட்டதாக தகவல் வெளியாகின. அவர்கள் இறப்பு சான்றிதழை சி.பி.ஐ. தாக்கல் செய்தால்தான் வழக்கு முடிவுக்கு வரும்.
நேற்றைய விசாரணையில் அவர்களின் இறப்பு சான்றிதழ் தாக்கல் செய்யப்படவில்லை என்று கோர்ட்டு வட்டாரம் தெரிவித்தது. பிரபாகரனின் இறப்பு சான்றிதழை இலங்கை அரசு கொடுக்க வேண்டும். எனவே இவர்களின் இறப்பு சான்றிதழைக் கேட்டு இலங்கை அரசிடம் சி.பி.ஐ. தொடர்ந்து வற்புறுத்தி வருகிறது.

ரகசிய குறியீடு இல்லாத 2.5 கோடி செல்போன்கள் செயலிழக்கின்றன!

இந்தியா முழுவதும் உள்ள, ரகசிய குறியீட்டு எண் இல்லாத இரண்டரை கோடி செல்போன்களின் இணைப்புகள் நாளை மறுநாள் முதல் துண்டிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது. கொரியா, சீனா போன்ற நாடுகளிலிருந்து மலிவு விலை செல்போன்கள் ஏராளமாக இறக்குமதி செய்யப்படுகின்றன. விற்பனையிலும் இவைதான் இன்று முன்னணியில் உள்ளது!செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. (சர்வதேச செல்போன் குறியீட்டு எண்) என்ற ரகசிய குறியீட்டு எண் உள்ளது. இந்த எண் 15 இலக்கங்களை கொண்டது ஆகும்.
ஒவ்வொரு செல்போனுக்கும் ஒவ்வொரு ஐ.எம்.இ.ஐ. குறியீட்டு எண் இருக்கும்.ஒரு செல்போன் எந்த இடத்தில் இருந்து பேசப்படுகிறது என்பதை இந்த எண்ணின் மூலம்தான் கண்டுபிடிக்க முடியும். மேலும் செல்போன் தொலைந்து விட்டால், உரிமையாளர் அதன் செயல்பாட்டை நிறுத்தி வைக்கவும் இந்த எண்தான் உதவும்.ஆனால் கொரியா, சீனாவில் இருந்து கள்ளத்தனமாக கொண்டு வந்து விற்கப்படும் ஏராளமான செல்போன்களில் ஐ.எம்.இ.ஐ. என்ற சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இருப்பது இல்லை. இந்தியா முழுவதும், ரகசிய குறியீட்டு எண் இல்லாத சுமார் 2.5 கோடி செல்போன்கள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது.
இந்த குறியீட்டு எண் இல்லாத செல்போன்களை பயன்படுத்துவதில் பாதுகாப்பு தொடர்பான பல பிரச்சினைகள் ஏற்படுகின்றன. இந்த வகை செல்போன்களில் இருந்து பேசும் போது எங்கிருந்து பேசுகிறார்கள் என்பதை கண்டுபிடிக்க முடியாது. இது தீவிரவாதிகளுக்கு மிகவும் வசதியாக போய் விடுகிறது.எனவே, சமீப காலமாக தீவிரவாத அச்சுறுத்தல் அதிகரித்து இருப்பதாலும், நாட்டின் பாதுகாப்பு கருதியும் சர்வதேச குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் செயல்பாட்டை முடக்க மத்திய அரசு முடிவு செய்தது.இதைத்தொடர்ந்து, அத்தகைய செல்போன் வைத்திருப்பவர்கள் அதை மாற்றிக் கொள்வதற்கு வசதியாக வருகிற 30-ந் தேதி (திங்கட்கிழமை) வரை 'கெடு' விதித்திருந்தது மத்திய அரசு.அந்த 'கெடு' முடிய இன்னும் 2 நாட்களே உள்ளன. எனவே, திங்கட்கிழமை நள்ளிரவு 12 மணி முதல், சர்வதேச ரகசிய குறியீட்டு எண் இல்லாத செல்போன்களின் இணைப்புகள் துண்டிக்கப்படும். இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட செல்போன் நிறுவனங்களுக்கு தொலைத்தொடர்பு துறை ஏற்கனவே உத்தரவிட்டு உள்ளது.செல்போன் உபயோகிப்பாளர்கள், 57886 என்ற எண்ணுக்கு குறுந்தகவல் (எஸ்.எம்.எஸ்.) அனுப்பி தங்கள் செல்போனின் ரகசிய குறியீட்டு எண்ணை உறுதி செய்து கொள்ளலாம்.

விஜய் படத்துக்கு பிரபாகரன் சொன்ன டைட்டில்!

தம்பி படத்தை அடுத்து ’கோபம்’ காட்டவிருந்தார் சீமான். ஆனால், சூழ்நிலை அவரை ‘வாழ்த்துகள்’சொல்ல வைத்தது.
இந்த காலகட்டத்தில் சீமான் விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரனை சந்தித்தபோது, ‘’கோபம்’ என்று படம் எடுக்கப்போகிறேன்’ என்று சீமான் சொல்ல,பிரபாகரனுடன் பக்கத்தில் இருந்தவர் ‘சினம்’ என்று தலைப்பு வையுங்கள் என்றாராம்.
அதற்கு பிரபாகரன், ‘கோபம் என்று சொன்னால்தான் அதில் அழுத்தம் இருக்கிறது. ஒரு வேகம் இருக்கிறது. அந்த தலைப்பிலேயே படம் எடுங்கள். அதற்கு என் வாழ்த்துக்கள். ஆனால் வாழ்த்துக்கள் மாதிரி மென்மையான படம் எடுக்க வேண்டாம்’என்று சொன்னாராம்.
அதன்படி சீமான் ‘கோபம்’காட்ட முடிவெடுத்துவிட்டார். நடிகர் விஜய்யும் சீமானுடம் இணைய முடிவெடுத்துவிட்டார்.
படப்பிடிப்புதான் எப்போது துவங்கப்போகிறது என்று தெரியவில்லை.

சுடாத நெருப்பும் சுடுகின்ற கண்ணீரும்….. மாவீரர்கள்

மாவீரர்களை நினைவு கொள்வதற்கான உரிமையை மீட்க முனைவோமா?
தமிழீழ தேசத்து மக்களைப் பொறுத்தவரை மாவீரர் நாள் என்பது புனிதர்களைப் பூசிக்கின்ற திருநாள்.
நவம்பர் 27 என்றவுடன் உலகெங்கும் வாழும் தமிழீழ தேசத்தவர்களுக்கு மாவீரர் நாள் தான் நினைவுக்கு வரும்.
ஆனால், இந்த நாளை தாயகத்தில் வெளிப்படையாக அனுஷ்டிக்க முடியாத துர்ப்பாக்கிய நிலை இன்று ஏற்பட்டிருக்கிறது.
* சுற்றிலும் இராணுவக் கெடுபிடிகள் நிறைந்துள்ள தமிழர் தாயகத்தில் மாவீரர்களின் நினைவைப் போற்றும் நிகழ்வுகளை நடத்த முடியாத நிலை ஏற்பட்டிருப்பது துரதிஷ்டவசமானது. தமிழீழ விடுதலைப் போராட்டம் கூர்மை பெற்று மாவீரர் நாளை அனுஷ்டிக்க ஆரம்பித்த காலத்தில் இருந்து இதுவரை இப்படியொரு இக்கட்டான நிலை தமிழ் மக்களுக்கு வந்ததில்லை. காலத்துக்குக் காலம் புலிகளின் தளப் பிரதேசங்கள் மாறிய போதும் புலிகளின் கட்டுப்பாட்டில் ஏதாவதொரு பிரதேசம் இருந்து கொண்டேயிருந்தது. அங்கெல்லாம் மாவீரர் நாள் நிகழ்வுகள் உணர்வுபூர்வமாக நடந்தேறி வந்தன. ஆனால், இன்றைய நிலையில் தாயகத்தில் ஒரு துண்டு நிலத்தில் கூட மாவீரர் நாளை சுதந்திரமான முறையில் அனுஷ்;டிக்க முடியாதளவுக்கு சிங்களத்தின் இரும்புக் கரங்கள் அழுத்திப் பிடித்துள்ளன.
மாவீரர் நாள் பற்றிய சிந்தனைகளே தமிழர்களுக்கு வரக் கூடாது என்பதற்காக பல்வேறு வாசல்களையும் திறந்து விடப் படைத்தரப்பும் அரசாங்கமும் தயாராக இருக்கின்றன. ஆனாலும் தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மாவீரர் நாளை அழித்து விட முடியாது.
அவர்களின் மனங்களில் இருந்து மாவீரர்களின் நினைவுகளை துடைத்து விட முடியாது.
தாயகத்தில் வாழுகின்ற மக்கள் ஒவ்வொருவரும் மாவீரர் நாளை உணர்வு பூர்வமாக அனுஷ்டிப்பதற்காகக் காத்திருக்கின்றனர்.
அவரவர் மனங்களில் தீபம் ஏற்றி மாவீரர்களை நினைவு கொள்வதற்காகக் காத்திருக்கின்றனர்.
ஏனெனில், மாவீரர் ஒவ்வொருவரினதும் மரணங்கள் சாதாரணமானவை அல்ல. அவர்கள் யாரும் தமக்காக மடிந்தவர்கள் அல்ல.
மரணம் நிகழப் போவதை அறிந்து கொண்டே போர்க்களம் போனவர்கள்.
* சாவைச் தெரிந்து கொண்டே சரித்திரமானவர்கள். தமக்காகவே மாவீரர்கள் மரணத்தைத் தழுவினார்கள் என்ற உணர்வு ஒவ்வொரு தமிழனின் மனதிலும் படிந்து போயிருக்கிறது. சிலர் இதை வெளிப்படையாக காண்பிக்கின்றனர். பலர் அதை உள்ளுக்குள் போட்டுப் புதைத்து வைத்து மௌனமாக அழுகின்றனர். இதனால் தான் சிங்கள தேசத்தினால் மாவீரர்களின் நினைவுகளை தமிழ் மக்களிடமிருந்து பிரிக்க முடியாதிருக்கிறது.
மாவீரர்கள் பிற நாட்டில் இருந்தோ – வேற்றுலகில் இருந்தோ வந்து எமக்காகச் சண்டையிட்டவர்கள் அல்ல.
எம்முடனேயே பிறந்து – எம்முடனேயே வாழ்ந்து – எமக்காவே உயிர் கொடுத்தவர்கள் அவர்கள். அப்படிப் பட்டவர்களை தமிழ் மக்கள் ஒருபோதும் தமது இதயத்தில் இருந்து அகற்றி வி;ட முடியாது.
அதைச் செய்ய நினைப்பது சிங்கள தேசத்தால் இயலாத காரியம்.
* மாவீரர்களை தமிழ் மக்களின் மனங்களில் இருந்து மறைத்து விட சிங்கள தேசம் முயற்சிக்குமேயானால் அதைப் போன்ற தவறு வேறேதும் இருக்க முடியாது. தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலும் இல்லங்களைச் சிதைத்து – மாவீர்களின் தியாக வரலாற்றை மறைக்கும் முயற்சிகள் நடக்கின்றன. ஆனால், இந்த முயற்சிகள் ஒருபோதும் வெற்றி பெறப் போவதில்லை. அதேவேளை, தமிழர் தாயகத்தில் உள்ள மாவீரர் துயிலுமில்லங்கள், நினைவாலயங்களை அழித்து எமது வரலாற்றைப் புதைத்து விட எண்ணும் சிங்கள தேசத்தின் செயலுக்கு நாம் அடிபணிந்து நிற்கப் போகிறோமா என்ற கேள்வி இந்தத் தருணத்தில் எழுகிறது.
அப்படி அடிபணிவோமேயானால் அது மாவீரர்களை மறந்து போகச் செய்ய முனையும் சக்திகளுக்குத் துணை போனதாகி விடும்.
எமக்காக உயிர் கொடுத்த உத்தமர்களின் தியாகத்தை கொச்சைப் படுத்துவதாக அமைந்து விடும்.
மாவீரர்களைப் போற்றும் நிகழ்வுகளை தாயகத்திலும் நடத்துகின்ற சூழலை உருவாக்கும் பொறுப்பும் எம்முடையதே. இது இலகுவில் சாத்தியமான தொன்றல்ல என்பது தெரிந்ததே.
இராணுவக் கெடுபிடிக்குள் இருந்து கொண்டு அதைச் செய்ய முடியாது தான். ஆனால், சட்டரீதியாக இதற்கு வாய்ப்;புகள் இருக்கின்றதா என்று பார்க்க வேண்டும்.
* 1971 இலும், 1989 இலும் இலங்கை அரசுக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சி நடத்திய ஜேவிபி, இதன்போது மாண்டு போன தமது உறுப்பினர்களின் நினைவாக வீரர்கள் தினத்தை கொண்டாடுகிறது. அதற்கு சட்டரீதியான அங்கீகாரம் இருக்கும் போது தமிழ் மக்கள் மாவீரர் நாளை பகிரங்கமாக நடந்த முடியாதா? ஜே.வி.பி.க்கு ஒரு நீதி எமக்கு ஒரு நீதியா? என்ற கேள்வியை தமிழ் மக்கள் எழுப்ப வேண்டிய தருணம் இது.
மாவீரர்கள் எமது பிள்ளைகள், சகோரர்கள், குடும்ப அங்கத்தினர்கள். அவர்களின் நினைவில் சுதந்திரமாக நனைவதற்குக் கூட, தமிழருக்கு உரிமை இல்லையா?
* இறந்து போன உறவுகளுக்காக அழுவதற்குக் கூட உரிமை இல்லை என்றால் – அப்படிப்பட்ட சிங்கள தேசத்தில் தமிழ் மக்ளுக்கு எப்படி நிம்மதியான வாழ்வு கிடைக்கும். இந்த உண்மையை சர்வதேசத்துக்கு எடுத்துச் சொல்வதற்கும் இதையொரு வாய்ப்பாகப் பயன்படுத்தலாம். மாவீரர்களை நினைவு கொள்வதற்கு சட்டரீதியான ஒரு அங்கீகாரத்தைப் பெறுவதற்கு சட்டவல்லுனர்கள் தயாராக வேண்டும். மாவீரர் துயிலுமில்லங்களிலும், நினைவாலயங்களிலும் கூடி – அவர்களுக்காக அழுவதற்கான, அவர்களின் நினைவை சுமப்பதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
தட்டினால் தான் திறக்கும் – இது எமது விடுதலைப் போராட்டம் தந்த பாடம்.
அரசுக்கு எதிராகப் போராடி மடிந்த சிங்களவர்களை நினைவு கொள்ள முடியும் என்றால்- அதில் தமிழருக்கு எப்படி விதிவிலக்கு இருக்க முடியும்?
மண்ணுக்காக மரணித்தவர்களின் நினைவாலயங்களை அழிக்காமல் பாதுகாப்பதற்கும் சட்டரீதியான அணுகுமுறைகளை மேற்கொள்வதற்கு முயற்சிக்கலாம். போரில் இறந்த எதிரியின் நினைவாலயங்களைக் கூட மதிப்பது தான் உண்மையான போர் வீரர்களின் மரபு. ஆனால் அது சிங்கள தேசத்துக்குப் பொருத்தமானதொன்றல்ல.அப்படிப்பட்ட சிங்கள தேசத்துக்கு பாடத்தைக் கற்பிக்க வேண்டும்.
நீதிமன்றத்தின் ஊடாகவோ அல்லது சர்வதேச செல்வாக்குகளைப் பயன்படுத்தியோ தாயகத்தில் மாவீரர்களை நினைவில் நிறுத்துவதற்கான உரிமைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்.
மாவீரர்களை நினைவு கூர்வதற்கான உரிமைகளைக் கூடத் தர மறுக்கும் சிங்களதேசம் தமிழருக்கு வேறு எந்த உரிமைகளையும் கொடுத்து விடாது. இந்த உண்மையை சர்வதேசத்துக்கு உணர்த்துவதற்கு இப்படியானதொரு முயற்சி அவசியம். சிங்கள தேசத்தின் கதவுகளைத் தட்டி தட்டி எமக்கான உரிமைகளைக் கேட்பதற்கு தயாராவார்களா தமிழ் சட்டவல்லுனர்கள்?
கிருஸ்ணா அம்பலவாணர்

நான் அவனில்லை 2 - விமர்சனம்


நடிப்பு: ஜீவன், மயில்சாமி, லட்சுமி ராய், ஹேமமாலினி, ரச்சனா, ஸ்வேதா மேனன்

இசை: டி இமான்

தயாரிப்பு: நேமிச்சந்த் ஜபக், ஹிதேஷ் ஜபக்

இயக்கம்: செல்வா

மக்கள் தொடர்பு: நிகில் முருகன்

2007-ல் வெளியாகி பாக்ஸ் ஆபீஸ் ஹிட்டடித்த நான் அவன் இல்லை படத்தின் இரண்டாம் பாகம் இது. இம்மி கூட மாறாமல் அதே கதை... பார்முலா!முதல் பாகத்தில் இந்தியாவில் பெண்களை ஏமாற்றிவிட்டு வெளிநாட்டுக்குத் தப்பி ஓடும் கதாநாயகன், இந்த இரண்டாவது பாகத்தில் கவர்ச்சியும் திமிரும் நிறைந்த நான்கு இளம் பெண்களை விதவிதமாக ஏமாற்றுகிறான், ஒரு நல்ல பெண்ணுக்கு உதவ.கடைசியில் மாட்டிக் கொள்ளும்போது, ஒரு கிறிஸ்துவ தேவாலயத்தில் பாதிரியார் வேடத்தைப் போட்டுக் கொண்டு 'நான் அவன் இல்லை' என்று வழக்கமான டயலாக்கை உதிர்த்துவிட்டு எஸ்கேப்பாகிறான்.

அடுத்த பாகத்தில் இன்னும் நான்கைந்து பெண்களுடன் கடலை போட வசதியாக முற்றும் என்று போட்டு முடிக்கிறார்கள் படத்தை!இதற்குமேல் கதை என்று சொல்ல ஒன்றுமில்லை படத்தில்.திரும்பத் திரும்ப எடுக்கப்படும் கதைகளைக் கூட, திரைக்கதை அழுத்தமாக இருந்தால் பெரிய வெற்றிப் படமாக்க முடியும். முதல் பாகத்தில் இதை நிரூபித்த இயக்குநர், இந்த இரண்டாம் பாகத்தில் சறுக்கியிருக்கிறார். இந்த மாதிரி படங்களின் ஒரே நோக்கம் அதிகபட்ச கவர்ச்சி... வக்கிரம்.

அதை செவ்வனே நிறைவேற்றி இருக்கிறார் செல்வா. படத்தில் சில காட்சிகளில் ஹீரோ, ஹீரோயின் மார்பில் கைவைத்து, 'மார்பாலஜி' ட்ரீட் தருகிறார் - இதற்குப் பேருதவி புரிகறது வாலியின் வாலிப வரிகள். உடனே கர்ச்சீப் எடுக்கிறார்கள் ரசிகர்கள், வாயைத் துடைக்க!ஆனாலும் இந்த வாலி எபிசோட் சுவாரஸ்யமாக இருப்பதை ஒப்புக் கொள்ளத்தான் வேண்டும்.லட்சுமி ராயை ஏமாற்ற ஜீவன் போடும் திட்டங்கள் அடேங்கப்பா ரகமாக இருந்தாலும், அதை 'அட இவ்ளோதானா' என்று சிம்பிளாக எடுத்திருப்பதில் நம்பகத்தன்மை மிஸ்ஸிங்.தமிழ்நாட்டுப் போலீஸைத்தான் கேணத்தனமாக சினிமாவில் காட்டுகிறார்கள் என்று பார்த்தால், வெளிநாடுகளில் போலீஸ், சட்டம் போன்ற சமாச்சாரங்கள் இருப்பதற்கான அறிகுறியே இந்தப் படத்தில் இல்லை.

கோடி கோடியாக ஏமாற்றுகிறார் நாயகன். ஜஸ்ட் லைக் தட் 'நான் அவனில்லை' என்று கூறிவிடுகிறார். இவரைப் பிடிக்க தமிழ்நாட்டிலிருந்து ஐரோப்பா போகும் போலீசும், அதைக் கேட்டுக் கொண்டு மண்டையை ஆட்டியபடி சென்னைக்குத் திரும்புகிறதாம்... அட போங்கப்பா!ஹேமமாலினி என்கிற ஸ்ருதி பிரகாஷை ஜீவன் ஏமாற்றும் காட்சிகளில் சென்சார் தூங்கி விட்டார்கள் போல!இந்த மாதிரி பாத்திரங்களில் எக்ஸ்பர்ட் ஆகிவிட்டார் ஜீவன் என்றுதான் சொல்ல வேண்டும். அவருக்கு பக்காவான பக்க வாத்தியம் மயில்சாமி. வாங்கிய பணத்துக்குக் குறைவில்லாமல், கவர்ச்சி காட்டியிருக்கிறார்கள் நான்கு நாயகிகளும். ஐந்தாவது நாயகியாக வரும் சங்கீதாவுக்கு பெரிதாக வேலையில்லை.

பாடல், பின்னணி இசை இரண்டுமே சொதப்பல். ஒளிப்பதிவு பரவாயில்லை.முன்பெல்லாம் அண்டா நிறைய பாலில் சில சொட்டு விஷம் கலப்பார்கள், மசாலா என்ற பெயரில். இப்போது நிலைமை தலைகீழ். நீங்களாகப் பார்த்து பாலை அடையாளம் காண வேண்டும். இந்தப் படமும் அந்த ரகம்தான்!

கதிரையில் இருந்து விழுந்த நாள் முதல் மஹிந்தவுக்கு காலம் சரியில்லையாம்!

ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவுக்கு ஜாதக பலன்கள் இப்போது நன்றாக இல்லை என சோதிடர்கள் கூறியுள்ளனராம். சனி மாற்றப் பலன்களால் பல விடயங்கள் நினைத்தது போல் நடக்காமல் தடைகள் ஏற்படுத்து அவருக்கு கெட்ட சகுனத்தைக் காட்டியுள்ளதாம்.
இலங்கையின் இரண்டாவது சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானப்பணிகள் முதலில் வீரவில பகுதியில் ஆரம்பிப்பதென தீர்மானிக்கப்பட்டிருந்தது. ஆனால் அதை அமைச்சர் சாமல் ராஜபக்ஷ தனது கைத்தொலைபேசியூடாகக் கொடுத்த தகவல் மூலம் நிறுத்தியுள்ளார். பின்னர் அது மாத்தள பகுதிக்கு மாற்றப்பட்டது.புதிய விமானநிலைய அடிக்கல் நாட்டச் சென்ற மஹிந்தவுக்கு பாதுகாப்பு வழங்குவதற்காக செல்லவிருந்த ஐ.ஐ 24 ரக ஹெலிகொப்ரரே நேற்று விபத்துக்குள்ளானது. அந்த ஹெலிகொப்ரர் பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது விபத்துக்குள்ளானதாக ராணுவ பேச்சாளர் கூறினாலும் உண்மையில் ஜனாதிபதி பாதுகாப்புக்கென சென்ற ஹெலியே வீழ்ந்து நொருங்கியது.
அண்மையில் நடந்த ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தேசிய மாநாட்டில் 'உங்களுக்கு நல்ல எதிர்காலம் அமைய வாழ்த்துகிறேன்' என பெரிய டிஜிட்டல் போர்டில் எழுதும்போது மஹிந்த சில அசௌகரியங்களுக்கு உள்ளானாராம். அதேபோல ராணுவ கண்காட்சியைத் திறந்து வைக்க முயற்சித்தபோது ரொமோட் கொண்ட்ரோல் இயங்காமல் சிக்கல் கொடுத்துள்ளது. இவ்வாறு பல சகுனங்கள் அவருக்கு கெட்டவிதமாக அமைந்துள்ளனவாம். இவற்றுக்கெல்லாம் காரணம் மஹிந்தவின் சனி மாற்றப் பலன்களே என சோதிடர்கள் எச்சரித்துள்ளனராம்.மேடையில் கம்பீரமாக அமரவந்த மஹிந்த எபோது கவிழ்ந்து விழுந்தாரோ அன்றிலிருந்து எல்லாமே கெட்டதாக அமைவதாக பேசப்படுகிறது

முமைத்கான்.. ஆடியோ விழாவில் ஜொள்ளு விட்ட பிரபலங்கள்!

மேடைகளில் நாகரீகமாகப் பேசுவதற்கும் தங்களுக்கும் சம்பந்தமே இல்லை என அடிக்கடி நிரூபித்து வருகிறார்கள் தமிழ் சினிமாக்காரர்கள்.கவர்ச்சி நடிகையாக இருந்தாலும், பொதுவிழா என்பதால் சேலை உடுத்தி வந்திருந்த கவர்ச்சி நடிகை முமைத் கானை மேடையில் வைத்தே ஆபாசமாக வர்ணித்தனர் திரைப் பிரபலங்கள்.நேற்று நடந்த ஒரு சினிமா ஆடியோ வெளியீட்டு விழாவில்தான் இந்தக் கூத்து.
விழா துவங்கியதுமே, முமைத் கானின் சேலைப் புராணத்தைப் பாட ஆரம்பித்தவர்கள் அத்தோடு நில்லாமல் எல்லை மீறிப் போயும் வர்ணித்தார்கள்.மூத்த திரைப்பட இயக்கநர் வி.சி குகநாதன், "தாமரை கண்கள் என்று புத்தகத்தில் படித்து இருக்கிறேன். அது, முமைத்கானுக்கு இருக்கிறது. எது எது எங்கெங்கு இருக்க வேண்டுமோ, அது அது அங்கங்கே அழகாக இருக்கிறது என்று புளகாங்கிதப்பட்டுப் பேசினார்.தொடர்ந்து அவர் பேசுகையில், அவரிடம் ஒரே ஒரு விஷயத்தை சொல்ல வேண்டும். தயவு செய்து சம்பளத்தை மட்டும் உயர்த்தி விடாதீர்கள். சினிமா பாடல் வெளியீட்டு விழாக்களுக்கு பல நடிகைகள் வருவதில்லை. ஆனால், முமைத்கான் இந்த பட குழுவினரை மதித்து, விழாவுக்கு வந்திருக்கிறார். அதற்காக என் பாராட்டுக்கள்..." என்றார்.

அடுத்து கருணாஸின் டர்ன். மைக்கைப் பிடித்த கருணாஸ், "முமைத்கானுடன் நடித்தது என் பாக்கியம். அவரைத் தொட்டு நடிக்க தயக்கமாக இருந்தது. அவரோ என்னைப் பார்த்து, 'கமான் யா... கேரி ஆன்' என்று கூப்பிட்டு கட்டித் தழுவினார். அப்புறம் நான் சகஜமாக நடித்தேன்" என்றார். இன்னும் சிலர் முமைத்கானின் அழகு, கவர்ச்சிக்கு ஈடே இல்லை என்று புகழ்ந்து தள்ளினர், சங்கடத்தில் அந்த நடிகையே நெளியும் அளவுக்கு!

சந்தர்ப்பம் கிடைத்தால் கோத்தபாயவை விசாரணை செய்வேன் - சரத்

யுத்தத்தின்போது அரச படைகளுக்கு வேண்டிய ஆயுதங்களைக் கொள்வனவு செய்ததில் மோசடி நடந்துள்ளதாகக் கூறப்பட்டதையடுத்து, அரசாங்கம் தாம் விசாரணை நடத்தவுள்ளதாகக் கூறியுள்ளது. அமெரிக்காவில் பதிவு செய்யப்பட்டுள்ள Hicorp நிறுவனத்தினூடாக வாங்கப்பட்ட ஆயுதங்கள் குறித்தே விசாரணை செய்யவுள்ளதாக அரசு கூறியுள்ளது.
இந்த நிறுவனமானது சரத் பொன்சேகாவின் மருமகன் பெயரில் பதிவு செய்யப்பட்டுள்ளதாகவும், எனவே இந்நிறுவனமூடாக ஆயுதக் கொள்வனவு செய்து சரத் மோசடி செய்துள்ளதாகவும் மஹிந்தவின் வாதம் உள்ளது.ஆனால் சரத் பொன்சேகா இதற்கு நேர் எதிராக கருத்துக் கூறியுள்ளார். அரச படைகளுக்கான அத்தனை ஆயுதங்களும் கோத்தபாய ராஜபக்ஷவால் கொள்வனவு செய்யப்பட்டதே ஒழிய இந்த வியாபாரத்தின்போது விலை பேசுதல் போன்ற நிதிசார் நடவடிக்கைகள் எதிலும் தாம் ஈடுபடவே இல்லை என்கிறார் சரத். அனைத்து ஆயுதங்களும் 'Lanka Logistics' என்ற நிறுவனமூடாகவே வாங்கப்பட்டதாகக் கூறும் சரத் இந்நிறுவனத்தின் தலைவரும் கோத்தபாய தான் என்று கூறியுள்ளார்.
"ஆயுத கொள்வனவு குறித்த விசாரணைகள் கட்டாயம் நடைபெற வேண்டும். இந்த விசாரணை எதிர்காலத்திலும் கூட நடைபெறலாம். எனக்கு அந்த விசாரணைகளை நடத்தக்கூடிய சந்தர்ப்பம் அமைந்தால் நிச்சயம் அவ்விசாரணையை நடத்தி முடித்துக் காட்டுவேன்" என சரத் பொன்சேகா தாம் தான் அடுத்த ஜனாதிபதி என்பதுபோல கருத்துக்கள் கூறியுள்ளார்.தற்போதைய அரசாங்கம், எடுத்த குற்றச்சாட்டுக்கள் எல்லாவற்றுக்கும் தாமே காரணம் என்பது போல தம்மீது குற்றம் சாட்டி வருவதாகக் கூறிய சரத் பொன்சேகா உண்மையில் அரசுதான் பாதாளக்கும்பலுடன் தொடர்பு இருந்து சகல குற்றச்செயல்களிலும் ஈடுபடுகிறது என்றார். தேர்தல் பிரச்சாரம் தொடங்காத கட்டத்திலேயே இதுபோன்று இரு பகுதியும் கருத்துக்கள் வெளியிட தொடங்கியுள்ள நிலையில், பிர்ச்சாரம் தொடங்கினால் இன்னும் சிறப்பாக களைகட்டும் போல உள்ளது.

Friday, November 27, 2009

இலங்கையின் எம்.ஐ- 24 ரக உலங்கு வானூர்தி விழுந்து நொருங்கியது (3ம் இணைப்பு)

லங்கையின் தாக்குதல் உலங்கு வானூர்தியான எம்.ஐ-24 இன்று புத்தளப் பகுதியில் விழுந்து நொருங்கி இருப்பதாக செய்திகள் வெளிவந்துள்ளன. பயிற்சிப் பறப்பில் ஈடுபடும்போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக இவ்விமானம் விழுந்து நொருங்கியதாக, இராணுவப் பேச்சாளர் தெரிவித்துள்ளார். புத்தள துங்கிந்த பிரதேசத்தில் இன்று பிற்பகல் 1.30 அளவில் வீழ்ந்து விபத்துக்குள்ளாகியுள்ள, இவ் விமானத்தில் நான்கு விமானிகள் கொல்லப்பட்டனர் என அறியப்படுகிறது.மாவீரர் தினமான இன்று இந்த உலங்கு வானூர்தி வீழ்ந்து நொருங்கியுள்ளது, சில சந்தேகங்களையும் கிளப்பியுள்ளது. உண்மையில் இது பறப்பில் ஈடுபடும் போது தொழில்நுட்பக் கோளாறு காரணமாக வீழ்ந்ததா என்பதில் சந்தேகம் நிலவுகிறது.

சீமான் கனடாவில் இருந்து வெளியேற்றப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி உள்ளன
















கனடா அரசின் பாதுகாப்பு மற்றும் பயங்கரவாதத்திற்கெதிரான கொள்கைக்கு ஊறு விளைவிக்கும் வகையில் பேசியதாக விசாரணைக்குட்படுத்தப்பட்ட நாம் தமிழர் இயக்கத்தின் தலைவர் இயக்குநர் சீமானை கனடா அதிகாரிகள் இந்திய விமனத்தில் ஏற்றி நாடு கடத்தி விட்டதாகத் தெரிகிறது.

பெருமளவிலான ஈழ மக்கள் இரவோடு இரவாக திரண்டு விமான நிலையத்தில் நிற்க அவரை அதிகாரிகள் கொண்டு வந்து விமானத்தில் அனுப்பி வைத்தனர். இன்று இந்திய நேரப்படி இரவு 12.30 மணிக்கு அவர் சென்னை மீனம்பாக்கம் விமானநிலையம் வருகிறார், அவருக்கு தமிழகத்தில் உள்ள தமிழ் உணர்வாளர்களும்,. நாம் தமிழர் அமைப்பினரும் சிறப்பான வரவேற்புக்கு ஏற்பாடு செய்துள்ளதாகத் தெரிகிறது.