Wednesday, April 28, 2010

பந்த்தும் பல்வலியும்!

shockan.blogspot.com
""ஹலோ தலைவரே... மக்கள் பிரச்சினைக் காக அ.தி.மு.க தன் கூட்டணிக்கட்சி களை அரவணைத்து ஒரு போராட்டத்துக்கு வந்திருப்பது தமிழக அரசியலில் முக்கியமான விஷயம்தானே!''

""பொதுவேலை நிறுத்தத்தைச் சொல்றியா? அது தேசிய அரசியல் சமாச்சாரமாச்சே!''

""தேசிய அளவில் இடதுசாரிகள் முன்னெடுத்த பொதுவேலை நிறுத்தம்னாலும் தமிழகத்தில் அ.தி.மு.க தலைமையில் நடந்ததுங்கிறதால அதற்கொரு எதிர்பார்ப்பு இருந்தது. வேலைநிறுத்தத்திலும் விளக்கப் பொதுக் கூட்டத்திலும் கூட்டணிக்கட்சிகளை இணைச் சுக்கணும்னு அ.தி.மு.க.வினருக்கு ஜெ உத்தர விட்டிருந்தார்.''

""கூட்டணிக் கட்சியினரே ஆச்சரியப்பட்ட விஷயமாச்சே!''

""ஆனா, பல இடங்களில் அ.தி.மு.கவினருக்கும் கூட்டணிக்கட்சியினருக்கும் சரியான ஒத்துழைப்பு இல்லை. வடசென்னை மா.செ. சேகர்பாபு நடத்திய ஆலோசனைக்கூட்டத்தில் ஃபார்வர்டு பிளாக் பாலாஜி கொந்தளிச் சிட்டார். இடதுசாரி கட்சிகள் அனைத்துக்கும் ஒரேவிதமான மரியாதை தரணும்னு ஜெ சொல்லியிருக்கும்போது, எங்களுக்கு மட்டும் போஸ்டர்களில் ஏன் முக்கியமில்லைன்னு கேட்க, எம்.எல்.ஏக்கள் உள்ள கட்சிக்குத்தான் முக்கியத்துவம்னு சேகர்பாபு சொன்னதோடு, உங்க கட்சி உருவாக்கிய நடிகர் கார்த்திக் இப்ப எங்கேன்னு நக்கலடித் திருக்கிறார். கடுப்பான ஃபார்வர்டு பிளாக் பாலாஜி, சி.பி.எம்.-சி.பி.ஐ. கட்சிகளுக்கு எம்.எல்.ஏ. கிடைக்கிறதுக்கு முன்னாடியே தமிழ்நாட்டில் ஜெயித்த கட்சி ஃபார்வார்டு பிளாக். கார்திக்கை நாங்க நீக்கிட்டோம். உங்க கட்சி வளர்த்த எஸ்.வி.சேகர் இப்ப எங்கேன்னு கவுண்ட்டர் அட்டாக் கொடுக்க, சேகர் பாபுவுக்கும் பாலாஜிக்கும் கைகலப்பு ஏற்படுற நிலைமை உரு வாகியிருக்குது. மற்ற நிர்வாகிகள்தான் சமாதானப் படுத்தியிருக்காங்க.''

""பொதுவேலை நிறுத்தத்தை முறியடிக்கணும்ங்கிற நோக்கதோடு, பந்த் நாளில் பஸ்- ரெயில் ஓடும்னு அரசாங்கம் அறிவித்திருந்ததே?''

""எதிர்க்கட்சிகள் பந்த் நடத்தினால், ஆளுங்கட்சியின் நடவடிக்கை அப்படி இருப்பது வழக்கம்தானே.. அதே நேரத்தில், வணிகர் சங்கமும் இந்த பொதுவேலை நிறுத்தத்தில் கலந்துக்கலை. மே 5-ந் தேதி வணிகர் தினத்தை முன்னிட்டு கடைகளை மூடுவதால், ஏப்ரல் 27-ந் தேதி மூடுவது சாத்தியமல்லன்னு சங்கத் தலைவர் வெள்ளையன் சொல்லிட்டார். அதோடு, மக்கள் பிரச்சினையில் அரசியல் கட்சிகளின் நிலைப்பாட்டில் தங்களுக்கு நம்பிக்கையில்லைன்னும் சொல்லிட் டார். மற்ற வணிகர் சங்கங்களும் வேலைநிறுத்தத்தில் கலந்துக்கலை. பந்த் நாளில் நாகப்பட்டிணத்தில் ஆர்ப் பாட்டத்தில் கலந்து கொள்வதுன்னு ஜெ. திட்டமிட்டிருந்ததை போன முறையே சொல்லியிருந்தோம். ஆனா, பல்வலி அதிகமாயிட்டதால நாகப் பட்டிணம் போக முடியுமா, போனாலும் ஆர்ப்பாட்டத்தில் பேசமுடியுமான்னு பந்த்துக்கு முதல்நாள் நள்ளிரவு வரை ஆலோ சனை நடத்திக் கொண் டிருந்தார் ஜெ.''

""பாரம்பரிய மான குமுதம் பத்திரிகையின் உள்விவகாரம், சட்டமன்றம் வரைக்கும் எதிரொலிச் சிருக்குதே!''

""குமுதம் குழு மத்தின் எம்.டி. வரதராஜன் மீது குமுதம் ஆசிரியர் ஜவகர்பழனி யப்பன் மோசடி புகார் கொடுக்க, போன வெள் ளிக் கிழமை யன்னைக்கு சாயங்காலம் வரதராஜன் அரெஸ்ட் ஆனார். சனி-ஞாயிறு பெயில் எடுக்க முடியாத நாட்கள் என்பதால் இந்த அரெஸ்ட் ரொம்ப பரபரப்பா இருந்தது. ஆனா, நீதிபதி முன் ஆஜர்படுத்தப் பட்ட வரதராஜன், பெயிலில் விடப் பட்டார். இதுதான் சட்டமன்றத்தில் எதிரொலித்தது. இது சம்பந்தமா விளக்கம் கொடுத்த முதல்வர், அவரை உடனடியாக விடுதலை செய்வதற்கான சட்டங்கள் இல்லை என்றாலும்கூட, அதற்கான நிலைமைகள் இல்லை என்றாலும்கூட, அவைகளுக்கிடையிலும் அவர் சிறை புகத்தான் வேண்டும் என்பதுபோல வலியுறுத்தத் தேவையில்லை என்பதை நம்முடைய அரசு வழக்கறி ஞர்களுக்கு எடுத்துச்சொல்லி, அவரை ரிமாண்ட் செய்வதற்கு வற்புறுத்தவேண்டாம் என்று எடுத்துக்கூறி அவர் சில நிபந்தனைகளோடு உடனடியாக அனுப்பப்பட்டிருக்கிறார்னுசொன்னார். அதோடு, நியாயத்தை உணர்ந்து நல்ல தீர்ப்பு வழங்குவதற்கு ஒரு குழு அமைத்தாவது அதற்கான ஏற்பாடுகளை, குமுதம் வாழவேண்டும் என்பதற்காக நிச்சயமாக இந்த அரசும் செய்யும்னும் சொல்லியிருக்கிறார்.''

""ஆயுள் கைதியாக சிறையிலிருக்கும் நளினியிட மிருந்து செல்போன் எடுக்கப் பட்டது சம்பந்த மான சர்ச்சை இன்னும் நீடிச்சிக்கிட்டிருக்குதே?''

""2008 மார்ச் மாதம் ஆக்டிவேட் செய்யப்பட்ட அந்த போனின் சிம்கார்டு மூலம் இங்கிலாந்து, இலங்கை ஆகிய நாடுகளுக்கும், தன்னோட வக்கீலுக்கும் நளினி பேசியிருக்கிறார்னு சட்டமன்றத்தில் அமைச்சர் துரைமுருகன் சொல்லியிருந்தார். அந்த செல்போனில் இருந்தது ஏர்டெல் சிம்கார்டு. வேலூர் மாவட்டம் காட்பாடி தாலுகா கனகசமுத்திரம் கிராமத்தைச் சேர்ந்த ரவி என்பவரது பெயரில் வாங்கப்பட்டிருந்தது. போலீசார் கனக சமுத்திரத்துக்குப்போய் ரவியைத் தேடுனப்ப, 10 ரவி இருந்திருக்காங்க. அதில் கட்டிட மேஸ்திரி ரவியின் டாக்குமெண்ட்தான் சிம்கார்டுக்காக கொடுக்கப்பட்ட ஜெராக்ஸோடு ஒத்துப்போயிருக்குது. அவரை போலீஸ் தூக்கிட்டு வந்திடிச்சி.''

""அப்புறம்?''

""ரவியோட சம்சாரம், எம்புருஷனுக்கு எதுவும் தெரியாதுங்கன்னு அழுது புலம்பினார். போலீசோ ரவியை மிரட்டு மிரட்டுன்னு மிரட்ட, ரொம்பவும் தயக்கத்தோடு உண்மையைச் சொல்ல ஆரம்பிச்சாரு. வேலூர்ல ஒரு மொபலை வாங்குனப்ப சிம்கார்டு ஃப்ரீயா கொடுத்தாங்க. அதை எனக்குத் தனிப்பட்ட முறையில் பழக்கமான நாகஜோதிக்கிட்டே அன்பா கொடுத்துட்டேன். அதற்கப்புறம் எதுவும் தெரியாதுங்கன்னு ரவி சொல்லியிருக்காரு. ஞானதீபம்ங்கிற பத்திரிகையில் புரூஃப் ரீடரா இருக்கும் நாகஜோதியை போலீஸ் மடக்கி விசாரிக்க, அந்த மொபைல்ல ஒருநாள்தான் பேசினேன். அப்புறம் அது தெலைஞ்சிபோச்சு. கம்ப்ளைண்ட் கொடுக்க வேண்டாம்னு விட்டுட்டேன்னு சொல்லியிருக்கிறார். இதனடிப்படையில், ஏர்டெல் நிறுவனத்தில் போலீசார் விசாரித்ததில், மொபைல் காணாமல் போனதா நாகஜோதி சொன்ன தேதியிலிருந்து 3 மாசத்துக்கு அதில் எந்த அவுட்கோயிங், இன்கமிங் எதுவுமில்லையாம். அதற்கப்புறம்தான் ரீ-சார்ஜ் செய்திருக்காங்க. நாகஜோதி தொலைத்த மொபைலை நளினியிடம் கொடுத்தது யாருன்னு இப்ப போலீஸ் விசாரிச்சிக்கிட்டிருக்குது.''

""ஓ...''

""மாலத்தீவு பயணத்தை முடிச்சிட்டு அழகிரி திரும்பிட்டார். பார்லிமெண்ட் கூட்டத் தொடரில் அவர் பங்கேற்காமல் இருந்ததால், எதிர்க்கட்சிகள் சரமாரியா கேள்வி எழுப்ப, சபாநாயகர் மீராகுமாரே, அவர் எங்கே சென்றிருக்கிறார் என்பது எனக்குத் தெரியாதுன்னு சங்கடத்தோடு சொன்னார். மத்திய மந்திரி பதவியை ராஜினாமா செய்றதுங்கிற முடிவோடு மாலத்தீவில் தன் நலன்விரும்பிகளிடம் அழகிரி ஆலோசனை நடத்திக்கிட்டிருந்தப்பவே, அவர்கிட்டே கலைஞர் பேசியிருக்கிறார். இதை யடுத்து, மாலத்தீவிலிருந்து திரும்பிய பிறகு, டெல்லிக்குப் பறந்தார் அழகிரி. பார்லிமெண்ட் கூட்டத்தொடர் முடிந்ததும் தென்மாவட்டம் முழுக்க டூர் போக திட்டமிடிருக்கிறார். தன்னோட செல்வாக்கு என்னங்கிறதை பல்ஸ் பார்க்கத்தான் இந்த டூர் புரோகிராமாம்.''

""பார்லிமெண்ட் பற்றி சொன்னதும், ஸ்பெக்ட்ரம் விஷயம் தொடர்பா ஆ.ராசா சமீபத்தில் கொடுத்த விளக்கம் ஞாபகத்துக்கு வருது. ரொம்ப பவர்ஃபுல்லான விளக்கம்னு சீனியர் பார்லிமென்ட் டேரியன்களே சொல்றாங்களே...''

""ஆமாங்க தலை வரே... ... என்னதான் எக்ஸ்பர்ட்டா இருந் தாலும் டாக்டரோட சப்ஜெக்ட் இன்ஜினிய ருக்கு தெரியாது. இன் ஜினியரோட சப்ஜெக்ட் டாக்டருக்குத் தெரியாது. இதைத்தான் ஸ்பெக்ட்ரம் விஷயம் தொடர்பா பார்லிமெண்ட்டில் ஆ.ராசா அழுத்தமா சொன்னார். 2ஜி, 3ஜி அலைவரிசை குறித்து ஊடகங்கள், நிறுவனங்கள், தனிநபர் உள்ளிட்ட அனைத்து தரப்பினருக்குமே குழப்பமும் அறியாமையும் நிலவுகின்றது. உறுப்பினர் மலைச்சாமி (அ.தி. மு.க) அவர்களும் அலைவரிசை குறித்து அறியாமை யிலேயே உள்ளார். 2ஜி சேவை என்பது சாமானிய மக்க ளுக்கானது. அதை ஏலம்விடத் தேவை யில்லை. ஒதுக்கீட்டு அடிப்படையில் வழங்கணும்னு தேசியஜனநாயக கூட்டணி அரசில் முடிவு செய்யப்பட்டது. அதேநேரத்தில், வளர்ந்த நாடுகளின் நடைமுறையைப் பின்பற்றி 3ஜி அலைக்கற்றை ஏலத்தை நடத்த வேண் டும்ங்கிறது தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் கொள்கை முடிவு.3ஜி அலைக்கற்றை ஏலம் 45ஆயிரம் கோடி ரூபாயை எட்டும்னு தெளிவா பதில் கொடுத்தார்.''

""ரயில் குண்டுவெடிப்பு சதித் திட்டத்திற்காக நடந்த ஆலோசனை கூட்டத்தில் கலந்துக்கிட்டார்ங்கிற குற்றச் சாட்டோடு 13 வருசமா சிறைப்பட்டிருக்கும் குணங்குடி அனீபா, கடந்த 26-ந் தேதி யிலிருந்து புழல் சிறையில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கியிருக் கிறார். இந்தப் பிரச்சினையை முன்வைத்து மே 5-ந் தேதி உயர்நீதிமன்றம் நோக்கி மிகப்பெரிய கண்டனப்பேரணியை த.மு.மு.க நடத்துது.''

அது சம்பந்தமா நான் சொல்றேன்.. குனங்குடி அனீபாவுக்கு எதிரா அரசு முன்வைத்த 2 சாட்சிகளுமே, அவர் அந்த சதி ஆலோசனைக்கூட்டத்தில் கலந்துக்கலைன்னு சொல்லிட்டாங்க. அனீபா மீதான வழக்கின் விசாரணையும் முடிந்து தீர்ப்பு வழங்கவேண்டிய தருணம் இது. லீவில் சென்ற பூந்தமல்லி சிறப்பு நீதிமன்ற நீதிபதி பிரேம்குமார் பணிக்குத் திரும்பினார். தீர்ப்பு அளிக்கப்போற நேரத்தில், புதிதாக சார்ஜ்ஷீட் போடணும்னு அரசுத்தரப்பில் பெட்டிஷன் போடுறாங்க. இதுதான், அனீபாவின் சாகும்வரை உண்ணா விரதத்துக்கு காரணம். கொலைவழக்கில் சிக்கிய ஜெயேந்திரருக்கு ஜாமீன். அனீபாவுக்கு 13 வருட சிறையான்னு கேட்கிறார் த.மு.மு.க தலைவர் ஜவாஹி ருல்லா.

No comments:

Post a Comment