Tuesday, April 27, 2010

பெண்களுடன் நித்யானந்தா! சிக்கிய புதிய சி.டி.!


shockan.blogspot.com
எப்போதும் வண்ணமயமான... பெண் பக்தர்கள் புடை சூழக் காட்சிதரும் நித்யானந்தா... கடந்த ஒருவாரமாகக் காக்கிகள் புடைசூழ பொறியில் மாட்டிக்கொண்ட எலிபோல காட்சி யளிக்கிறார்.

நான்கு நாட்கள் இவரை கஸ்டடியில் எடுத்த கர்நாடக சி.ஐ.டி. போலீஸ்... அன்று சி.ஐ.டி. தலைமை அலுவலகத்துக்கு இரவு 11 மணிக்குக் கொண்டுவந்தனர். கோர்ட்டிலிருந்து வெளியே வரும்போது சீனிவாசன் என்ற ஆசிரியர் "நீ எல்லாம் சாமியாரா?' என்றபடி காலில் இருந்த செருப்பை எடுத்து அவர்மேல் வீசினார். அன்று இரவு அவரை நிம்மதியாக உறங் கச்சொல்லிவிட்டு... மறுநாள் காலை வீடியோ காமிராவோடு விசாரணையை ஆரம்பித் தார்கள்.

சி.ஐ.டி. போலீஸ் எஸ்.பி.யோகப்பா மேற்பார்வையில் சி.ஐ.டி. டி.எஸ்.பி.க்கள் சீனிவாசமூர்த்தி, உசேன், சந்திரசேகர் ஆகியோர் மாறி மாறி விசாரணையில் இறங்கினார்கள். அப்போது...

"நடிகை ரஞ்சிதாவை எப்படி வளைத்தாய்?' என நித்யானந்தாவிடம் கேள்வியை ஆரம்பிக்க... ஒரு அசட்டுப் புன்னகையை மட்டுமே பதிலாக வீசினார் நித்யானந்தா. ‘சரி... படுக்கையில் நீ அமைதியாகத்தான் இருக்கிறாய். ரஞ்சிதாதான் செயல்படுகிறார். இது எப்படி?’’ என்று மீண்டும் அதிகாரிகள் ரஞ்சிதா விஷயத்தையே டச் பண்ண... அதற்கும் புன்னகைதான் பதிலாகக் கிடைத்தது.

"ஆசிரமத்தில் இருக்கும் எத்தனை பெண்களை நீ தொட்டிருக்கிறாய்?' என்று அடுத்த கேள்விக்கு அதிகாரிகள் தாவ... "ஓம் பூர் புவஸ்வஹ' என ஏதோ ஒரு மந்திரத்தை பதிலாக உச்சரித்து அதிகாரிகளை எரிச்சலடைய வைத்தார்.

இப்படி அன்று முழுதும் எந்தக் கேள்விக்கும் சரியாக பதில் தராமல்.. புன்னகை... தியானம்... மந்திரம்... என்று அதிகாரிகளுக்குப் போக்குக் காட்டினார். மறு நாள் விசாரணைக்கு முன்... முதல்நாள் நடந்த விசாரணையை சரிபார்த்த அதிகாரிகள்.. அதில் ஆடியோ பதிவாகாததைக் கண்டு திகைத்துப்போய்... மறுபடியும் ஆரம்பத்திலிருந்தா? என நொந்துபோய்... முதல்நாள் கேள்வி களையே திரும்பக் கேட்க ஆரம்பித்தனர்.

அன்றும் முதல்நாளைப் போலவே... சிரிப்பு.. தியானம்... மந்திரம்... ஆசிரமத்தில் இருந்து கொண்டுவரப்படும் சாப்பாடு என்றே பொழுதைக் கடத்தினார் நித்யா.

இந்த ’காந்திவழி’ விசாரணை இவரிடம் இனி சரிப்படாது எனப் புரிந்து கொண்ட அதிகாரிகள்... மூன்றாம் நாளில் இருந்து ’நேதாஜி பாணியைக் கையிலெடுக்கும் முடிவுக்கு வந்தனர். அப்போது...

""என்னைத் துருவித் துருவிக் கேள்விகள் கேட்டீர்களேயானால்.. நான் இந்த உடலை உதறிவிட்டு வெளியே போய் விடுவேன்'' என சீன் போட ஆரம்பித்தார். இதைக்கேட்டு ஏகக்கடுப்பான விசாரணை அதிகாரிகள்.... ""ஏய் யார்கிட்ட கதைவிடறே. உடம்பை விட்டு வெளில போவியா? போய்க்காட்டு பார்க்கலாம்.. எங்கக் கிட்டயே கதையா?...'' என ஆவேசமாக, வெலவெலத்துப்போனார் நித்யா.

"ஒழுங்கா பதிலைச் சொல்லணும். இல்லே ரொம்ப அவஸ்தைப் படுவே..' என நக்கீரன் இதழைக் கையில் வைத்துக் கொண்டு விசாரணையை ஆரம்பித்தனர். ""உன் ஆசிரமத்தில்.... ஃபோட்டோ, சி.டி.க்கள் இருக்கும் அந்த சீக்ரெட் அறைக்குள்ளயும் நாங்க நுழைஞ்சிட்டோம். கேமரா பொருத்தி எப்பவும் கண் காணிப்பிலேயே இருக்கும் அந்த அறைக் கதவை... கோபிகாவும் ஆத்மானந்தாவும் ரேகையை பதியவச்சாத்தான் திறக்க முடியுமா? போலீஸ் நினைச்சா... காத்து நுழைய முடியாத அறைக்குள்ளும் நுழைஞ்சிடும். பாக்குறியா அங்க இருந்து நாங்க எடுத்துவந்த படங்களை?'' என பல பெண்களுடன் நித்யானந்தா இருக்கும் படங்களை அவர் முன் அள்ளிப்போட விக்கித்துப்போனார் நித்யானந்தா.

""நீ தப்பிக்கவே முடியாது, காரணம் பல பெண்கள்.. நீ ஏமாத்தி... கால்பிடிக்கச் சொல்லி... உணர்ச்சிகளைத் தூண்டி... கெடுத்ததா எங்கக் கிட்ட ஒத்துக்கிட்டிருக்காங்க. இதையெல்லாம் எப்படி நிரூபிக்க முடியும்னு நினைக்கிறியா? பிரேமானந்தா விசயத்தில் என்ன நடந்தது தெரியுமா? அவரால் கர்ப்பமான பெண்ணின் கருமுட்டையில் உள்ளது பிரேமானந்தாவின் செமனில் உருவான குழந்தைதானா என்பதை அறிய டி.என்.ஏ. டெஸ்ட்டை ஹைதராபாத்தில் நடத்தி அவரோட அசிங்கத்தை நிரூபிச்சாங்க. இதே பாணியில்தான் உன்னையும் நிரூபிப்போம்'' என்று சொல்ல... முகம்வெளிறிப்போன நித்யானந்தா.... என் மீது பெண்கள் புகார் சொல்லலையே... என்றார்.

""ஏன் சொல்லலை... செக்ஸ் ஃபீலிங்ஸை அடக்கும் வகுப்புன்னு சொல்லி ரகசியமா நீ நடத்திய கூத்து எல்லாம்... எங்கக் கையில் சி.டி.யா இருக்கு. ஆன்மீக வகுப்பில் பெண்களுக்கு முத்தம் கொடுக்குறே... கட்டிப்பிடிக் கிறே... அவங்க உடம்பு முழுக்க கைவச்சி.. உணர்ச்சியைத் தூண்டறே... இதுதான் ஆன்மீகமா? படுக்கையில் கட்டி உருள்றதுக்குதான் ஆசிரமமா?'' என காக்கிகள் கேட்க....

நித்யானந்தாவோ மெதுவான குரலில் “""அது தாந்ரீயம். அதாவது ஆன்மீகத்தின் உச்சத்தை அடைய அது ஒரு வழிமுறை'' என்றார் லஜ்ஜையாக. ""சரி ஆசிரமத்தில் சேரும் பெண்களிடமெல்லாம் செக்ஸ் பண்ண ஒப்பந்தம் போட்டிருக்கியே... ரஜனீஷ் கூட இப்படியெல்லாம் பண்ணியது இல்லை. இந்த ஐடியாவை யார் கொடுத்தது?'' என்று கேட்க... நித்யானந்தா தலைகுனிந்து கொண்டார். பெண்களிடமெல்லாம் இப்படி நித்யானந்தா நடந்து கொண்ட செக்ஸ் விவகாரங்கள் குறித்துப் பல வாறாய் விசாரித்த அதிகாரிகள்... அவரது மோசடிகள் குறித்தும் கேள்விகளை வைத்தனர்.

""பிடதியில் ஆசிரமத்துக்காக நாகராஜ் ஷெட்டி என்பவர் கொடுத்த நிலத்தை உன் பெயரில் எப்படி ரிஜிஸ்டர் செய் தாய்? உன் பெயரிலும் உன் தம்பி நித்ய ஈஸ்வரானந்தா பெயரிலும் ராம்நகர் கனரா வங்கியில் கணக்குத் தொடங்கி... ஏராளமான அமெரிக்க டாலர்களை டெபாஸிட் செய்து... அந்நிய செலாவணி மோசடி செய் திருக்கிறாயே... சரியா? கர்நாடகா வில் விவசாயிகள் மட்டுமே விவசாய நிலம் வாங்கலாம். அப்படி இருக்க... பிடதி ஆசிரமத்திற்கு அருகில் பக்தானந்தா பெயரில் 3 ஏக்கர் விவசாயநிலம் வாங்கியது எப்படி?

உன் மோசடிப் பார்ட்னர்கள் யார் யார்? யார் யாரிடமிருந்து கோடிகோடியாய் வாங்கினாய்?'' என சி.ஐ.டி. போலீஸார் கேட்ட கேள்விகளுக்கு நித்யானந்தாவிட மிருந்து சரியான பதில் இல்லை. அதற்குள் நித்யானந்தாவின் கஸ் டடிக்காலம் முடிந்ததால் அவரை கோர்ட்டில் ஆஜர்படுத்திவிட்டு மீண்டும் 4 நாட்கள் கஸ்டடியில் எடுக்க திட்டமிட்டனர். அதன்படி... அவரை 26-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி காலநீட்டிப்பு கேட்க... 2 நாள்மட்டும் விசாரிக்க அனு மதி கொடுத்தது நீதிமன்றம்.

விசாரணை டீம் அதிகாரி ஒருவரிடம் ஆசிரமத்தில் சிக்கிய சி.டி.க்கள் குறித்து நாம் கேட்ட போது ""35 சி.டி.க்களை நாங்கள் ரகசிய லாக்கர் அறையில் இருந்து எடுத்தோம். அதில் பாலியலைக் கடந்து அதன்வழியாக ஆன்மீகத்தை அடைவதற்கான வகுப்புன்னு அவர் எடுத்த செக்ஸ் கிளாஸ் படங்கள்தான் எல்லாத்திலும் இருந்தது. ஆண்கள் பெண்கள்னு 30 பேர் இருக்கும் பூட்டிய அறைக்குள்.. ஒவ்வொரு பெண்ணா அழைத்து... முத்தம் கொடுப்பார்.. கட்டிப்பிடிப்பார்... உடம்பை வருடு வார்... உடைகளுக்குள் கைவிடுவார். அங்கங்களில் கை வைத்து... ஃபோர்பிளே பண்ணுவார்.. சிலரின் உடைகளைத் தளர்த்துவார். இந்த சமயத்தில் சாமியார் விளையாடும் பெண்ணுக்கும் உணர்ச்சி வரக்கூடாதாம். அந்த கிளாஸில் இருப்பவர்களுக்கும் உணர்ச்சி வரக்கூடாதாம். இப்படி சொல்லியே செக்ஸ் கிளாஸ் எடுத்து... பெண்களை மனரீதியா பலமிழக்கச்செய்து வீழ்த்தியிருக்கார். அந்த சி.டி.க்களைப் பார்க்கும் போது நமக்கே ஒரு மாதிரியா இருக்கு''’’ என்றார் ஒருவித பெருமூச்சோடு.

கூடுதலாக இரண்டு நாள் கஸ்டடி கொடுக்கப்பட்ட நிலையில் நான்தான் கடவுள் என சொல்லிக் கொண்டி ருந்த நித்யானந்தா தனக்கு நெஞ்சுவலி என அலற, பெங்க ளூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

No comments:

Post a Comment