Monday, May 10, 2010

பின்லேடன் இருப்பிடம் பாக். அதிகாரிகளுக்கு தெரியும்: ஹிலாரி கிளின்டன்


shockan.blogspot.com
ல்-காய்தா தலைவர் ஒசாமா பின்லேடன் இருப்பிடம் குறித்து சில பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு தெரியும் என்று அமெரிக்க வெளியுறவுத்துறை அமைச்சர் ஹிலாரி கிளின்டன் கூறியுள்ளார்.

சிபிஎஸ் என்னும் தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

"பின் லேடன், முல்லா உமர் ஆகியோரின் இருப்பிடம் மற்றும் அவர்களது இயக்கங்களின் செயல்பாடுகள் குறித்து சில பாகிஸ்தானிய அதிகாரிகளுக்கு நிச்சயம் தெரிந்திருக்கும் என நான் நம்புகிறேன்'' என்று அவர் கூறியுள்ளார்.

தீவிரவாதத்திற்கு எதிரான நடவடிக்கையில் பாகிஸ்தான் போதிய ஒத்துழைப்பு அளிக்கிறதா என்று கேட்டபோது, செப்டம்பர் 11 தாக்குதலில் தொடர்புடையவர்களைப் பிடித்து நீதியின் முன் நிறுத்த பாகிஸ்தானிடமிருந்து இன்னும் அதிக ஒத்துழைப்பு தேவை என்றார் ஹிலாரி.

No comments:

Post a Comment