Wednesday, May 12, 2010

நாளை மறுநாள் பிளஸ் 2 ரிசல்ட்

shockan.blogspot.com
பிளஸ் 2 தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் (14&ம் தேதி) காலை 9 மணிக்கு வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் பிளஸ் 2 தேர்வுகள் கடந்த மார்ச் 1&ம் தேதி தொடங்கி 22&ம் தேதி முடிந்தன. தமிழகம் மற்றும் புதுச்சேரியை சேர்ந்த 5,233 பள்ளிகளில் இருந்து 6 லட்சத்து 89 ஆயிரத்து 687 மாணவ, மாணவியர் தேர்வு எழுதினர். இவர்கள் தவிர 53,564 பேர் தனித் தேர்வர்களாக தேர்வு எழுதியுள்ளனர்.
மார்ச் 8&ம் தேதி இயற்பியல் தேர்வு நடந்தது. அதில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் 5 கேள்விகளில் தவறுகள் இருப்பதாக மாணவர்கள் தெரிவித்தனர். அதில் 31&வது கேள்விக்கு மட்டும் 3 மதிப்பெண்கள் முழுமையாக வழங்கப்படும் என்று தேர்வுத்துறை தெரிவித்தது. கணக்கு தேர்வில் வழங்கப்பட்ட கேள்வித்தாளில் ÔஆÕ பகுதியில் 5 கேள்விகளும், ÔஇÕ பகுதியில் 10 கேள்விகளும் மிகவும் கடினமாக கேட்கப்பட்டு இருந்தது. இதனால் தேர்வு எழுதிய பெரும்பாலான மாணவர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
சில மாணவர்கள் தேர்வு எழுதும்போது கண்ணீர் விட்டனர். இதனால் இந்த ஆண்டு, கணக்கில் Ôசென்டம்Õ எடுப்பவர்கள் எண்ணிக்கை குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதுதவிர முசிறி ஆண்கள் மேனிலைப் பள்ளியில் தேர்வு எழுதிய 262 மாணவர்களின் இயற்பியல் விடைத்தாள் கட்டு காணாமல் போனது. இதனால் அவர்களுக்கு ஏப்ரல் 22&ம் தேதி மறுதேர்வு நடத்தப்பட்டது.
பிளஸ் 2 விடைத்தாள் திருத்தும் பணி, மார்ச் 27&ம் தேதி தொடங்கி ஏப்.23&ல் முடிவடைந்தது. இந்தப் பணியில் 6 ஆயிரம் ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்டனர். விடைத்தாள் திருத்தும்போதே உடனுக்குடன் மதிப்பெண்கள் அரசு தேர்வுகள் இயக்ககத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பெறப்பட்ட மதிப்பெண்களை வைத்து மதிப்பெண் பட்டியல் தயாரிக்கும் பணிகள் தொடங்கின. எல்லா பணிகளும் முடிவடைந்து,

தேர்வு முடிவுகளை வெளியிடுவதற்கான ஏற்பாடுகள் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தேர்வு முடிவுகள் நாளை மறுநாள் வெளியிடப்படும் என்று அமைச்சர் தங்கம் தென்னரசு அறிவித்துள்ளார். அவர் இன்று வெளியிட்ட அறிக்கை:
பிளஸ் 2 பொதுத்தேர்வு முடிவுகள் 14&ம் தேதி (நாளை மறுநாள்) வெள்ளிக்கிழமை காலை 9 மணி அளவில் வெளியிடப்படும்.

தேர்வு எழுதியுள்ள மாணவர்கள் தாம் பயின்ற பள்ளிகள் மூலமாகவும், அரசுத் தேர்வுகள் துறையினரால் அளிவிக்கப்படும் இணையதளம், எஸ்எம்எஸ், தொலைபேசி எண்கள் மூலமாகவும் தேர்வு முடிவுகளை தெரிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு அறிக்கையில் கூறியுள்ளார்.
தேர்வு முடிவுகளை 14&ம் தேதி காலை சென்னை நுங்கம்பாக்கம் டிபிஐ வளாகத்தில் உள்ள அரசுத் தேர்வுகள் இயக்ககத்தில் இயக்குநர் வசுந்தராதேவி வெளியிடுகிறார்.

No comments:

Post a Comment