Saturday, May 8, 2010

சிறையில் நித்யானந்தா! -வெளிவராத படங்கள்!



shockan.blogspot.com


விதவிதமாய் பெண்களோடு இளமைத் திருவிழா நடத்திக் கொண்டிருந்த நித்யானந்தா... இப்போது கோர்ட், வழக்கு, சிறை என காக்கிகள் புடைசூழ... விரக்தியுடன் பொழுதைக் கழித்துக்கொண்டி ருக்கிறார்.

கர்நாடகா சி.ஐ.டி. போலீஸோ சீரியஸாக வழக்கில் கவனம் செலுத்துகிறது. நித்யானந்தாவால் பாதிக்கப் பட்ட பெண்கள் எவரும் கைப்பட புகார் எழுதிக்கொடுக்காததால்... நக்கீரனில் வாக்கு மூலம் கொடுத்திருந்த மாடலிங் பெண் உள்ளிட்ட 10 பெண்களைத் தொடர்புகொண்ட சி.ஐ.டி. போலீஸார்... "நித்யானந்தாவிடம் ஏமாந்தது குறித்து வாக்குமூலம் கொடுங்கள். அப்போதுதான் அவருக்கு நாங்கள் தண்டனை வாங்கிக்கொடுக்கமுடியும்' என்று கேட்டபடி இருந்தார்கள். திருமணமான பெண்களோ... "அந்தப் பாவி பண்ணியதை எப்படி நாங்க வாக்குமூலமாத் தர்றது? எங்க கணவன்மார்களும் குழந்தைகளும் எங்களைக் கேவலமாப் பார்க்கமாட்டாங்களா? இதனால் எங்கள் திருமண வாழ்க்கை பாதிக்குமே'’ என்று கண்ணீருடன் தங்கள் பயத்தைச் சொன்னார்கள். திருமணமாகாத இளம்பெண்களோ ‘"இந்த வெட்கக்கேட்டை எங்களாலும் புகாராகத் தரமுடியாது. அப்படிக் கொடுத்தா... உடம்பு திமிரைத் தீர்த்துக்கத்தான் ஆசிரமத்துக்கு போனியான்னு கேட்டு... வீட்டைவிட்டு எங்க பேரண்ட்ஸ் துரத்திவிட்ருவாங்க. சொந்த பந்தங்களின் முகத்தில் கூட முழிக்க முடியாது. எங்க எதிர்கால வாழ்க்கையே ஸ்பாயிலாயிடும்' என்று முகத்தைப் பொத்திக்கொண்டு அழுதார்கள்.

சி.ஐ.டி.காக்கிகளோ "உங்க பெயரை நாங்க ரொம்பவும் ரகசியமா வச்சிக்குவோம். தனியறையில் நீதிபதிகளிடம் மட்டும் நீங்கள் நடந்ததைச் சொன்னால் போதும். எங்களை மீறி... உங்களைப் பத்தின ரகசியத்தை பத்திரிகை போன்ற மீடியாக்கள் வெளியிட்டால்... அதன் ஆசிரியருக்கு 2 வருட சிறைத்தண்டனை வரை கிடைக்கும் என்பதைச் சொல்லி... மீடியாக்களை எச்சரிச்சிடுவோம். அதனால் தைரியமா வாக்குமூலம் தாங்க' என்று அவர்களுக்கு தைரியமூட்டிக் கொண்டிருக்கிறார்கள்.






நித்யானந்தாவின் ஜெயில் வாழ்க்கை எப்படிப் போய்க் கொண்டிருக்கிறது? ருத்தி ராட்சை மாலையை உருட்டிய படியே மந்திரங்களை முணுமுணுப்பதும் தியானம் செய்வதும் தூங்குவதுமாகவே தனது பொழுதுகளை நகர்த்திக்கொண்டிருக்கிறார். நித்யானந்தாவைக் கண்டு எரிச்சலான ஒரு சிறைக் காக்கி... சிறை அறையின் வாசலில் கிடந்த அவரது செருப்பை... காலால் எத்திவிட்டபடி "உனக்கெல்லாம் செருப்பு ஒரு கேடா?'’ என்றுகேட்க... இதைபார்த்த பக்தானந்தா... ‘"ஐயோ உதைக்காதீங்கோ... அது சாமி சாமி...' ’என்று பதறினார். அந்த செருப்பு... தொழிலதிபர்கள் பலர் வீட்டுக்கும் பாதபூஜைக்காக போய் லட்ச லட்சமாக சம்பாதித்துத் தந்திருக்கிறது என்பது பக்தானந்தாவுக்கு நன்றாகத் தெரியும். அப்போது அரைக் கண்களை மூடியபடிருத்திராட்ச மாலையை உருட்டிக்கொண்டிருந்த நித்யானந்தா.... சிறைக் காவலாளி தன் செருப்பை எட்டி உதைத்ததை... ஓரக் கண்ணால் பார்த்தும் பார்க்காத மாதிரியே உட்கார்ந்திருந்தார். பின்னர் தரையில் அப்செட் மன நிலையோடு படுத்துவிட்டார்.

நித்யானந்தாவை முதலில் 4 நாட்கள் கஸ்டடி எடுத்த சி.ஐ.டி. காக்கிகள் மேலும் இரண்டுநாள் மட்டுமே விசாரிக்கத் திட்டமிட்டிருந்தனர். ஆனால் 5-ஆம் நாள் அவர் நெஞ்சுவலி என்று டிராமா போட... எரிச்சலான காக்கிகள் மேலும் 2 நாட்கள் உபரியாக கஸ்டடியில் எடுத்தார்கள். விசாரணையின் போது 5 அதிகாரிகள் அவரை வளைத்து வளைத்துக் கேள்விகளால் துளைத்தனர். "ரஞ்சிதாவோடு சமாதி நிலையில் இருந்தேன் என்கிறாய். மற்ற பெண்களோடும் நீ உறவு வைத்துக் கொண்டிருக்கிறாயே' என்றபோது... அப்போதும் நான் சமாதி நிலையில்தான் இருந்தேன் என்றார் நித்யா. இதைக் கேட்டு டென்ஷனானவர்கள் "என்ன எங்கக்கிட்டயே கலர் கலரா ரீல் விடறியா?' என்றபடி நித்யானந்தாவுக்கு நான்கு அடி கொடுத்து... அவரை அதிர வைத்தனர். கர்நாடக பா.ஜ.க. முதல்வர் எடியூரப்பா தன்னைக் காப்பாற்றுவார் என நித்யானந்தா இன்னும் எதிர்பார்த்திருக்க... எடியூரப்பாவோ "இந்து மதத்துக்காகத்தான் நமக்கு கட்சி, ஆட்சி எல்லாம். அப்படியிருக்க.. இந்து மதத்தை அசிங்கப் படுத்திய நித்யானந்தாவிடம் கருணை காட்டவேண்டாம்... தீவிரமாகவே நட வடிக்கை எடுங்கள்' என சி.ஐ.டி. காக்கி களுக்கு சிக்னல் கொடுத்திருக்கிறார்.

இதற்கிடையே வழக்கறிஞர் ஆலடி மகேந்திரன் கொடுத்த வழக் கில் நித்யானந்தாவைக் கைது செய்யவந்த புதுவை காக்கிகள், ராம்நகர் கோர்ட்டில் இது குறித்து மனு தாக்கல் செய்ய... இவரது ஜாமீன் மனு விசாரணை முடிந்ததும் நீங்கள் எதை வேண்டுமானாலும் செய்து கொள்ளுங்கள் என்று சொல்லிவிட்டது நீதிமன் றம். எனவே 6-ந் தேதி ஜாமீன் வாங்கி ஆசிரமம் போய்விடலாம் என கருதிக் கொண்டிருந்த நித்யானந்தா...’ இது என்ன புதுச்சிக் கல்? ஜாமீன்ல வெளில போனா புதுவை போலீஸ் கைது பண்ணி புதுவைக்குக் கொண்டுபோகும். அடுத்து தமிழக போலீஸ் கைது பண்ணி தமிழகம் கொண்டு போகும். இப்படி எல்லா இடத்துக்கும் போய் அசிங் கப்படணுமா? பேசாம ஜாமீன் கிடைக்காம இங் கேயே கொஞ்சநாள் இருந் துக்கலாமே’’ என்று 6-ந் தேதி கோர்ட்டிற்கு கொண்டுவரப்பட்ட போது தன் தரப்பினரிடம் ரொம்பவே புலம்பிக்கொண்டிருந்தார்.

அவர் விரும்பியபடியே அவரது ஜாமீன் மனு கோர்ட்டில் தள்ளுபடி ஆகிவிட்டது. எனினும் வெளியுலகத்தை எப்போது பார்க் கப்போகிறோமோ என இப்போது பரி தவிப்பாய் கைபிசைந்துகொண்டிருக்கிறார்.


பத்தாவதிலே ரஞ்சிதா மோகம்!



ஆசிரமத்தில் உள்ள சீடர்களிடமும், அடிக்கடி வந்து செல்லும் பக்தர்களிடமும் தனக்கு சிறுவயதிலிருந்தே ஆன்மீக உணர்வு அதிகம் என்றும் மற்ற சிறுவர்களிடமிருந்து வேறுபட்டே இருப்பேன் என்றும் நித்யானந்தா சொல்வது வழக்கம். அந்த வயதில் மற்றவர்களெல்லாம் என்ன செய்வார்களோ அதை நான் செய்ததில்லை. பக்தி படங்களைத்தவிர மற்ற சினிமாக்களைக்கூட பார்த்ததில்லை என்றும் சொல்வார். ஆனால், நித்யானந்தாவுடன் 6-வதிலிருந்து 10-வது வரை ஒரே பெஞ்ச்சில் ஒன்றாக உட்கார்ந்திருந்த அவரது நண்பர் திருவண்ணாமலை சிவக்குமார் சொல்லும் தகவல்கள் முற்றிலும் மாறுபட்டிருக்கின்றன.



""ஹைஸ்கூலில் படிக்கும்போதே ராஜசேகரனுக்கு (நித்யானந்தா) நடிகை ரஞ்சிதா மீது மோகம் உண்டு. பாரதிராஜா டைரக்ஷனில் ரஞ்சிதா அறிமுகமான "நாடோடித் தென்றல்' படம் ரிலீசானபோது திருவண்ணாமலையில் நித்யானந்தா 10-ம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தார். அந்தப் படத்தைப் பார்த்த உடனேயே ரஞ்சிதா மேலே அவருக்கு மோகம் வந்துவிட்டது. தன்னோட புத்தகப்பையில் சாமி படங்களோடு ரஞ்சிதா படத்தையும் வைத்திருப்பார். கேட்டால், ரஞ்சிதாவைக் காதலிக்கிறேன் என்பார். அதுதான் அவரோட முதல் காதல். அப்ப அது ரஞ்சிதாவுக்குத் தெரியாது. ஆனா, இப்ப தன் காதலின் நோக்கத்தை நிறைவேற்றி விட்டார்'' என்கிறார் சிவக்குமார்

No comments:

Post a Comment