Saturday, May 8, 2010

நித்யானந்தாவுடன் செக்ஸ் ஒப்பந்தம் போட்டவர்களுக்கு ஓர் அறிவிப்பு

shockan.blogspot.com
ஆசிரமத்தில் சேர விரும்பும் அனைவரையும் பாலியல் நடவடிக்கையில் ஈடுபட வலியுறுத்தி நித்யானந்தா கையெழுத்து வாங்கியுள்ள ஆவணங்கள் போலீசார் கையில் சிக்கியுள்ளன.


குறிப்பாக பிரம்மச்சரியம் என்கிற பெயரில் இளம்பெண்கள், இளைஞர்களிடையே அந்த கையெழுத்து வாங்கப்பட்டுள்ளது.


உடலுறவுக்கு ஆட்சேபம் தெரிவிக்கக்கூடாது. நிர்வாணப்படம், நிர்வாண நடனம் ஆகியவை ஏற்க வேண்டும். அப்படி ஏற்பவர்கள் மட்டுமே ஆசிரமத்தில் அனுமதிக்கப்படுவர் என்று அந்த ஆவணத்தில் உள்ளது.


நித்யானந்தா கட்டாய பாலுணர்வை விதித்தது சட்டப்படி குற்றம் என்று நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.


வழக்கறிஞர் சரவணன், ‘’சட்டத்திற்கு புறம்பான காரியத்தையோ, செய்ய முடியாத காரியத்தையோ யாரும் ஒப்பந்தம் போட முடியாது. ஆனால் இந்த ஒப்பந்தத்தை பார்க்கும் போது ஏதோ தவறான செய்கைக்காக இந்த ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கின்றதாக தெரிகிறது.



இந்த ஒப்பந்தங்கள் சட்டத்தின் முன் செல்லுபடி ஆகாது’’என்று தெரிவித்துள்ளார்.


இந்நிலையில், நித்யானந்தா மீதுள்ள நம்பிக்கையால் ஒப்பந்தத்தை படித்து பார்க்காமல் கையெழுத்து போட்டு பாதிக்கப்பட்டுள்ளவர்கள் புகார் தெரிவிக்கலாம் என்று கர்நாடக போலீசார் அறிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment