
shockan.blogspot.com
இந்திய கிரிக்கெட் அணியின் ஸ்பான்ஸர் செய்யும் உரிமையை சஹாரா பரிவார் பெற்றுள்ளது. இதில் கடைசி வரை மோதிய ஏர்டெல் போட்டியிலிருந்து வெளியேறியது.
ஒப்பந்தப்படி வரும் டிசம்பர் 31, 2013 வரை இந்திய கிரிக்கெட் அணிக்கு சஹாரா நிறுவனம் ஸ்பான்ஸர் செய்யும். இதன்படி ஒரு போட்டிக்கு ரூ 3.3 கோடி செலுத்தும் சஹாரா.
இந்திய அணிக்கு ஸ்பான்ஸர் செய்வதற்காக சஹாரா மற்றும் ஏர்டெல் நிறுவனங்கள் தங்கள் தகுதிச் சான்றிதழ், பாதுகாப்பு வைப்புத் தொகை போன்றவற்றை சனிக்கிழமை தாக்கல் செய்தன.
Read: In English
இவற்றைப் பரிசீலித்த பிசிசிஐ பாதுகாப்பு கமிட்டி, இறுதியாக சஹாராவை தேர்வு செய்துள்ளது. ஒருவேளை பார்தி ஏர்டெல் இதில் வெற்றி பெற்றிருந்தால், அதன் லோகோவை வீரர்கள் ஐசிசி போட்டிககளின் போது அணிந்திருக்க முடியாது.
காரணம் ஏற்கெனவே ரிலையன்ஸ் கம்யூனிகேன்ஸ் நிறுவனம் ஐசிசி ஸ்பான்ஸராக உள்ளே நுழைந்துள்ளது.
No comments:
Post a Comment