
shockan.blogspot.com
நடிகை ரஞ்சிதா இருக்கும் இடத்தை கர்நாடக சிஐடி போலீசாரிடம் தெரிவித்துள்ளார் நித்யானந்தா.
நித்யானந்தா கொடுத்த செல்போன் எண் மூலம் ரஞ்சிதாவிடம் கர்நாடக சிஐடி போலீசார் தொடர்பு கொண்டு பேசினர். அப்போது விசாரணைக்கு பெங்களூரு வருமாறு ரஞ்சிதாவுக்கு போலீசார் உத்தரவிட்டனர்.
இதையடுத்து இரண்டொரு நாளில் ரஞ்சிதா பெங்களூரு வந்து கர்நாடக சிஐடி போலீசாரிடம் ஒப்புதல் வாக்குமூலம் கொடுக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக இமாச்சலப் பிரதேசத்தில் பதுங்கியிருந்தபோது ரஞ்சிதாவுடன் நித்யானந்தா 174 முறை தொலைபேசி மூலம் பேசியுள்ளதாக கர்நாடக போலீசார் தெரிவித்தனர். ஆனால், அந்த எண்களை போலீசார் தொடர்பு கொண்டபோது அவரை சுவிட்ச் ஆப் செய்யப்பட்டிருந்தன.
இந்நிலையில் ரஞ்சிதாவின் வேறு ஒரு தொலைபேசி எண்ணை போலீசாரிடம் நித்யானந்தா தந்தார். அதன்மூலம் ரஞ்சிதாவிடம் போலீசார் பேசி விசாரணைக்காக பெங்களூர் சிஐடி அலுவலகத்தில் ஆஜராகுமாறு உத்தரவிட்டனர்.
அதேசமயம், ரஞ்சிதா தப்பி விடாமல் தடுப்ப்பதற்காக அவர் மறைந்துள்ள இடத்திற்கு போலீஸ் தனிப்படையும் விரைந்துள்ளதாகக் கூறப்படுகிறது.
No comments:
Post a Comment