
shockan.blogspot.com
பாரதிராஜா இயக்கிய கடல் பூக்கள் படத்தின் கதாநாயகியாக அறிமுகமானவர் சிந்து மேனன். அதைத்தொடர்ந்து சரத்குமார் நடித்த சமுத்திரம் என்ற படத்திலும் நடித்திருந்தார்.
நீண்ட இடைவெளிக்குப்பின் அவர் டைரக்டர் ஷங்கரின் சொந்த தயாரிப்பான `ஈரம்' படத்தின் கதாநாயகியாக நடித்தார். சிந்து மேனன், கேரளாவை சேர்ந்தவர். பெங்களூரில் பெற்றோருடன் வசித்து வருகிறார்.
இவருக்கும் லண்டனில் சாப்ட்வேர் என்ஜினீயராக பணிபுரியும் பிரபு என்பவருக்கும் இடையே காதல் மலர்ந்ததாகவும், இருவரும் போன் மூலமாகவும், கடிதங்கள் மூலமாகவும் காதலித்து வந்ததாகவும் கூறப்பட்டது.
இந்தநிலையில் சிந்துமேனனும், பிரபுவும் பெங்களூரில் திடீரென்று திருமணம் செய்து கொண்டதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
ஆனால் இந்த செய்தியை சிந்துமேனனோ, அவரது பெற்றோரோ உறுதி செய்யவில்லை.
No comments:
Post a Comment