
பெங்களூரு : நடிகை ரஞ்சிதாவிற்கு பாதுகாப்பு அளித்தால் நேரில் வந்து தகவல்கள் தெரிவிக்க தயாராக இருப்பதாக அவரது தாயார் தெரிவித்துள்ளார்.
நித்யானந்தா விவகாரம் தொடர்பாக ரஞ்சிதாவிடம் தகவல்கள் பெற போலீசார் தீவிர முயற்சிகள் மேற்கொண்டுள்ளனர். இந்நிலையில், அவரது தாயார் பெங்களூரு சிஐடி போலீசாரிடம் இன்று தொலைபேசி மூலமாகத் தொடர்பு கொண்டு பேசினார். ரஞ்சிதாவிற்கு உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் அளிக்கப்பட்டால், நித்யானந்தா பற்றிய அனைத்து விவரங்களையும் நேரில் வந்து தெரிவிக்க தயாராக இருப்பதாக அப்போது அவர் தெரிவித்தார். ரஞ்சிதாவிற்கு அனைத்து பாதுகாப்பும் அளிக்கப்படும் என்று போலீசார் உறுதி அளித்தனர். இதனையடுத்து, ரஞ்சிதா எந்நேரத்திலும் பெங்களூருக்கு வரக்கூடும் என்பதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
No comments:
Post a Comment